முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தமிழ்நாட்டின் வேளாண்மை நிதிநிலை அறிக்கை: நல்ல துவக்கம் -

வேளாண்மை நிதிநிலை அறிக்கை: நல்ல துவக்கம் - நீர்ப்பாசனத் திட்டங்களைச் செயல்படுத்த முன்னுரிமை தரக் கோரிக்கை





தமிழ்நாடு சட்டப்பேரவையில் வேளாண்மைத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த வேளாண் நிதிநிலை அறிக்கையில், வேளாண்மை மற்றும் அது சார்ந்த துறைகளின் வளர்ச்சிக்கான பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. புதிய திட்டங்கள் குறித்த விவாதங்கள் ஒருபுறமிருக்க தமிழ்நாட்டில் வேளாண்துறைக்காக தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டிருப்பதே வரவேற்கத்தக்கதாகும்.

தமிழ்நாட்டில் 11.75 இலட்சம் ஹெக்டேர் தரிசு நிலங்களை பாசன நிலங்களாக மாற்றும் நோக்கத்துடன்  கலைஞர் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்  வளர்ச்சித் திட்டம் அறிவிக்கப்பட்டிருக்கிறது. கிராமப்புறங்களில் சாகுபடிப் பரப்பை அதிகரிக்க இந்தத் திட்டம் பயனுள்ளதாகும். பனைமரங்களை பாதுகாப்பதற்காகவும், பனை தொழிலை மேம்படுத்துவதற்காகவும் புதிய திட்டம் அறிவிக்கப்பட்டிருக்கிறது. கடலூர் மாவட்டம் பண்ருட்டியிலும், திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்திலும்  குளிர்பதனக் கிடங்குகள், பல மாவட்டங்களில் சேமிப்புக் கிடங்குகள், இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார், நெல் ஜெயராமன் ஆகியோர் பெயர்களில் புதிய அமைப்புகள், இயற்கை விவசாய வளர்ச்சிக்கு சிறப்புத் திட்டம், மின்னணு ஏலமுறை அறிமுகம் போன்ற திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது.  சிறுதானிய சாகுபடிப் பரப்பை அதிகரிக்கவும், சந்தை வசதிகளைச் செய்து தரவும்  விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் சிறுதானிய இயக்கம் செயல்படுத்தப்படும் என்று வேளாண்மை நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டிருப்பதால் உழவர்கள் பயனடைவர்.

திருச்சிராப்பள்ளி முதல் நாகப்பட்டினம் வரை வேளாண்மைத் தொழில் வழித்தடம் அமைக்கப்படும் என்பதும் பயனுள்ள அறிவிப்பு தான். நெல் கொள்முதல் விலை சாதாரண ரகத்திற்கு ரூபாய் .2015, சன்னரகத்திற்கு ரூபாய்.2060 மாக உயர்த்தப்படும்; கரும்புக்கு டன் ஒன்றுக்கு ரூபாய்.150 ஊக்கத்தொகை வழங்குவதன் மூலம் கரும்பு கொள்முதல் விலை டன்னுக்கு ரூபாய். 2900 மாக உயருமென அறிவிக்கப்பட்டுளள நிலையில் உழவர்களுக்கு கரும்புக்கு டன்னுக்கு ரூபாய் .4500,ம் நெல்லுக்கு ரூ.3000 ம் வீதம் கொள்முதல் விலை வழங்க வேண்டும்  என்று உழவர்கள் கோரி வரும் நிலையில், நெல், கரும்பு கொள்முதல் விலைகளை உயர்த்த அரசு முன்வர வேண்டும். அதுமட்டுமின்றி நெல் மூட்டைகளை உடனடியாக கொள்முதல் செய்யவும், நெல் கொள்முதலில் உள்ள நடைமுறை சிக்கல்களையும் களைய வேண்டும் என்ற விவசாயிகள் கோரிக்கை நியாயமானது 

வேளாண்மை நிதிநிலை அறிக்கையில் உழவர்கள் பெரிதும் எதிர்பார்த்தது ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் வேளாண்மைக்கும் நீட்டிக்கப்படுவது குறித்த அறிவிப்புத் தான்.ஆனால், அந்த அறிவிப்பு இடம் பெறவில்லை. ஊரக வேலை உறுதித் திட்டப்படியான பணி நாட்கள் 100 நாட்களில் இருந்து 150 நாட்களாக உயர்த்தப்பட்டுள்ள நிலையில், அத்திட்டத்தை வேளாண்மைக்கும் நீட்டிப்பது மிகவும் எளிதானது மட்டுமின்றி பயனுள்ளதாக இருக்கும். இந்த எதிர்பார்ப்பை அரசு பூர்த்தி செய்ய வேண்டும் என்பதும் அதற்கு ஊதியம் அரசு தனியார் மூலம் பெற்று வழங்கலாம். பல

வேளாண் துறை வளர்ச்சி, வேளாண் சாகுபடி பரப்பு அதிகரிப்பு ஆகியவை தான் முதல் வேளாண்மை நிதிநிலை அறிக்கையின் நோக்கம் ஆகும். மிக அதிக அளவில் பாசனத் திட்டங்களை செயல்படுத்தாமல் இந்த இலக்கை அடைய முடியாது. ஆனால், நீர்ப்பாசனப் பெருந்திட்டங்கள் எதுவும் நிதிநிலை அறிக்கையில் இடம்பெறாதது  அதேபோல், வேளாண்மை, நீர்வளம், கூட்டுறவு, ஊரகவளர்ச்சி, கால்நடைத்துறை, பால்வளத்துறை, மீன்வளத்துறை, வனத்துறை, உணவுத்துறை ஆகிய 9 துறைகளை உள்ளடக்கிய வேளாண் நிதிநிலை அறிக்கையின் மொத்த மதிப்பு ரூ.34,220 கோடி ஆகும். வேளாண் துறை வளர்ச்சிக்கான தேவைகளுடன் ஒப்பிடும் போது இது மிகவும் குறைவாகும். வேளாண்மை, நீர்வளத்துறை ஆகிய இரு துறைகளுக்கு மட்டும் ரூபாய் .50,000 கோடி நிதி ஒதுக்கினால் மட்டும் வேளாண் துறை ஆண்டுக்கு ஆண்டு  6 விழுக்காடு வளர்ச்சி அடைவதை உறுதி செய்ய முடியும்.

வேளாண்மை தான் தமிழ்நாட்டின் முதன்மைத் துறை. அதன் தேவைகள் கடல் போன்றவை. அவை அனைத்தையும் ஒரே ஆண்டில் நிறைவேற்றி விட முடியாது. அந்த வகையில் நடப்பாண்டில் முதலாவது வேளாண் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டிருப்பதையும், அதில் அறிவிக்கப்பட்டுள்ள பல்வேறு திட்டங்களையும் நல்ல தொடக்கமாக கருதலாம்..முடிவு பயனுள்ளதாகவே அமையும் இது அரசின் நல்ல முயற்சி என பலரும் பாராட்டும் நிலை இதை பப்ளிக் ஜஸ்டிஸ் சார்பில் வரவேற்போம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலபக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...