கிஷ்த்வார், கார்கிலில் மேகவெடிப்பை அடுத்து மத்திய அரசு நிலைமையை உன்னிப்பாகக் கண்காணிக்கிறது: பிரதமர்
பிரதமர் அலுவலகம் கிஷ்த்வார், கார்கிலில் மேகவெடிப்பை அடுத்து மத்திய அரசு நிலைமையை உன்னிப்பாகக் கண்காணிக்கிறது: பிரதமர்
கிஷ்த்வார், கார்கிலில் ஏற்பட்ட மேகவெடிப்பை அடுத்து அங்குள்ள நிலைமையை மத்திய அரசு உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது என்று பிரதமர் திரு.நரேந்திர மோடி கூறியுள்ளார்.
இது தொடர்பாக, பிரதமர் சுட்டுரை வாயிலாக வெளியிட்டுள்ள செய்தியில், “கிஷ்த்வார் மற்றும் கார்கிலில் ஏற்பட்ட மேகவெடிப்பை அடுத்து அங்குள்ள நிலைமையை மத்திய அரசு உன்னிப்பாக கண்காணித்து வருகிறது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகள் விரைந்து மேற்கொள்ளப்படுகின்றன. அங்குள்ள மக்களின் பாதுகாப்பிற்கும், நலனுக்கும் நான் பிரார்த்திக்கிறேன்” என்று கூறியுள்ளார்.
கருத்துகள்