முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தமிழ்நாட்டின் வேளாண்மை நிதிநிலை அறிக்கை: நல்ல துவக்கம் -

வேளாண்மை நிதிநிலை அறிக்கை: நல்ல துவக்கம் - நீர்ப்பாசனத் திட்டங்களைச் செயல்படுத்த முன்னுரிமை தரக் கோரிக்கை





தமிழ்நாடு சட்டப்பேரவையில் வேளாண்மைத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த வேளாண் நிதிநிலை அறிக்கையில், வேளாண்மை மற்றும் அது சார்ந்த துறைகளின் வளர்ச்சிக்கான பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. புதிய திட்டங்கள் குறித்த விவாதங்கள் ஒருபுறமிருக்க தமிழ்நாட்டில் வேளாண்துறைக்காக தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டிருப்பதே வரவேற்கத்தக்கதாகும்.

தமிழ்நாட்டில் 11.75 இலட்சம் ஹெக்டேர் தரிசு நிலங்களை பாசன நிலங்களாக மாற்றும் நோக்கத்துடன்  கலைஞர் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்  வளர்ச்சித் திட்டம் அறிவிக்கப்பட்டிருக்கிறது. கிராமப்புறங்களில் சாகுபடிப் பரப்பை அதிகரிக்க இந்தத் திட்டம் பயனுள்ளதாகும். பனைமரங்களை பாதுகாப்பதற்காகவும், பனை தொழிலை மேம்படுத்துவதற்காகவும் புதிய திட்டம் அறிவிக்கப்பட்டிருக்கிறது. கடலூர் மாவட்டம் பண்ருட்டியிலும், திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்திலும்  குளிர்பதனக் கிடங்குகள், பல மாவட்டங்களில் சேமிப்புக் கிடங்குகள், இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார், நெல் ஜெயராமன் ஆகியோர் பெயர்களில் புதிய அமைப்புகள், இயற்கை விவசாய வளர்ச்சிக்கு சிறப்புத் திட்டம், மின்னணு ஏலமுறை அறிமுகம் போன்ற திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது.  சிறுதானிய சாகுபடிப் பரப்பை அதிகரிக்கவும், சந்தை வசதிகளைச் செய்து தரவும்  விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் சிறுதானிய இயக்கம் செயல்படுத்தப்படும் என்று வேளாண்மை நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டிருப்பதால் உழவர்கள் பயனடைவர்.

திருச்சிராப்பள்ளி முதல் நாகப்பட்டினம் வரை வேளாண்மைத் தொழில் வழித்தடம் அமைக்கப்படும் என்பதும் பயனுள்ள அறிவிப்பு தான். நெல் கொள்முதல் விலை சாதாரண ரகத்திற்கு ரூபாய் .2015, சன்னரகத்திற்கு ரூபாய்.2060 மாக உயர்த்தப்படும்; கரும்புக்கு டன் ஒன்றுக்கு ரூபாய்.150 ஊக்கத்தொகை வழங்குவதன் மூலம் கரும்பு கொள்முதல் விலை டன்னுக்கு ரூபாய். 2900 மாக உயருமென அறிவிக்கப்பட்டுளள நிலையில் உழவர்களுக்கு கரும்புக்கு டன்னுக்கு ரூபாய் .4500,ம் நெல்லுக்கு ரூ.3000 ம் வீதம் கொள்முதல் விலை வழங்க வேண்டும்  என்று உழவர்கள் கோரி வரும் நிலையில், நெல், கரும்பு கொள்முதல் விலைகளை உயர்த்த அரசு முன்வர வேண்டும். அதுமட்டுமின்றி நெல் மூட்டைகளை உடனடியாக கொள்முதல் செய்யவும், நெல் கொள்முதலில் உள்ள நடைமுறை சிக்கல்களையும் களைய வேண்டும் என்ற விவசாயிகள் கோரிக்கை நியாயமானது 

வேளாண்மை நிதிநிலை அறிக்கையில் உழவர்கள் பெரிதும் எதிர்பார்த்தது ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் வேளாண்மைக்கும் நீட்டிக்கப்படுவது குறித்த அறிவிப்புத் தான்.ஆனால், அந்த அறிவிப்பு இடம் பெறவில்லை. ஊரக வேலை உறுதித் திட்டப்படியான பணி நாட்கள் 100 நாட்களில் இருந்து 150 நாட்களாக உயர்த்தப்பட்டுள்ள நிலையில், அத்திட்டத்தை வேளாண்மைக்கும் நீட்டிப்பது மிகவும் எளிதானது மட்டுமின்றி பயனுள்ளதாக இருக்கும். இந்த எதிர்பார்ப்பை அரசு பூர்த்தி செய்ய வேண்டும் என்பதும் அதற்கு ஊதியம் அரசு தனியார் மூலம் பெற்று வழங்கலாம். பல

வேளாண் துறை வளர்ச்சி, வேளாண் சாகுபடி பரப்பு அதிகரிப்பு ஆகியவை தான் முதல் வேளாண்மை நிதிநிலை அறிக்கையின் நோக்கம் ஆகும். மிக அதிக அளவில் பாசனத் திட்டங்களை செயல்படுத்தாமல் இந்த இலக்கை அடைய முடியாது. ஆனால், நீர்ப்பாசனப் பெருந்திட்டங்கள் எதுவும் நிதிநிலை அறிக்கையில் இடம்பெறாதது  அதேபோல், வேளாண்மை, நீர்வளம், கூட்டுறவு, ஊரகவளர்ச்சி, கால்நடைத்துறை, பால்வளத்துறை, மீன்வளத்துறை, வனத்துறை, உணவுத்துறை ஆகிய 9 துறைகளை உள்ளடக்கிய வேளாண் நிதிநிலை அறிக்கையின் மொத்த மதிப்பு ரூ.34,220 கோடி ஆகும். வேளாண் துறை வளர்ச்சிக்கான தேவைகளுடன் ஒப்பிடும் போது இது மிகவும் குறைவாகும். வேளாண்மை, நீர்வளத்துறை ஆகிய இரு துறைகளுக்கு மட்டும் ரூபாய் .50,000 கோடி நிதி ஒதுக்கினால் மட்டும் வேளாண் துறை ஆண்டுக்கு ஆண்டு  6 விழுக்காடு வளர்ச்சி அடைவதை உறுதி செய்ய முடியும்.

வேளாண்மை தான் தமிழ்நாட்டின் முதன்மைத் துறை. அதன் தேவைகள் கடல் போன்றவை. அவை அனைத்தையும் ஒரே ஆண்டில் நிறைவேற்றி விட முடியாது. அந்த வகையில் நடப்பாண்டில் முதலாவது வேளாண் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டிருப்பதையும், அதில் அறிவிக்கப்பட்டுள்ள பல்வேறு திட்டங்களையும் நல்ல தொடக்கமாக கருதலாம்..முடிவு பயனுள்ளதாகவே அமையும் இது அரசின் நல்ல முயற்சி என பலரும் பாராட்டும் நிலை இதை பப்ளிக் ஜஸ்டிஸ் சார்பில் வரவேற்போம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த