மகாகவி சுப்பிரமணிய பாரதியார் நினைவு நூற்றாண்டு சிறப்பு நிகழ்ச்சிகள்
சென்னை வானொலி ஒன்று மத்திய அலைவரிசை 720 கிலோ ஹெர்ட்ஸில் மகாகவி சுப்பிரமணிய பாரதியார் நினைவு நூற்றாண்டு சிறப்பு நிகழ்ச்சிகள் ஒலிபரப்பட உள்ளன.
11/09/2021 காலை 8.15 மணி – “புது நெறி காட்டிய புலவன்” – மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் படைப்புகளை காலவரிசைப்படி தொகுத்து வெளியிட்ட சீனி.விசுவநாதன் அவர்களுடன் நேர்முகம், உடன் உரையாடுபவர் அருணன்.
11/09/2021 காலை 10.00 மணி – இலக்கியம் பேசுவோம் -
வ.ரா எழுதிய பாரதியின் வாழ்க்கைக்கதை “மகாகவி பாரதியார்” – நூலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த திரைப்பட இயக்குநர், எழுத்தாளர் அம்ஷன் குமார் அவர்கள் பங்கேற்கிறார், உடன் உரையாடுபவர் அருணன்.
சென்னை வானொலி நிகழ்ச்சித் தயாரிப்பாளர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார்.
கருத்துகள்