ஆலயங்களில் பிரார்த்தனை மொட்டை அடிக்க இனிமேல் கட்டணமில்லை என அமைச்சர் பி.கே.சேகர் பாபு அறிவிப்பு
மொட்டை அடிப்பதற்கு இனிக் கட்டணம் வசூலிக்கப்படாதெனும் நடைமுறை செப்டம்பர் மாதம் 5 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும்
இந்துசமய அறநிலையத் துறையின் சட்டமன்ற ப் பேரவையில் மானியக் கோரிக்கை இன்று நடைபெற்றது. அப்போது இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர் பாபு பல அறிவிப்புகளை வெளியிட்டார். அதன்படி,
இந்து சமய அறநிலைய துறையின் அறிவிப்புகள்: வடலூர்
அருட்பிரகாச வள்ளலார் புகழை போற்றும் வகையில் வள்ளலார் சர்வதேச மையம் வடலூரில் அமைக்கப்படும்.
இந்து சமய அறநிலைய துறை சார்பில் சென்னை உட்பட தமிழகத்தில் பத்து இடங்களில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் 150 கோடி செலவில் தொடங்கப்படும்.
தமிழர் திருநாளாம் தை திருநாளில் ரூபாய் 10 கோடி செலவில் அர்சகர்களுக்கு புத்தாடை மற்றும் பணியாளர்களுக்கு சீருடைகள் வழங்கப்படும்.
மணமக்களில் ஒருவர் மாற்றுத்திறனாளியாக இருந்ததாலும் கோவில்களில் நடைபெறும் திருமணத்திற்கு கட்டணம் கிடையாது.
அர்ச்சகர்களுக்கு மாதாந்திரம் ரூ.1,000.
ஒரு கால பூஜை திட்டத்தின் கீழ் உள்ள 12,959 திருக்கோவில்களில் பணிபுரியும் அர்ச்சகர்களுக்கு வழங்க ஆண்டொன்றுக்கு ரூ.13 கோடி ஒதுக்கப்படுமெனவும்.
அர்ச்சகர், ஓதுவார் பயிற்சிக் காலத்தில் வழங்கப்படும் ஊக்கத் தொகை ரூ 1,000 லிருந்து ரூ 3,000 ஆக உயர்த்தி வழங்கப்படும்
திருக்கோவில்களின் பாதுகாப்பிற்கென 10,000 பாதுகாவல் பணியாளர்கள் நியமனம் செய்யப்படுவார்கள்.
அவர்களுக்குத் தேவையான பயிற்சிகள் வழங்கப்படும்.
தமிழகத்தில் இந்த வருடத்திற்குள் ரூ 1,000 கோடி மதிப்பிலான கோவில் சொத்துகள் மீட்கப்படும்.
கோயிலுக்கு சொந்தமான திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெற்றால் மண்டபதிற்கான பராமரிப்பு கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படும்.
உள்ளிட்ட 112 அறிவிப்புகளை அமைச்சர் வெளியிட்டார்.
கருத்துகள்