ஓஎன்வி விருதுக்குத் தேர்வு செய்யப்பட்ட 'கவிப்பேரரசு' திரு. வைரமுத்துவுக்கு வாழ்த்தும் கோவில் தடுப்புக்கு தன்னார்வலர்களுக்கு அழைப்பும் விடுத்த முதல்வர்
கேரளாவின் புகழ்பெற்ற ஓஎன்வி விருதுக்குத் தேர்வு செய்யப்பட்ட 'கவிப்பேரரசு' திரு. வைரமுத்து
அவர்களை, முத்தமிழறிஞர் கலைஞரின் கோபாலபுரம் இல்லத்தில் முதல்வர் வாழ்த்தினார்.
தமிழுக்குப் பெருமை சேர்த்திடும் கவிப்பேரரசுவின் இலக்கியப் பயணம், எல்லைகளைக் கடந்து உலகளாவிய விருதுகளையும் பெற்றுத் தொடரட்டுமென் வாழ்த்தினார் செங்கல்பட்டில் ரூபாய். 700 கோடி முதலீட்டில் தொடங்கப்பட்டு செயல்படாமல் இருக்கும் நிறுவனத்தை தமிழக அரசுக்கு குத்தகைக்கு வழங்கும்படி பிரதமர் அவர்களுக்கு கடிதம் எழுதியதுடன்.
தமிழகத்திற்கு தேவையான கோவிட்-19 தடுப்பூசி தயாரிக்கும் பணிகளை தமிழக அரசு உடனடியாக மேற்கொள்ளும் எனவும். மேலும் தமிழகத்தில் கோவிட்-19 பணியில் ஈடுபட விரும்பும் நிறுவனங்கள், தனிநபர்கள்
https://ucc.uhcitp.in/ngoregistration என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.
8754491300 என்ற எண் வாயிலாகவும்
tnngocoordination@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமாகவும் மாநில ஒருங்கிணைப்புக்குழுவைத் தொடர்பு கொள்ளலாம்.
https://www.facebook.com/tnngocoordination/ என்ற முகநூல் பக்கமும் தொடங்கப்பட்டிருக்கிறது. கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், திருச்சி மற்றும் மதுரை மாவட்டங்களில் இன்னமும் கோவிட்-19 பரவலின் வேகம் குறையவில்லை.
இம்மாவட்ட அதிகாரிகளிடம் காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தி; முனைப்புடன் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தியதுடன்.
தேவையான அனைத்து உதவிகளையும் அரசு செய்யும் என தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார்.
கருத்துகள்