தமிழக சட்டசபை எதிர்க்கட்சித் தலைவராக முன்னாள் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தேர்வு
செய்யப்பட்டுள்ளார். ஆனால் எடப்பாடி கே பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதை ஏற்க மறுத்து அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் இருந்து முன்னாள் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் அதிருப்தியில் வெளியேறியதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு முன்னாள் சபாநாயகர் தனபால் பெயரை ஓ.பன்னீர்செல்வம் அணி முன்மொழிந்தது. இதனால் அதிர்ச்சியில் ஈபிஎஸ் அணி தன்னிச்சையாகவே எடப்பாடி கே.பழனிசாமி தான் எதிர்க்கட்சித் தலைவர் என முடிவு செய்து அறிவித்ததாக அதிமுக பிரமுகர்கள் தெரிவிக்கின்றனர்.
சென்னை ராயப்பேட்டையில் அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் நடைபெற்ற போது ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவருமே எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு மல்லுக்கட்டி அதனால் எந்த முடிவும் எடுக்காமல் அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
எதிர்க்கட்சித் தலைவரை தேர்வு செய்வதில் குழப்பம்... இன்று மீண்டும் அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் இதனைத் தொடர்ந்து சென்னையில் இரண்டாம் முறையாக இன்றும் எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டம் தொடங்கும் முன்னரே ஈபிஎஸ், ஓபிஎஸ் ஆதரவாளர்கள் அதிமுக தலைமை அலுவலகத்தில் போட்டிக் கோஷங்களை எழுப்பிக் கொண்டு மோதிக் கொண்டனர். இதனால் அங்கு காவல்துறை குவிக்கப்பட்டது.
இன்றைய எம்.எல்.ஏக்கள் கூட்டத்திலும் ஓபிஎஸ், ஈபிஎஸ் தரப்பு, எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு விடாப்பிடியாக நின்றது. ஒருகட்டத்தில் ஓபிஎஸ் தரப்பு அதிரடியாக, இருவருக்குமே வேண்டாம். முன்னாள் சபாநாயகரான தனபாலை எதிர்க்கட்சித் தலைவராக்குவோம் என முன்மொழிந்தது. இதனை சற்றும் எதிர்பாராத ஈபிஎஸ் தரப்பு ஆடிப் போனது. ஈபிஎஸ் அணி திடீர் திணறல் மாஜி சபாநாயகர் தனபால், ஆதிதிராவிடர் சமூகத்தைச் சேர்ந்த தலைவர். அவரை முன்னிறுத்துவதன் மூலம் ஆதிதிராவிடர் எம்.எல்.ஏக்கள் ஆதரவும் மக்கள் மத்தியில் தமக்கான அங்கீகாரமும் அதிகரிக்கும் என்பது ஓபிஎஸ் போட்ட ஸ்கெட்ச். ஓபிஎஸ்-ன் இந்தத் திட்டத்தை உடனே ஏற்க முடியாமல் ஈபிஎஸ் தரப்பு திணறியது. ஈபிஎஸ் அணிக்கு நெருக்கடி ஏனெனில் ஈபிஎஸ் தரப்பு எம்.எல்.ஏக்கள் பெரும்பாலும் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களால் ஒரு ஆதிதிராவிடர் தலைவரை எதிர்க்கட்சித் தலைவராக ஏற்றுக் கொள்ள முடியாத நெருக்கடி நிலை. ஓபிஎஸ் விரித்த வலையில் ஈபிஎஸ் அணி விழுந்து தான் ஆக வேண்டிய நெருக்கடி உருவானதனையடுத்து ஈபிஎஸ் அணியினர் தன்னிச்சையாகவே, எடப்பாடி கே.பழனிசாமிதான் எதிர்க்கட்சித் தலைவர் என முடிவு செய்து அறிவித்தனர். இதில் கடும் அதிருப்தி அடைந்த ஓபிஎஸ், எம்.எல்.ஏக்கள் கூட்டத்தை விட்டு வெளியேறினார். ஓபிஎஸ் ஆதரவாளர்கள் அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பாக ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
அதிமுகவில் 65 எம்.எல்.ஏக்கள் உள்ள நிலையில் இன்று நடந்த கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர், கொறடா போன்றவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது அ திமுகவில் எம்.எல்.ஏ. கூட்டத்தில் பங்கேற்க அதிமுக முக்கிய நிர்வாகிகள், எம்.எல்ஏக்கள் அதிமுக தலைமையகத்திற்கு வந்த போது கட்சிக்கு ''ஒற்றைத் தலைமை வேண்டும்'' என துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் மத்தியில் முன் தினம் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் தற்பொழுது வேலுமணி, தங்கமணி, கே.பி.முனுசாமி, வளர்மதி, நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் தனியாக ஆலோசனை நடத்திய தகவல்கள் வெளியாகியுள்ளது. சூழ்ச்சி அஸ்திரங்களை பிரயோகிக்கும் ஓ.பன்னீர்செல்வம் தனது கருத்தை இடஒதுக்கீடு என்ற அறிவிப்பை எடப்பாடி கே.பழனிச்சாமி செய்தகாரணமே தென்மாவட்டத்தில் உள்ள கட்சியின் அவர்களின் செல்வாக்கை குறைத்து எடப்பாடி தனி ஆளுமையாக தன்னை நிலை நிறுத்தத்தான் என்பதால் அதிமுக தோல்வி திமுக வெற்றி என்றார் அவர் முன்பே அறிந்ததுதான்.
மற்றொரு தகவல் ஓபன்னீர்செல்வத்தைத் தோற்க்கடிக்க முயற்சி தனக்கு அரசியல் போட்டியாக ஓபிஸ் வாராது போக மறைமுகமாக முயற்சி தோல்வி தற்போது இனிபொதுச்செயலாளர் என்பது தான் எடப்பாடியாரின் இலக்கு. அதனால் போட்டியாளர் ஓபிஎஸ்சை வீழ்த்த பல சூழ்ச்சி அஸ்திரங்களை இனி பிரயோகிப்பார் எடப்பாடி இட ஒதுக்கீடு என்ற அறிவிப்பை எடப்பாடியார் செய்தகாரணமே தென்மாவட்டத்தில் ஓபிஸ் அவர்களின் செல்வாக்கை குறைத்து எடப்பாடி தனி ஆளுமையாக தன்னை நிலைநிறுத்ததான் என்று தகவல். அதிமுக எம்.எல்.ஏ. கூட்டத்தில் பங்கேற்க அதிமுக முக்கிய நிர்வாகிகள், எம்.எல்ஏக்கள் அதிமுக தலைமையகத்திற்கு வந்த போது கட்சிக்கு ''ஒற்றைத் தலைமை வேண்டும்'' என எடப்பாடி கே.பழனிச்சாமி ஓ. பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் மத்தியில்
சூழ்ச்சி அஸ்திரங்களை பிரயோகிக்கும் ஓ.பன்னீர்செல்வம்
இட ஒதுக்கீடு என்ற அறிவிப்பை எடப்பாடி கே.பழனிச்சாமி செய்தகாரணமே தென்மாவட்டத்தில் உள்ள கட்சியின் அவர்களின் செல்வாக்கை குறைத்து
அதிமுக தோல்வி திமுக வெற்றி அவர் முன்பே அறிந்ததுதான்.கட்சியின் ஒருங்கிணைப்பாளர் போட்டோவை ஒரு கும்பல் செருப்பால் அடிக்கும் போது.
.மற்றோரு கும்பல்.. எதிர்க்கட்சி தலைவர் வாழ்க என்று கோஷம் போட்டு கொண்டிருக்கும் போதும். அது இன்னமும் எல்லோருக்காமான கட்சி.. என்று நம்பி கொண்டிருந்தால் அவர்கள் தவிர மற்ற யாரும் ஏமாளிகளுமில்லை.. அதிமுக எனும் கட்சி ஒரு தரப்பிடம் போய் விட்டது.இன்னமும் அமமுகவினர் அதிமுக கட்சி வரும்.. மீட்போம் என்று நம்பிக் கொண்டிருப்பது எவ்வளவு சரி என்று தெரியவில்லை..
எதாவது தெளிவான முடிவு இல்லை என்றால் தென் மாவட்டங்களில் அவர்கள் வளர்ச்சி என்பது கடினம் தான்.
.
கருத்துகள்