முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

உலக பல்கலைக்கழக தரவரிசையில் புதுவை பல்கலைக்கழகம் முக்கிய இடம் பிடித்துள்ளது

 QS உலக பல்கலைக்கழக தரவரிசையில் புதுவை பல்கலைக்கழகம் முக்கிய இடம் பிடித்துள்ளது




QS உலக பல்கலைக்கழக தரவரிசையானது, பல்கலைக்கழகத்தின்  பல முக்கிய பணிகள் - கல்வியாண்டு தேர்ச்சி  விகிதம்/நற்பெயர், பல்கலைக்கழகத்தின் தலைமையின் அணுகுமுறை/அர்ப்பணிப்பு, ஆசிரிய மாணவர் விகிதம், ஆராய்ச்சி கட்டுரைகள், சர்வதேச ஆசிரியர்கள் விகிதம் மற்றும் சர்வதேச மாணவர்கள் விகிதம் போன்ற ஆறு கடுமையான செயல்திறன் குறிகாட்டிகளுடன் தரவரிசை பட்டியல் 2022 சமீபத்தில் வெளியிட்டது

இதில் புதுவை பல்கலைக்கழகம்  801 முதல் 1000 வகைகளுக்கு (category) இடையில் தரவரிசை பெற்ற உலகின் முதல் 1000 பல்கலைக்கழகங்களில் இடம்பெற்றுள்ளது. இந்தியாவிலிருந்து தரவரிசைப் பட்டியலில் உள்ள இந்திய பல்கலைக்கழகங்கள் / நிறுவனங்களில் முதல் 20 இடங்களில் புதுவை பல்கலைக்கழகம் இடம்பெற்றுள்ளது. QS உலக பல்கலைக்கழக இடையிலான தரவரிசையில் புதுவைபல்கலைக்கழகம் இடம் பெற்று வரலாற்று சாதனை பெற்றுள்ளது, மேலும் புதுவை பல்கலைக்கழகம் பங்கேற்கும் இந்திய மற்றும் ஆசிய பல்கலைக்கழக தரவரிசையில் தொடர்ந்து இடம்பெற்று முன்னேறிக்கொண்டேவுள்ளது.  QS உலக பல்கலைக்கழக தரவரிசையில் 2022 இல் 22  பல்கலைக்கழகங்கள் மற்றும் நிறுவனங்கள் மட்டுமே இந்திய அளவில்  இடம்பெற முடிந்தது .  இதில் புதுவை பல்கலைக்கழகம் ஆராய்ச்சி, கற்பித்தல், அர்ப்பணிப்பு, ஆசிரியர்களின் ஆராய்ச்சி கட்டுரை  போன்ற செயல்திறன் குறிகாட்டிகளில்  மிகச் சிறந்த  மதிப்பெண் பெற்று சாதனை பெற்றுள்ளது.

QS உலக பல்கலைக்கழக தரவரிசையானது 2014 முதல் அதன் தரவரிசையை அறிமுகப்படுத்தி வெளியிட்டு வருகிறது இதில் புதுவை  பல்கலைக்கழகம் 2018 முதல் பங்கேற்று வருகிறது. முன்னதாக  புதுவை பல்கலைக்கழகம் QS ஆசியா தரவரிசையில் 301-350 வகைபிரிவிலும்  மற்றும் பிரிக்ஸ் பல்கலைக்க தரவரிசையில் 211-220 வகைபிரிவிலும் கடந்த நான்கு ஆண்டுகளாக தொடர்ந்து வெற்றிகரமாக  தரவரிசையில்  இடம்பிடித்தது வருகிறது.

மேலும் புதுவை  பல்கலைக்கழகம் மற்ற மதிப்புமிக்க உலக தரவரிசைகளான Times Higher Education (THE) உலக  பல்கலைக்கழக தரவரிசை, Association of Common Wealth(ACU) பல்கலைக்கழக தரவரிசை, தேசிய தரவரிசைகளான National Institutional Ranking Framework (NIRF) தரவரிசை, Atal Ranking of Institutions on Innovation Achievements (ARIIA) தரவரிசை, Outlook-ICARE இந்தியா பல்கலைக்கழக தரவரிசை மற்றும் பிற தொழில்துறை நிதியுதவி தரவரிசை போன்ற பல்வேறு தரவரிசைகளிலும் தொடர்ந்து பங்கேற்று வருகிறது. உலகளவில் புதுவை பல்கலைக்கழகத்தின் தரத்தினை உயர்த்தும் நோக்கத்தில் தொடர்ந்து பல்வேறு தரவரிசையில் பங்கேற்று வருகிறது

இத்தகைய சாதனையை படைக்க உறுதுணையாக இருந்த ஆசிரியர்கள், ஆராய்ச்சி அறிஞர்கள், அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் மாணவர்களுக்கு புதுவைப் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் குர்மீத் சிங் அவர்கள் நன்றி தெரிவித்துக்கொண்டார். மேலும், ஆராய்ச்சி அறிஞர்கள் மற்றும் மாணவர்களுக்கு சிறந்த கல்வி ஆர்வத்தை வழங்கும்  ஆசிரியர்கள், அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் அர்ப்பணிப்பு பங்களிப்புடன் வரும் ஆண்டுகளில் பல்கலைக்கழகம் அதிக உயரங்களை எட்ட முனைப்புடன் செயல்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

புதுவைப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த