முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

உலக பல்கலைக்கழக தரவரிசையில் புதுவை பல்கலைக்கழகம் முக்கிய இடம் பிடித்துள்ளது

 QS உலக பல்கலைக்கழக தரவரிசையில் புதுவை பல்கலைக்கழகம் முக்கிய இடம் பிடித்துள்ளது




QS உலக பல்கலைக்கழக தரவரிசையானது, பல்கலைக்கழகத்தின்  பல முக்கிய பணிகள் - கல்வியாண்டு தேர்ச்சி  விகிதம்/நற்பெயர், பல்கலைக்கழகத்தின் தலைமையின் அணுகுமுறை/அர்ப்பணிப்பு, ஆசிரிய மாணவர் விகிதம், ஆராய்ச்சி கட்டுரைகள், சர்வதேச ஆசிரியர்கள் விகிதம் மற்றும் சர்வதேச மாணவர்கள் விகிதம் போன்ற ஆறு கடுமையான செயல்திறன் குறிகாட்டிகளுடன் தரவரிசை பட்டியல் 2022 சமீபத்தில் வெளியிட்டது

இதில் புதுவை பல்கலைக்கழகம்  801 முதல் 1000 வகைகளுக்கு (category) இடையில் தரவரிசை பெற்ற உலகின் முதல் 1000 பல்கலைக்கழகங்களில் இடம்பெற்றுள்ளது. இந்தியாவிலிருந்து தரவரிசைப் பட்டியலில் உள்ள இந்திய பல்கலைக்கழகங்கள் / நிறுவனங்களில் முதல் 20 இடங்களில் புதுவை பல்கலைக்கழகம் இடம்பெற்றுள்ளது. QS உலக பல்கலைக்கழக இடையிலான தரவரிசையில் புதுவைபல்கலைக்கழகம் இடம் பெற்று வரலாற்று சாதனை பெற்றுள்ளது, மேலும் புதுவை பல்கலைக்கழகம் பங்கேற்கும் இந்திய மற்றும் ஆசிய பல்கலைக்கழக தரவரிசையில் தொடர்ந்து இடம்பெற்று முன்னேறிக்கொண்டேவுள்ளது.  QS உலக பல்கலைக்கழக தரவரிசையில் 2022 இல் 22  பல்கலைக்கழகங்கள் மற்றும் நிறுவனங்கள் மட்டுமே இந்திய அளவில்  இடம்பெற முடிந்தது .  இதில் புதுவை பல்கலைக்கழகம் ஆராய்ச்சி, கற்பித்தல், அர்ப்பணிப்பு, ஆசிரியர்களின் ஆராய்ச்சி கட்டுரை  போன்ற செயல்திறன் குறிகாட்டிகளில்  மிகச் சிறந்த  மதிப்பெண் பெற்று சாதனை பெற்றுள்ளது.

QS உலக பல்கலைக்கழக தரவரிசையானது 2014 முதல் அதன் தரவரிசையை அறிமுகப்படுத்தி வெளியிட்டு வருகிறது இதில் புதுவை  பல்கலைக்கழகம் 2018 முதல் பங்கேற்று வருகிறது. முன்னதாக  புதுவை பல்கலைக்கழகம் QS ஆசியா தரவரிசையில் 301-350 வகைபிரிவிலும்  மற்றும் பிரிக்ஸ் பல்கலைக்க தரவரிசையில் 211-220 வகைபிரிவிலும் கடந்த நான்கு ஆண்டுகளாக தொடர்ந்து வெற்றிகரமாக  தரவரிசையில்  இடம்பிடித்தது வருகிறது.

மேலும் புதுவை  பல்கலைக்கழகம் மற்ற மதிப்புமிக்க உலக தரவரிசைகளான Times Higher Education (THE) உலக  பல்கலைக்கழக தரவரிசை, Association of Common Wealth(ACU) பல்கலைக்கழக தரவரிசை, தேசிய தரவரிசைகளான National Institutional Ranking Framework (NIRF) தரவரிசை, Atal Ranking of Institutions on Innovation Achievements (ARIIA) தரவரிசை, Outlook-ICARE இந்தியா பல்கலைக்கழக தரவரிசை மற்றும் பிற தொழில்துறை நிதியுதவி தரவரிசை போன்ற பல்வேறு தரவரிசைகளிலும் தொடர்ந்து பங்கேற்று வருகிறது. உலகளவில் புதுவை பல்கலைக்கழகத்தின் தரத்தினை உயர்த்தும் நோக்கத்தில் தொடர்ந்து பல்வேறு தரவரிசையில் பங்கேற்று வருகிறது

இத்தகைய சாதனையை படைக்க உறுதுணையாக இருந்த ஆசிரியர்கள், ஆராய்ச்சி அறிஞர்கள், அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் மாணவர்களுக்கு புதுவைப் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் குர்மீத் சிங் அவர்கள் நன்றி தெரிவித்துக்கொண்டார். மேலும், ஆராய்ச்சி அறிஞர்கள் மற்றும் மாணவர்களுக்கு சிறந்த கல்வி ஆர்வத்தை வழங்கும்  ஆசிரியர்கள், அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் அர்ப்பணிப்பு பங்களிப்புடன் வரும் ஆண்டுகளில் பல்கலைக்கழகம் அதிக உயரங்களை எட்ட முனைப்புடன் செயல்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

புதுவைப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவில் யானை ஐராவதமானது

இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதியால் திருவண்ணாமலை சன்யாசிக்கு திருச்சுழி ஆலயத்தில் வைத்து தானமளிக்கப்பட்ட ஆலயங்கள் தான்  திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம் பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தான மடாலயத்தின் பராமரிப்பிலுள்ள அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவிலுக்கு 1971-ஆம் ஆண்டு ஆத்தங்குடி கா.அரு.கா.காடப்ப செட்டியார் குடும்பத்தின் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி அதில்  யானை சுப்புலட்சுமி சிறிய குட்டி யானையாக கேரளாவில் இருந்து வனத்துறை மூலம் வாங்க பழைய 46 வது மடாதிபதி தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியார் அடிகளார் மூலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த யானை கோவில் அருகேயுள்ள மடத்தின் தகரக் கூடாரத்தில் உள் பகுதியில் கிடுகு வேயப்பட்ட நிலையில் மூன்றாவது யானைப் பாகன் கார்த்திக் பராமரிப்பு செய்த நிலையில் ஆலயத்தில் அழகு மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கலந்து பாதுகாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தீ பற்றி பரவியதில் முன் பின் கால்கள் கட்டப்பட்டிருந்த யானை கோவில் யானை பாகன் அருகில் இல்லாமல் இருந்ததால் வெப்பம் தாக்காமல் இருக்க தகர மேற்கூரைக்கு அட...