முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தமிழக சட்டசபை எதிர்க்கட்சித் தலைவராக முன்னாள் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தேர்வு

















தமிழக சட்டசபை எதிர்க்கட்சித் தலைவராக முன்னாள் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தேர்வு







செய்யப்பட்டுள்ளார். ஆனால் எடப்பாடி கே பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதை ஏற்க மறுத்து அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் இருந்து முன்னாள் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் அதிருப்தியில் வெளியேறியதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.      அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு முன்னாள் சபாநாயகர் தனபால் பெயரை ஓ.பன்னீர்செல்வம் அணி முன்மொழிந்தது. இதனால் அதிர்ச்சியில்  ஈபிஎஸ் அணி தன்னிச்சையாகவே எடப்பாடி கே.பழனிசாமி தான் எதிர்க்கட்சித் தலைவர் என முடிவு செய்து அறிவித்ததாக அதிமுக பிரமுகர்கள் தெரிவிக்கின்றனர்.

சென்னை ராயப்பேட்டையில் அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் நடைபெற்ற போது ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவருமே எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு மல்லுக்கட்டி அதனால் எந்த முடிவும் எடுக்காமல் அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

எதிர்க்கட்சித் தலைவரை தேர்வு செய்வதில் குழப்பம்... இன்று மீண்டும் அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் இதனைத் தொடர்ந்து சென்னையில் இரண்டாம் முறையாக இன்றும் எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டம் தொடங்கும் முன்னரே ஈபிஎஸ், ஓபிஎஸ் ஆதரவாளர்கள் அதிமுக தலைமை அலுவலகத்தில் போட்டிக் கோஷங்களை எழுப்பிக் கொண்டு மோதிக் கொண்டனர். இதனால் அங்கு காவல்துறை குவிக்கப்பட்டது.

இன்றைய எம்.எல்.ஏக்கள் கூட்டத்திலும் ஓபிஎஸ், ஈபிஎஸ் தரப்பு, எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு விடாப்பிடியாக நின்றது. ஒருகட்டத்தில் ஓபிஎஸ் தரப்பு அதிரடியாக, இருவருக்குமே வேண்டாம். முன்னாள் சபாநாயகரான தனபாலை எதிர்க்கட்சித் தலைவராக்குவோம் என முன்மொழிந்தது. இதனை சற்றும் எதிர்பாராத ஈபிஎஸ் தரப்பு ஆடிப் போனது. ஈபிஎஸ் அணி திடீர் திணறல் மாஜி சபாநாயகர் தனபால், ஆதிதிராவிடர்  சமூகத்தைச் சேர்ந்த தலைவர். அவரை முன்னிறுத்துவதன் மூலம் ஆதிதிராவிடர் எம்.எல்.ஏக்கள் ஆதரவும் மக்கள் மத்தியில் தமக்கான அங்கீகாரமும் அதிகரிக்கும் என்பது ஓபிஎஸ் போட்ட ஸ்கெட்ச். ஓபிஎஸ்-ன் இந்தத் திட்டத்தை உடனே ஏற்க முடியாமல் ஈபிஎஸ் தரப்பு திணறியது. ஈபிஎஸ் அணிக்கு நெருக்கடி  ஏனெனில் ஈபிஎஸ் தரப்பு எம்.எல்.ஏக்கள் பெரும்பாலும் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களால் ஒரு ஆதிதிராவிடர் தலைவரை எதிர்க்கட்சித் தலைவராக ஏற்றுக் கொள்ள முடியாத நெருக்கடி நிலை. ஓபிஎஸ் விரித்த வலையில் ஈபிஎஸ் அணி விழுந்து தான் ஆக வேண்டிய நெருக்கடி உருவானதனையடுத்து ஈபிஎஸ் அணியினர் தன்னிச்சையாகவே, எடப்பாடி கே.பழனிசாமிதான் எதிர்க்கட்சித் தலைவர் என முடிவு செய்து அறிவித்தனர். இதில் கடும் அதிருப்தி அடைந்த ஓபிஎஸ், எம்.எல்.ஏக்கள் கூட்டத்தை விட்டு வெளியேறினார். ஓபிஎஸ் ஆதரவாளர்கள் அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பாக ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

அதிமுகவில் 65 எம்.எல்.ஏக்கள் உள்ள நிலையில் இன்று நடந்த கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர், கொறடா போன்றவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது   அ திமுகவில் எம்.எல்.ஏ. கூட்டத்தில் பங்கேற்க அதிமுக முக்கிய நிர்வாகிகள், எம்.எல்ஏக்கள்  அதிமுக தலைமையகத்திற்கு வந்த போது கட்சிக்கு ''ஒற்றைத் தலைமை வேண்டும்'' என துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி  ஒருங்கிணைப்பாளர்       ஓ. பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் மத்தியில் முன் தினம் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் தற்பொழுது வேலுமணி, தங்கமணி, கே.பி.முனுசாமி, வளர்மதி, நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் தனியாக ஆலோசனை நடத்திய  தகவல்கள் வெளியாகியுள்ளது. சூழ்ச்சி அஸ்திரங்களை பிரயோகிக்கும் ஓ.பன்னீர்செல்வம் தனது கருத்தை இடஒதுக்கீடு என்ற அறிவிப்பை எடப்பாடி கே.பழனிச்சாமி செய்தகாரணமே தென்மாவட்டத்தில் உள்ள கட்சியின் அவர்களின் செல்வாக்கை குறைத்து எடப்பாடி தனி ஆளுமையாக தன்னை நிலை நிறுத்தத்தான்  என்பதால் அதிமுக தோல்வி திமுக வெற்றி என்றார் அவர் முன்பே அறிந்ததுதான்.

மற்றொரு தகவல் ஓபன்னீர்செல்வத்தைத்   தோற்க்கடிக்க  முயற்சி தனக்கு அரசியல் போட்டியாக ஓபிஸ் வாராது போக மறைமுகமாக முயற்சி தோல்வி தற்போது இனிபொதுச்செயலாளர் என்பது தான் எடப்பாடியாரின் இலக்கு. அதனால் போட்டியாளர் ஓபிஎஸ்சை வீழ்த்த பல சூழ்ச்சி அஸ்திரங்களை இனி பிரயோகிப்பார் எடப்பாடி இட ஒதுக்கீடு என்ற அறிவிப்பை எடப்பாடியார் செய்தகாரணமே தென்மாவட்டத்தில் ஓபிஸ் அவர்களின் செல்வாக்கை குறைத்து எடப்பாடி தனி ஆளுமையாக தன்னை நிலைநிறுத்ததான் என்று தகவல். அதிமுக எம்.எல்.ஏ. கூட்டத்தில் பங்கேற்க அதிமுக முக்கிய நிர்வாகிகள், எம்.எல்ஏக்கள்  அதிமுக தலைமையகத்திற்கு வந்த போது கட்சிக்கு ''ஒற்றைத் தலைமை வேண்டும்'' என எடப்பாடி கே.பழனிச்சாமி  ஓ. பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் மத்தியில்

சூழ்ச்சி அஸ்திரங்களை பிரயோகிக்கும் ஓ.பன்னீர்செல்வம்

இட ஒதுக்கீடு என்ற அறிவிப்பை எடப்பாடி கே.பழனிச்சாமி செய்தகாரணமே தென்மாவட்டத்தில் உள்ள கட்சியின் அவர்களின் செல்வாக்கை குறைத்து

அதிமுக தோல்வி திமுக வெற்றி அவர் முன்பே அறிந்ததுதான்.கட்சியின் ஒருங்கிணைப்பாளர் போட்டோவை ஒரு கும்பல் செருப்பால் அடிக்கும் போது.

.மற்றோரு கும்பல்.. எதிர்க்கட்சி தலைவர் வாழ்க என்று கோஷம் போட்டு கொண்டிருக்கும் போதும். அது இன்னமும் எல்லோருக்காமான கட்சி.. என்று நம்பி கொண்டிருந்தால் அவர்கள் தவிர மற்ற யாரும் ஏமாளிகளுமில்லை.. அதிமுக எனும் கட்சி ஒரு தரப்பிடம் போய் விட்டது.இன்னமும் அமமுகவினர் அதிமுக கட்சி வரும்.. மீட்போம் என்று  நம்பிக் கொண்டிருப்பது எவ்வளவு சரி என்று தெரியவில்லை.. 

எதாவது தெளிவான முடிவு இல்லை என்றால் தென் மாவட்டங்களில் அவர்கள் வளர்ச்சி என்பது கடினம் தான்.

.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அமலாக்கத்துறை தற்காலிகமாக முடக்கிய நியோ மேக்ஸின் சில சொத்துகள்

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பல்லாயிரம் கோடிகள் பணத்தை முதலீடு செய்தனர். அதில் அரசுப்பணியில் பல்வேறு துறைகளில் இருந்து கொண்டு வருமான வரி செலுத்தாமல் முறைகேடு செய்து தவறான வழியில் லஞ்சமாக வாங்கிய இரகசியப் பணத்தையுடைய நபர்கள் செய்த முதலீட்டு கருப்புப் பணமும் அதில் அடங்கும், மேலும் அவர்கள் நிலை என்பது திருடனுக்குத் தேள் கொட்டிய நிலை போல புகார் கொடுத்து மேலும் மாட்டிக் கொள்ள அவர்கள் விரும்பவில்லை, அது ஒரு பெரிய பட்டியல் நீள்கிறது அதுவும் ED நன்கு அறியும். ஆகவே அவர்கள் தங்களை தங்கள் தற்காலிக செல்வாக்கைப் பயன்படுத்தி திரைமறைவில் மேற்கண்ட ஜாமீனில் வெளிவந்த குற்றவாளிகள் மூலம் பேரமும்,  கட்டப்பஞ்சாயத்தும் நடத்தி இரகசிய வழியாக பணம் அல்லது அவர்கள் வேறு பினாமி மூலம் வாங்கிய நிலையில் அதை பொருளாதாரக் குற்றப்பிரிவு இதுவரை புலனாய்வு செய்து கைப்பற்றாமல் உள்ள இரகசியமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மூலம் பணத்தை திரும்ப பெறுவதற்கு அந்த இலஞ்ச ஊழல் கருப்புப்பண முதலைகள் ஒரு பக்கம் இரகசிய வழியாக முயலும் நிலையில் அதை பொருளாதார குற்றப்பிரிவு கண்டும் காணாமல் தான் இதுவரை செயல்பட்ட நிலைய...