அரசியலுக்கு வராமலேயே அரசியலுக்கு முழுக்குப் போட்ட ரஜினிகாந்த் தடாலடி முடிவு மக்கள் மன்றம் இனிச் செயல்படாது.
அரசியலுக்கு வராமலேயே அரசியலுக்கு முழுக்குப் போட்ட ரஜினிகாந்த் தடாலடி முடிவு மக்கள் மன்றம் இனிச் செயல்படாது.
அரசியலுக்கு வருவது பற்றி முன்னால் முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் மரணத்திற்கு பிறகு கடந்த இரண்டாண்டுகளாகவே மாவட்ட ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ரஜினிகாந்த் ஆலோசனை நடத்தி வந்தார், 2020 ஆம் ஆண்டு இறுதியில், விரைவில் அரசியல் கட்சி துவங்கப் போவதாகவும் அறிவித்தார். தமிழருவி மணியன் உள்ளிட்ட இருவரை பொறுப்பாளராகவும் அறிவித்தார்
ஆனால் இந்தாண்டு ஜனவரி மாதம் உடல்நிலை காரணமாக தான் அரசியல் கட்சி துவங்கும் எண்ணத்தைக் கைவிடுவதாக அறிவித்தார். இது பலநாள் இரண்டு தலைமுறையாகக் காத்திருந்த ரஜினிகாந்த் ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்தது. இருந்தாலும் உடல்நிலையைக் காரணமாக ரஜினி கூறியதால் அவர்கள் அமைதியாகாத்தனர்.
சட்டசபைத் தேர்தலில் ரஜினியின் ஆதரவு யாருக்கும் இருக்குமென பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ரஜினி யாருக்கும் ஆதரவுக் குரல் கொடுக்காமல் அமைதியாக, வந்து ஓட்டுப் போட்டுச் சென்றார்.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பிலிருந்த ரஜினி, அண்ணாத்த பட வேலைகளை முடித்து விட்டு மருத்துவப் பரிசோதனைக்காக குடும்பத்துடன் அமெரிக்கா செல்வதாகக் கூறிச் சென்று விட்டார்.
அமெரிக்காவிலிருந்து திரும்பியவரிடம் மீண்டும் அரசியல் பிரவேசம் பற்றிய கேள்வி எழுப்பப்படவே அதற்குப் பதிலளித்த ரஜினிகாந்த் எதிர்காலத்தில் அரசியலுக்கு வரும் எண்ணமில்லையெனத் திட்டவட்டமாகக் கூறி விட்டதைத் தொடர்ந்து ரஜினிகாந்த் வெளியிட்ட அறிவிக்கையில், அரசியலுக்கு வருவதற்காக ரஜினி ரசிகர் மன்றம், ரஜினி மக்கள் மன்றமாக மாற்றப்பட்டது. தற்போது அரசியலுக்கு வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் ரஜினி மக்கள் மன்றத்தைக் கலைக்கப் போவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும் மன்ற நிர்வாகிகள் தொடர்ந்து ரஜினி ரசிகர் நற்பணி மன்றத்தின் கீழ் மக்கள் நலனுக்காக செயல்படுவார்கள் என ரஜினி அறிவித்தார். அத்துடன் சென்னையில் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளை அழைத்து அவர் அவசர ஆலோசனை நடத்தினார்.
ரஜினி அவசர ஆலோசனை நடத்துவதால் மீண்டும் அரசியல் வருகை அறிவிப்பு வரலாமென அவரது ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். ஆனால் மக்கள் மன்றம் கலைக்கப்பட்டதாக மட்டுமே அறிவிப்பு வந்ததால் அவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
வாழ்க்கையில் பயம் இருக்கலாம்.பயமே வாழ்க்கையாகி விடக் கூடாது. இந்த ரஜினியின் சூப்பர் வசனங்களும் மற்றும்
"நான் ஒரு தடவை சொன்னா நூறு தடவை சொன்ன மாதிரி"
"கண்ணா பன்னிங்க தான் கூட்டமா வரும், சிங்கம் எப்பவுமே சிங்கிளா தான் வரும்" ஆனால் இந்த வசனத்தில் வரும் வார்த்தை ரஜினிகாந்துக்கு இந்த நிலையில் பொருந்தாமல் போனது.
"அளவுக்கு அதிகமா ஆசைப்படுற ஆம்பளையும், அளவுக்கு அதிகமா கோபப்படுற பொம்பளையும் வாழ்க்கையில நல்லா வாழ்ந்ததா சரித்திரமே இல்ல" இந்த வசனத்தை நம்பிய ரசிகர்கள் இனி இவரது சினிமா கவர்ச்சிக்கு மட்டுமே அவர்கள் அரசியல் எதிர்காலம் அஸ்தமனம் ஆனதால் இதே ஆதரவு நிலை இனி ரஜினிகாந்துக்கு கிடைக்குமா என்பது அண்ணாத்த வெளியான பிறகு தான் தெரியவரும்.
கருத்துகள்