முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஆறு தமிழ்நாடு அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு மத்திய அரசு விருது

தமிழ்நாடு அரசுப்பள்ளி ஆசிரியர்கள் ஆறு நபருக்கு மத்திய அரசு விருது







ஆறாசிரியர்களும், கல்வி பயிற்றுவித்தலில் தகவல் தொழில்நுட்பப் பயன்பாட்டுக்காக தேசிய விருது பெறவிருக்கின்றனர் . இதற்குரிய அறிவிப்பை மத்தியக் கல்வி அமைச்சகம் வெளியிட்டது. கடந்த தலைமுறை கல்வி பயின்றது அரசின் பள்ளி தான் தற்போது  அரசுப் பள்ளி என்றால் வசதி குறைவு என்ற உணர்வு இப்போதய  காலத்தில் மாறிவிட்டது. காரணம் பல விவாதங்கள் தேவை அதுவே உண்மை நிலை உணரமுடியும்    அரசுப் பள்ளிகளில் தற்போது தங்களின் பிள்ளைகளைச் சேர்க்க பெற்றோர்கள் வெகுவாக ஆர்வம் காட்டிவருகின்றனர். அரசுப் பள்ளியை தரம் உயர்த்தினால் ஆட்சியைக் கூட கட்சிகள் தக்கவைத்துக் கொள்ளலாம் என்பதற்கு டெல்லியின் ஆம் ஆத்மி கட்சி முதல்வர் திரு. கெஜ்ரிவால் ஒரு சாட்சி. அந்தவகையில், தமிழகத்தில் அரசுப் பள்ளியின் நிலவரம் குறிப்பிடத்தக்க அளவுக்கு தரம் தற்போது உயர்ந்து வருகிறது என்றே சொல்லலாம். அப்படியாக ஆசிரியர்களும் கற்பித்தலில் தங்களை நவீன தொழில்நுட்பத்துக்கு தகவமைத்துக் கொண்டுள்ளனர்.

 2010 ஆம் ஆண்டு முதல், மத்தியக் கல்வி அமைச்சகம் சார்பில் விருது வழங்கப்படுகிறது. கல்வி கற்பிப்பதில் தகவல் தொழில்நுட்பத்தை ஆக்கபூர்வமாகப் பயன்படுத்தும் ஆசிரியர்களுக்கு இந்த ஐசிடி விருது வழங்கப்படுகிறது. ஆண்டுதோறும் என்சிஇஆர்டி சார்பில் இந்த விருது விழாவும் நடத்தப்படுகிறது. 

விருதுக்காக ஒவ்வொரு மாநிலமும் ஆசிரியர்களைத் தேர்வு செய்து என்சிஆர்டிக்கு பரிந்துரைக்கும். வகையில் தற்போது தமிழகத்தில் நடப்புக் கல்வியாண்டில் ஆறு ஆசிரியர்களைத் தேர்ந்தெடுத்து பரிந்துரையிலிருந்து 3 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்2018, மற்றும் 2019 ஆம் கல்வியாண்டென இரண்டு ஆண்டுகளுக்கு மொத்தம் ஆறு ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்

2018 ஆம் ஆண்டுக்கான விருது பெறும் ஆசிரியர்கள்

கணேஷ், கிளரியம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, திருவாரூர் மாவட்டம். இவர் கணினி வாயிலாக கணிதம் கற்பிப்பவர்.

தயானந்த், உடுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, திருப்பூர் மாவட்டம். இவர் மாணவர்களுக்காக 170-க்கும் மேற்பட்ட  அனிமேஷன் வீடியோக்களை உருவாக்கியவர்.

மனோகர் சுப்பிரமணியம்,  வெள்ளியணை ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி,கரூர் மாவட்டம். இவர் க்யூஆர் குறியீட்டுடன் கூடிய அடையாள அட்டை தயாரித்து மாணவர்களை அதைப் பயன்படுத்தப் பழக்கி கவனம் ஈர்த்தவர்.

2019 ஆம் ஆண்டுக்கான விருது பெறும் ஆசிரியர்கள்

 தங்கராஜா மகாதேவன், பாரப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, சேலம் மாவட்டம். இவர், சூழலியல் சார்ந்த பாடங்களை அனிமேஷன் வீடியோக்கள் மூலம் கற்பித்துக் கவனம் ஈர்த்தவர்.

இளவரசன், வேடப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, சேலம் மாவட்டம். இவர், தகவல் தொழில்நுட்பத்தின் உதவியுடன் 22 நாடுகளைச் சேர்ந்த மாணவர்களுடன் தன் மாணவர்களை உரையாட வைத்தவர்.

ஜெ.செந்தில் செல்வன், மாங்குடி அரசு மேல்நிலைப் பள்ளி, சிவகங்கை மாவட்டம். இவர் ஜாமென்ட்ரி, கிராஃப் உள்ளிட்ட கணிதப் பாடங்களை பவர்பாயிண்ட்மூலம் மாணவர்களிடம் எளிமையாகக் கொண்டு சேர்த்தவர்.

இந்த ஐசிடி விருதுகள் தேசிய நல்லாசிரியர் விருதுகளுக்கு ஈடானவை என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது தனியார் பள்ளி அதிகரிப்பும் கட்டணக் கொள்ளையும் இந்தப்  பள்ளிகள் திறப்பு இல்லாத கொரானா பரவல் காலத்திலும் தொடர்வதால் தகுதி இல்லாத பலரை இலாப நோக்கில் பணியமர்த்தி கல்வி போதிக்கத் திறனற்ற நிலையில் தற்போது பல தனியார் கல்வி நிறுவனங்கள் வந்த விளைவுகள் தான் இப்போது மக்கள் மீண்டும் அரசு பள்ளிகளை நாடும் நிலையில் உள்ளது. மதுரை மாவட்டம்

மேலூர் குற்றவியல் நீதித்துறை நடுவர்  தனது  குழந்தைகளை அரசுப் பள்ளியில் சேர்த்துள்ளார்.புதிய நீதிபதியாக திருமதி ஜெயந்தி நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தனது இரண்டு குழந்தைகளையும் மேலூர் நகராட்சி அரசு பள்ளியில் சேர்த்துள்ளார் குழந்தைகள் சாக்யா ஏழாம் வகுப்பிலும், அசுரன் ஐந்தாம் வகுப்பிலும் சேர்ந்துள்ளனர். கணவர் சிவராஜ் வழக்கறிஞராவார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலபக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...