முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

20 கோடி பெண்களின் ஜன்தன் கணக்குகளில் ரூ. 30,000 கோடி நேரடியாக பரிமாற்றம் செய்யப்பட்டது


பிரதமர் அலுவலகம் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த பிரதமரின் ஏழைகள் நல உணவுத் திட்ட பயனாளிகளுடன் பிரதமர் கலந்துரையாடல்

மாநிலத்தில் இந்த திட்டத்தினால் சுமார் 5 கோடி பேர் பயனடைகிறார்கள்

வெள்ளம் மற்றும் மழையின் போது, மத்தியப் பிரதேச மாநிலத்துடன் இந்திய அரசும், ஒட்டுமொத்த நாடும் துணை நிற்கிறது: பிரதமர்

கொரோனா நெருக்கடியை சமாளிக்கும் உத்திகளில் ஏழைகளுக்கு உயரிய முன்னுரிமையை இந்தியா அளித்தது: பிரதமர்

80 கோடி குடிமக்கள் இலவச ரேஷன் பொருட்களைப் பெறுவது மட்டுமல்லாமல், 8 கோடிக்கும் அதிகமான ஏழைக் குடும்பங்கள், இலவச சமையல் எரிவாயுவையும் பெறுகின்றன

சுமார் 20 கோடி பெண்களின் ஜன்தன் கணக்குகளில் ரூ. 30,000 கோடி நேரடியாக பரிமாற்றம் செய்யப்பட்டது

தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் பல ஆயிரம் கோடி ரூபாய் செலுத்தப்பட்டது. அடுத்த தவணை, நாளை மறுநாள் செலுத்தப்படும்

‘இரட்டை எஞ்சின் அரசுகளில்’ மத்திய அரசின் திட்டங்களுக்கு மாநில அரசுகள் துணை புரிந்து, அவற்றை மேம்படுத்துவதுடன் அவற்றின் ஆற்றலை அதிகரிக்க வேண்டும்: பிரதமர்

பீமாரு (பிகார், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் உத்தரப் பிரதேசம்) மாநிலங்களின் பிம்பத்தை நீண்ட நாட்களுக்கு முன்பே திரு சிவராஜ் சிங் சவுகான் தலைமையில் மத்தியப் பிரதேசம் உடைத்துள்ளது: 

மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த பிரதமரின் ஏழைகள் நல உணவுத் திட்ட பயனாளிகளுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி, காணொலிக் காட்சி வாயிலாக இன்று கலந்துரையாடினார். மாநிலத்தில், தகுதி பெறும் நபர் எவரும் விடுபட்டு விடக்கூடாது என்பதை உறுதி செய்வதற்காக இந்த திட்டம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஓர் தீவிர பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகிறது. ஆகஸ்ட் 7, 2021-ஐ,  பிரதமரின் ஏழைகள் நல உணவுத் திட்ட தினமாக அந்த மாநிலம் கொண்டாடுகிறது. மத்தியப் பிரதேச மாநிலத்தின் ஆளுநர் மற்றும் முதலமைச்சர், இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். மத்தியப் பிரதேசத்தில் இந்தத் திட்டத்தினால் சுமார் 5 கோடி பயனாளிகள், பயனடைந்து வருகிறார்கள்.

இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், மத்தியப் பிரதேச மாநில மக்களின் உயிர் மற்றும் வாழ்வாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள மழை மற்றும் வெள்ள நிலவரம் குறித்து தமது உரையைத் தொடங்கினார். இது போன்ற கடினமான சூழலில் இந்திய அரசும், ஒட்டுமொத்த நாடும் மாநில மக்களுடன் துணை நிற்பதாக அவர் உறுதி அளித்தார்.

ஓர் நூற்றாண்டில் ஏற்படும் மோசமான பேரிடராக கொரானா பெருந்தொற்றைக் குறிப்பிட்ட பிரதமர், இந்த சவாலை எதிர்த்து  ஒட்டுமொத்த நாடும் இணைந்து போராடியதாகக் கூறினார். கொரோனா நெருக்கடியை சமாளிக்கும் உத்திகளில் ஏழைகளுக்கு உயரிய முன்னுரிமையை இந்தியா அளித்ததாக அவர் மீண்டும் எடுத்துரைத்தார். முதல் நாளிலிருந்தே ஏழைகள் மற்றும் தொழிலாளர்களுக்கு உணவு மற்றும் வேலை வாய்ப்பை வழங்குவதில் கவனம் செலுத்தப்பட்டது. 80 கோடி குடிமக்கள் இலவச ரேஷன் பொருட்களைப் பெறுவது மட்டுமல்லாமல், 8 கோடிக்கும் அதிகமான ஏழைக் குடும்பங்கள், இலவச சமையல் எரிவாயுவையும் பெறுகின்றன. சுமார் 20 கோடி பெண்களின் ஜன்தன் கணக்குகளில் ரூ. 30,000 கோடி நேரடியாக பரிமாற்றம் செய்யப்பட்டது. அதேபோல தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் பல ஆயிரம் கோடி ரூபாய் செலுத்தப்பட்டது. சுமார் 10-11 கோடி விவசாய குடும்பங்களின் வங்கிக் கணக்குகளில் ஆகஸ்ட் 9-ஆம் தேதி, ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் செலுத்தப்படவிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

அண்மையில் 50 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்ட குறிப்பிடத்தக்க சாதனையைக் குறிப்பிட்டுப் பேசிய பிரதமர், பல நாடுகளின் மக்கள்தொகைக்கு இணையான எண்ணிக்கையில், இந்தியா ஒரு வாரத்தில் தடுப்பூசியை செலுத்துவதாகக் கூறினார். “இது, தன்னிறைவு அடைந்து வரும் இந்தியாவின், புதிய இந்தியாவின் புதிய செயல் திறன்”, என்று அவர் தெரிவித்தார். இந்த தடுப்பூசி, பாதுகாப்பானது மற்றும் பயனளிக்கக் கூடியது என்று கூறிய பிரதமர், தடுப்பூசித் திட்டத்தை விரைவுபடுத்துமாறு கேட்டுக்கொண்டார்.

உலகம் முழுவதும் மக்களின் வாழ்வாதாரத்தில் முன்னெப்போதுமில்லாத வகையில் ஏற்பட்டுள்ள நெருக்கடியின் போது இந்தியாவில் குறைந்த அளவிலான பாதிப்புகள் மட்டுமே ஏற்படுவதை உறுதி செய்வதற்கு தொடர்ந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார். சிறு மற்றும் குறு தொழில்கள் தொடர்ந்து இயங்கவும், அதன் பங்குதாரர்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்வதற்காகவும் பல லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான உதவிகள் வழங்கப்பட்டது. ஒரே தேசம், ஒரே ரேஷன் அட்டை, நியாயமான வாடகை திட்டம், பிரதமரின் ஸ்வநிதித் திட்டம் மூலம் அணுகக்கூடிய மற்றும் எளிதில் கடன் பெறும் வசதி,உட்கட்டமைப்பு திட்டங்கள் முதலியவை தொழிலாளர் வகுப்பினருக்கு பெரும் உதவிகரமாக இருந்தது.

இரட்டை எஞ்சின் அரசினால் மாநிலத்தில்  ஏற்பட்டுள்ள பலன்கள் குறித்துப் பேசுகையில், குறைந்தபட்ச ஆதரவு விலை விற்பனையில் சாதனை படைத்த மாநில அரசைப் பாராட்டினார். மத்திய பிரதேசத்தில், இந்த ஆண்டு, சுமார் 17 லட்சம் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட கோதுமைக்கான ரூபாய் 25,000 கோடி, அவர்களது வங்கிக் கணக்குகளில் நேரடியாக செலுத்தப்பட்டது. அதிக எண்ணிக்கையிலான கோதுமை விற்பனை மையங்களை இந்த ஆண்டு மாநிலம் உருவாக்கியுள்ளது. இரட்டை எஞ்சின் அரசுகளில்’, மத்திய அரசின் திட்டங்களுக்கு மாநில அரசுகள் துணை புரிந்து, அவற்றை மேம்படுத்துவதுடன் அவற்றின் ஆற்றலையும் அதிகரிக்க வேண்டும். பீமாரு (பிகார், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் உத்தரப் பிரதேசம்) மாநிலங்களின் பிம்பத்தை நீண்ட நாட்களுக்கு முன்பே திரு சிவராஜ் சிங் சவுகான் தலைமையில் மத்தியப் பிரதேசம் உடைத்துள்ளது.

தற்போதைய ஆட்சியின் கீழ் அரசு திட்டங்கள் விரைவாக சென்றடைவதைக் குறிப்பிட்ட பிரதமர், முந்தைய அரசு அமைப்புகளின் பிழைகளை சுட்டிக் காட்டினார். அவர்கள் ஏழைகளை பற்றி கேள்வி எழுப்பி, பயனாளிகளின் கருத்துக்களை பரிசீலிக்காமல், தாங்களாகவே பதில்களை அளிப்பார்கள் என்று அவர் கூறினார். வங்கி கணக்குகள், சாலை, எரிவாயு இணைப்பு, கழிவறை, தண்ணீர் குழாய், கடன்கள் போன்ற வசதிகள் ஏழை மக்களுக்கு பயனளிக்காது என்று கருதப்பட்டது. இந்த பொய்யான கூற்றால், ஏழை மக்கள் நீண்ட காலம்  பின் தங்கிய நிலையில் இருந்தனர். ஏழை மக்களைப் போல, தற்போதைய தலைமையும் கடினமான சூழல்களைக் கடந்துவந்து, நிலைமையைப் புரிந்து கொண்டுள்ளது. ஏழைகளுக்கு வலிமை சேர்க்கவும், அதிகாரம் அளிக்கவும் உண்மையான மற்றும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் அண்மைக் காலங்களில் மேற்கொள்ளப்படுகின்றன. இன்று, ஒவ்வொரு கிராமத்திற்கும் சாலை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன, புதிய வேலைவாய்ப்புகள் வளர்ந்து வருகின்றன, விவசாயிகள் சந்தைகளை அணுகுவது எளிமையாக்கப்பட்டுள்ளது, நோயினால் பாதிக்கப்பட்ட போது ஏழைகள் உரிய காலத்தில் மருத்துவமனையை சென்றடைய முடிகிறது.

தேசிய கைத்தறி தினமான இன்று, கடந்த 1905 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7-ஆம் தேதி சுதேசி இயக்கம் துவங்கப்பட்டதை நினைவுக் கூர்ந்தார். ஊரக ஏழை மற்றும் பழங்குடி பிரிவினருக்கு அதிகாரம் அளிப்பதற்காக ஓர் பிரம்மாண்ட பிரச்சாரம் நாட்டில் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன், நமது கைவினைக் கலை, கைத்தறி மற்றும் ஜவுளித் துறையின் பணியாளர்களை ஊக்குவிப்பது இதன் நோக்கமாகும். உள்ளூர் பொருட்களுக்கு ஆதரவளிப்பதே இந்த இயக்கம். இந்த உணர்வுடன் தேசிய கைத்தறி தினம் கொண்டாடப்படுவதாக அவர் கூறினார். காதி பற்றிக் குறிப்பிட்ட பிரதமர், நினைவை விட்டு நீங்கியிருந்த காதி, தற்போது துடிப்பான அடையாளமாக வளர்ந்திருப்பதாகக் கூறினார். “சுதந்திரத்தின் 100 ஆண்டுகளை நோக்கிய பயணத்தில் நாம் முன்னேறும் வேளையில், காதியில் சுதந்திர உணர்வை நாம் வலுப்படுத்த வேண்டும்”, என்று பிரதமர் தெரிவித்தார். வரவிருக்கும் பண்டிகைகளின் போது ஒரு சில உள்ளூர் கைவினைப் பொருட்களை வாங்குமாறு பொதுமக்களை அவர் வலியுறுத்தினார்.

தமது உரையை நிறைவு செய்யும்போது, பண்டிகை காலங்களில் கொரோனா பற்றிய சிந்தனை மறக்கப்படுவதற்கு எதிராக எச்சரிக்கை விடுத்தார். மூன்றாவது அலையைத் தடுப்பதன் அவசியத்தை கடுமையாக வலியுறுத்திய அவர், அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் பின்பற்றுமாறு மக்களைக் கேட்டுக் கொண்டார். “ஆரோக்கியமான இந்தியா மற்றும் வளமான இந்தியாவை உருவாக்க உறுதி மொழி ஏற்க வேண்டும்”, என்று கூறி திரு மோடி உரையை நிறைவு செய்தார்.

குஜராத் மற்றும் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த பிரதமரின் ஏழைகள் நல உணவுத் திட்ட பயனாளிகளுடனும் அண்மையில் பிரதமர் உரையாடியிருந்தார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த