இட ஒதுக்கீட்டின் பயன்கள் அனைத்துப் பிரிவினருக்கும் விகிதாச்சாரப்படி கிடைப்பதை உறுதி செய்வதற்கு தமிழகத்தில் ஜாதி வாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பை அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் ஜாதி வாரியான தற்போதைய நிலவரப்படி புள்ளிவிவரங்களைச் சேகரிக்கும் வழிமுறைகளை ஆராய்ந்து, அதன் அடிப்படையில் உரிய தரவுகளை சேகரித்து அறிக்கை சமர்ப்பிக்க அதற்கென பிரத்யேக ஆணையம் ஒன்று அமைக்கப்படுமென தமிழக அரசு அறிவித்துள்ளது. முதல்வர் எடப்பாடி கா பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், '' முன்னாள் முதல்வர் ஜெ. ஜெயலலிதா தமிழ்நாட்டில் 69 சதவீத இட ஒதுக்கீட்டிற்கு அரசியலமைப்புச் சட்ட பாதுகாப்பினை பெற்று தந்து, தமிழ்நாட்டின் சமூகநீதி வரலாற்றில் நீங்கா இடம் பிடித்து சமூக நீதி காத்த வீராங்கனை என்று அனைவராலும் போற்றப்படுகிறார்.தமிழ்நாட்டில் பல்வேறு அரசியல் கட்சிகளும், சமுதாய அமைப்புகளும் ஜாதி வாரியான கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என பல்வேறு காலகட்டடங்களில் கோரிக்கைகளை வைத்து வருகின்றனர் அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதன் பயன் அனைத்து பிரிவினருக்கும் சென்றடைவதை அரசு உறுதிப்படுத்த வேண்டியுள்ளது. இதர பிற்பட்ட வகுப்பு
மேலும், 69 சதவீத இட ஒதுக்கீடு சம்பந்தமான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ளதை எதிர்கொள்ள இத்தகைய புள்ளி விபரங்கள் தேவைப்படுகின்றன. இக்கோரிக்கைகளை நிறைவேற்ற தற்போதைய காலகட்டத்தில் உள்ள ஜாதிவாரியாக அளவிடக்கூடிய முழுமையான புள்ளி விவரங்கள் அவசியம் தேவைப்படுகிறது.
எனவே, தமிழ்நாடு முழுவதும் ஜாதிய அடிப்படையிலான புள்ளி விவரத்தை சேகரிப்பதால் மட்டுமே முழு தகவல் கிடைக்கப் பெரும். ஜாதி வாரியான தற்போதைய நிலவரப்படி புள்ளிவிவரங்களை சேகரிக்கும் வழிமுறைகளை ஆராய்ந்து, அதன் அடிப்படையில் உரிய தரவுகளை சேகரித்து, அறிக்கை சமர்ப்பிக்க அதற்கென பிரத்யேக ஆணையம் ஒன்று அமைக்கப்படும்'' என இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
கருத்துகள்