பிரதமர் அலுவலகம் திரு டிங்கோ சிங்கின் மறைவிற்கு பிரதமர் இரங்கல்
குத்துச் சண்டை வீரர் திரு டிங்கோ சிங்கின் மறைவிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
பிரதமர் திரு.மோடி வெளியிட்டுள்ள சுட்டுரைச் செய்தியில் தெரிவித்துள்ளதாவது:
“திரு டிங்கோ சிங், தலைசிறந்த விளையாட்டு வீரராகவும், ஏராளமான வெற்றிகளைக் குவித்த முன்னணி குத்துச்சண்டை வீரராகவும் திகழ்ந்தார். குத்துச் சண்டை மேலும் பிரபலமடைவதற்கு, அவரது பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. அன்னாரது மறைவினால் துயரடைந்தேன். அவரது குடும்பத்தினர் மற்றும் ரசிகர்களுக்கு இரங்கல்கள். ஓம் சாந்தி!”.
மேலும்.
திரு புத்ததேவ் தாஸ்குப்தாவின் மறைவிற்கு பிரதமர் இரங்கல்
திரைப்பட இயக்குநர், சிந்தனையாளர் மற்றும் திரு நரேந்திர மோடி தமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பான சுட்டுரைச் செய்தியில், “திரு புத்ததேவ் தாஸ்குப்தா
வின் மறைவை அறிந்து மிகவும் வேதனை அடைந்தேன். அவரது பன்முகத் தன்மை வாய்ந்த படைப்புகள் சமுதாயத்தின் அனைத்துப் பிரிவினரிடமும் தாக்கத்தை ஏற்படுத்தின. அவர், புகழ்பெற்ற சிந்தனையாளராகவும், கவிஞராகவும் திகழ்ந்தார். இந்த சோகமான தருணத்தில் அன்னாரது குடும்பத்தினருக்கும், ஏராளமான ரசிகர்களுக்கும் எனது இரங்கல்கள். ஓம் சாந்தி!”, என்று பிரதமர் கூறியுள்ளார்
கருத்துகள்