தமிழ்நாட்டில் 39 இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகள்பணியிட மாற்றம் செய்து அரசு உத்தரவு.
மாவட்ட ஆட்சியர் பொறுப்பிலிருந்து மாற்றப்பட்டவர்களுக்குப் புதிய பணியிடங்களை அறிவித்துள்ளது. அதன்படி,
திண்டுக்கல் ஆட்சியராக இருந்த விஜயலெட்சுமி, மீன்வளம் மற்றும் பால்வளத்துறை இணை செயலாளராக நியமனம்.
செங்கல்பட்டு ஆட்சியராக இருந்த ஜான் லூயிஸ் உள்துறை இணைச் செயலராக நியமனம்.
நாமக்கல் ஆட்சியராக இருந்த மேக்ராஜ், நகராட்சி நிர்வாக இணை இயக்குனராக நியமனம்.
திருப்பூர் ஆட்சியராக இருந்த விஜயகார்த்திகேயன், மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் செயலாளராக நியமனம்.
திருவாரூர் ஆட்சியராக இருந்த சாந்தா, நில நிர்வாக கூடுதல் ஆணையராக நியமனம்.
கரூர் ஆட்சியராக இருந்த பிரசாந்த் மு.வடநேரே, நிதித்துறை கூடுதல் செயலாளராக நியமனம். மீன்வளத்துறை ஆணையராக கருணாகரன் நியமனம்.
நில சீர்த்திருத்தத்துறை இயக்குனராக ஜெயந்தி நியமனம்.
வணிக வரித்துறை இணை ஆணையராக கற்பகம் நியமனம். போக்குவரத்து துறை ஆணையராக சந்தோஷ் கே.மிஸ்ரா நியமனம்
தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் செயலாளராக சுந்தரவள்ளி நியமனம்.
பத்திரப் பதிவுத்துறை தலைவராக இருந்த ஷங்கர், தமிழ்நாடு காதி, கிராமத் தொழில் வாரியத்தின் தலைமை செயல் அதிகாரியாக நியமனம்.
விவசாயிகள் நலத்துறை சிறப்புச் செயலாளராக ஆபிரகாம் உள்ளிட்ட
மொத்தம் 39 இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகளுக்கு புதிய பணியிடங்களில் மாற்றங்கள் வெளியிட்டு தமிழ்நாடு அரசு உத்தரவு.
கருத்துகள்