தமிழ்நாடு அரசுப்பள்ளி ஆசிரியர்கள் ஆறு நபருக்கு மத்திய அரசு விருது
ஆறாசிரியர்களும், கல்வி பயிற்றுவித்தலில் தகவல் தொழில்நுட்பப் பயன்பாட்டுக்காக தேசிய விருது பெறவிருக்கின்றனர் . இதற்குரிய அறிவிப்பை மத்தியக் கல்வி அமைச்சகம் வெளியிட்டது. கடந்த தலைமுறை கல்வி பயின்றது அரசின் பள்ளி தான் தற்போது அரசுப் பள்ளி என்றால் வசதி குறைவு என்ற உணர்வு இப்போதய காலத்தில் மாறிவிட்டது. காரணம் பல விவாதங்கள் தேவை அதுவே உண்மை நிலை உணரமுடியும் அரசுப் பள்ளிகளில் தற்போது தங்களின் பிள்ளைகளைச் சேர்க்க பெற்றோர்கள் வெகுவாக ஆர்வம் காட்டிவருகின்றனர். அரசுப் பள்ளியை தரம் உயர்த்தினால் ஆட்சியைக் கூட கட்சிகள் தக்கவைத்துக் கொள்ளலாம் என்பதற்கு டெல்லியின் ஆம் ஆத்மி கட்சி முதல்வர் திரு. கெஜ்ரிவால் ஒரு சாட்சி. அந்தவகையில், தமிழகத்தில் அரசுப் பள்ளியின் நிலவரம் குறிப்பிடத்தக்க அளவுக்கு தரம் தற்போது உயர்ந்து வருகிறது என்றே சொல்லலாம். அப்படியாக ஆசிரியர்களும் கற்பித்தலில் தங்களை நவீன தொழில்நுட்பத்துக்கு தகவமைத்துக் கொண்டுள்ளனர்.
2010 ஆம் ஆண்டு முதல், மத்தியக் கல்வி அமைச்சகம் சார்பில் விருது வழங்கப்படுகிறது. கல்வி கற்பிப்பதில் தகவல் தொழில்நுட்பத்தை ஆக்கபூர்வமாகப் பயன்படுத்தும் ஆசிரியர்களுக்கு இந்த ஐசிடி விருது வழங்கப்படுகிறது. ஆண்டுதோறும் என்சிஇஆர்டி சார்பில் இந்த விருது விழாவும் நடத்தப்படுகிறது.
விருதுக்காக ஒவ்வொரு மாநிலமும் ஆசிரியர்களைத் தேர்வு செய்து என்சிஆர்டிக்கு பரிந்துரைக்கும். வகையில் தற்போது தமிழகத்தில் நடப்புக் கல்வியாண்டில் ஆறு ஆசிரியர்களைத் தேர்ந்தெடுத்து பரிந்துரையிலிருந்து 3 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்2018, மற்றும் 2019 ஆம் கல்வியாண்டென இரண்டு ஆண்டுகளுக்கு மொத்தம் ஆறு ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்
2018 ஆம் ஆண்டுக்கான விருது பெறும் ஆசிரியர்கள்
கணேஷ், கிளரியம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, திருவாரூர் மாவட்டம். இவர் கணினி வாயிலாக கணிதம் கற்பிப்பவர்.
தயானந்த், உடுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, திருப்பூர் மாவட்டம். இவர் மாணவர்களுக்காக 170-க்கும் மேற்பட்ட அனிமேஷன் வீடியோக்களை உருவாக்கியவர்.
மனோகர் சுப்பிரமணியம், வெள்ளியணை ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி,கரூர் மாவட்டம். இவர் க்யூஆர் குறியீட்டுடன் கூடிய அடையாள அட்டை தயாரித்து மாணவர்களை அதைப் பயன்படுத்தப் பழக்கி கவனம் ஈர்த்தவர்.
2019 ஆம் ஆண்டுக்கான விருது பெறும் ஆசிரியர்கள்
தங்கராஜா மகாதேவன், பாரப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, சேலம் மாவட்டம். இவர், சூழலியல் சார்ந்த பாடங்களை அனிமேஷன் வீடியோக்கள் மூலம் கற்பித்துக் கவனம் ஈர்த்தவர்.
இளவரசன், வேடப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, சேலம் மாவட்டம். இவர், தகவல் தொழில்நுட்பத்தின் உதவியுடன் 22 நாடுகளைச் சேர்ந்த மாணவர்களுடன் தன் மாணவர்களை உரையாட வைத்தவர்.
ஜெ.செந்தில் செல்வன், மாங்குடி அரசு மேல்நிலைப் பள்ளி, சிவகங்கை மாவட்டம். இவர் ஜாமென்ட்ரி, கிராஃப் உள்ளிட்ட கணிதப் பாடங்களை பவர்பாயிண்ட்மூலம் மாணவர்களிடம் எளிமையாகக் கொண்டு சேர்த்தவர்.
இந்த ஐசிடி விருதுகள் தேசிய நல்லாசிரியர் விருதுகளுக்கு ஈடானவை என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது தனியார் பள்ளி அதிகரிப்பும் கட்டணக் கொள்ளையும் இந்தப் பள்ளிகள் திறப்பு இல்லாத கொரானா பரவல் காலத்திலும் தொடர்வதால் தகுதி இல்லாத பலரை இலாப நோக்கில் பணியமர்த்தி கல்வி போதிக்கத் திறனற்ற நிலையில் தற்போது பல தனியார் கல்வி நிறுவனங்கள் வந்த விளைவுகள் தான் இப்போது மக்கள் மீண்டும் அரசு பள்ளிகளை நாடும் நிலையில் உள்ளது. மதுரை மாவட்டம்
மேலூர் குற்றவியல் நீதித்துறை நடுவர் தனது குழந்தைகளை அரசுப் பள்ளியில் சேர்த்துள்ளார்.புதிய நீதிபதியாக திருமதி ஜெயந்தி நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தனது இரண்டு குழந்தைகளையும் மேலூர் நகராட்சி அரசு பள்ளியில் சேர்த்துள்ளார் குழந்தைகள் சாக்யா ஏழாம் வகுப்பிலும், அசுரன் ஐந்தாம் வகுப்பிலும் சேர்ந்துள்ளனர். கணவர் சிவராஜ் வழக்கறிஞராவார்.
கருத்துகள்