திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தொகுதி வடமதுரையில் தேர்தலின் பரப்புரையில் பொதுமக்களிடையே மு.க.ஸ்டாலின்
பேசுகையில். "நான் "உங்கள் தொகுதியில் ஸ்டாலின்" என்ற தலைப்பில் தமிழ்நாட்டில் இருக்கும் ஒவ்வொரு தொகுதியாகச் சென்று, அந்தத் தொகுதியிலிருக்கும் மக்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதற்கான ஒரு திட்டத்தை அறிவித்தேன்.
வரவிருக்கும் தேர்தலில் நாம்தான் ஆட்சிக்கு வரப் போகிறோம். அதில் எந்தச் சந்தேகமும் இல்லை. அது உறுதி. ஆட்சிக்கு வந்த அடுத்த நாளிலிருந்து 100 நாட்களில் மக்கள் பிரச்சினைகளை உடனடியாகத் தீர்த்து வைப்போம் என்று சொல்லி அந்தத் திட்டத்தை நான் அறிவித்தேன். அந்தத் திட்டம் இன்றைக்கு மக்களின் மனதில் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது; நம்பிக்கையை வழங்கி உள்ளது. இதனால்
ஆத்திரமடைந்த முதல்வர் பழனிசாமி, நேற்றைக்குத் தன்னுடைய பிரச்சாரத்தில், 100 நாட்களில் பிரச்சினையை ஸ்டாலின் தீர்ப்பேன் என்று சொல்கிறார். அது நடக்காது முடியாது - யாரும் நம்பாதீர்கள் என்று சொல்லியிருக்கிறார். அதை எவ்வாறு செய்ய முடியும் என்று கேள்விகள் எழுப்பியிருக்கிறார்.
கரெப்ஷன்
இதைப் பற்றி எல்லாம் அவருக்குத் தெரியவே தெரியாது. அவருக்கு எங்கே சதவிகிதம் வாங்கலாம்? எங்கே ஊழல் செய்யலாம்? எங்கே கமிஷன் பெறலாம்? என்பது தான் அவருடைய தொழில் கமிஷன், கரெப்ஷன், கலெக்ஷன். இது மட்டுமே.
நத்தம் தொகுதியில் நம்மை எதிர்த்துப் போட்டியிடும் அதிமுகவின் வேட்பாளர் நத்தம் விஸ்வநாதனைப் பற்றி நான் அதிகம் உங்களுக்குச் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. நேற்று கூட, பணப் பட்டுவாடா செய்ததாக அவர் மேல் ஒரு வழக்கு பதிவு செய்ப்பட்டு உள்ளது. எனவே, பணப் பட்டுவாடா எந்த அளவுக்கு அவர் செய்வார் - செய்து கொண்டிருக்கிறார் என்பது எல்லோருக்கும் நன்கு தெரியும் என்றார்.
கருத்துகள்