சென்னை விமான நிலையத்தி்ல் ரூ.40.35 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல் : ஒருவர் கைது
துபாயில் இருந்து சென்னை வந்த பயணியிடம் ரூ.40.35 லட்சம் மதிப்பிலான தங்கத்தை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
உளவுத் தகவல் அடிப்படையில், துபாயில் இருந்து எமிரேட்ஸ் விமானம மூலம் சென்னை வந்த, சந்துரு சக்திவேல்(23) என்ற நபரை, சுங்கத்துறை அதிகாரிகள் இடைமறித்து சோதனை செய்தனர். அவர் 948 கிராம் தங்கப்பசையை 4 பொட்டலங்களில் மலக்குடலில் மறைத்து வைத்திருந்தார். அவற்றில் இருந்து 810 கிராம் எடையில் 24 கேரட் தங்கம் பிரித்தெடுக்கப்பட்டது. இவற்றின் மதிப்பு ரூ.40.35 லட்சம். விழுப்புரத்தைச் சேர்ந்த அவர் கைது செய்யப்பட்டார்.
இது குறித்து மேலும் விசாரணை நடப்பதாக சென்னை சர்வதேச விமான நிலைய சுங்க ஆணையர் தெரிவித்துள்ளார்.
கருத்துகள்