ஜெய்பீம் திரைப்படம் உண்மை கதையானால் சம்பவம் மாற்றம் ஏன் பாமக நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள் வினா?
பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞர் அணித் தலைவரான மருத்துவர் மற்றும் தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் திரைப்பட நடிகர் சூர்யா சிவக்குமாருக்கு எழுதிய கடிதம்
தற்போது பேசுபொருளாக மாறியது அதில் உள்ள தகவல்கள் அப்படியே "படைப்புச் சுதந்திரம் எந்த சமுதாயத்தையும் இழிவுபடுத்த பயன்படுத்தப்படக்கூடாது. மக்களின் வினாக்களுக்கு விடையளிக்க வேண்டும் என வலியுறுத்தி எழுதப்பட்ட கடிதம்..."!"
"அன்புள்ள நடிகர் சூர்யா அவர்களுக்கு
வணக்கம்!
தமிழ்த்திரையுலகில் இளம் நட்சத்திரமாக அறிமுகமாகி, இப்போது நடிகர், தயாரிப்பாளர் என பன்முக அவதாரம் எடுத்திருப்பதற்கு வாழ்த்துகள். அனைவரும் நேசிக்கும் கதாநாயகனாக திகழ்ந்த நடிகர் சிவக்குமார் அவர்களின் பெயருக்கு புகழ் சேர்க்கும் வகையில் தாங்களும், சகோதரர் கார்த்தியும் தமிழ்த் திரையுலகில் முன்னேறி வருகிறீர்கள்.
ஜெய்பீம்’ திரைப்படத்தில் வன்னியர் சமுதாயம் எந்த அளவுக்கு திட்டமிட்டு இழிவுபடுத்தப்பட்டிருக்கிறது என்பது குறித்து ஆயிரக்கணக்கான மக்களும், இளைஞர்களும் என்னிடம் தெரிவித்து வருகின்றனர். தமிழ்நாடு முழுவதும் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக இதே உணர்வும், மன நிலையும் மேலோங்கியுள்ள நிலையில், தங்களிடமிருந்து அறமற்ற அமைதி மட்டுமே வெளிவந்து கொண்டிருப்பதால் தான் தங்களுக்கு இக்கடிதத்தை நான் எழுத வேண்டியிருக்கிறது. அடக்குமுறை யார் மீது கட்டவிழ்க்கப்பட்டாலும், அவை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. அதற்கு எதிராக நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து போராட வேண்டும்.
‘ஜெய்பீம்’ திரைப்படத்தில் கொடூர மனநிலையும், மனித உரிமையைக் காலில் போட்டு மிதிக்கும் போக்கும் கொண்ட காவல்துறை சார்பு ஆய்வாளரின் வீட்டில், உண்மையிலேயே அவர் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர் இல்லை என்றாலும் கூட, அவரை வன்னியர் என்று காட்டும் வன்மத்துடன் அக்னிக் கலசத்துடன் கூடிய வன்னியர் சங்க நாட்காட்டி இடம்பெற்று இருப்பது, உண்மையான நிகழ்வில் ராஜாக்கண்ணு என்ற பழங்குடியினரை கொலை செய்த காவல் சார்பு ஆய்வாளரின் பெயர் அந்தோணிசாமி என்பது பலரும் அறிந்த உண்மை எனும் நிலையில், அந்த பாத்திரத்திற்கு குருமூர்த்தி என்று பெயர் சூட்டி, வன்னியர் சங்கத்தின் மறைந்த தலைவர் ஜெ.குரு அவர்களை நினைவுபடுத்தும் வகையில் குரு என்று அழைப்பது ஆகியவையும், இந்த அநீதிகளுக்கு வலு சேர்க்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள சில காட்சிகளும் தான் தமிழ்நாட்டில் வாழும் மக்களை கொந்தளிக்கச் செய்துள்ளன. இந்தக் காட்சிகள் கண்டிக்கத்தக்கவை. திரைப்படம் என்பது அழகையும், கலையையும் அவற்றுடன் கலந்து சமூகத்திற்குத் தேவையான நல்லக் கருத்துகளையும் வெளியிட வேண்டிய சிறந்த ஊடகம் ஆகும். ஆனால், ஜெய்பீம் திரைப்படத்தில் அத்தகைய சிறப்பு மிக்க ஊடகம் வன்மத்தை வெளிப்படுத்தவும், அமைதியை சிதைத்து சமூக மோதலை ஏற்படுத்தவும் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இத்தகைய திரைப்படம் தங்களின் தயாரிப்பு நிறுவனத்தில் இருந்து வெளிவந்திருப்பது நியாயமற்றது; மனசாட்சியுள்ளவர்களால் ஏற்க முடியாதது.ஜெய்பீம்’ திரைப்படம் தொடர்பாக தமிழ்நாட்டு மக்களுக்கு பல ஐயங்கள் உள்ளன. அவர்களின் நியாயமான ஐயங்களைப் போக்க அந்தத் திரைப்படத்தின் தயாரிப்பாளர் என்ற முறையில் கீழ்க்கண்ட வினாக்களுக்கு நீங்கள் விடையளிக்க வேண்டும்.படைப்புச் சுதந்திரம் எந்த சமுதாயத்தையும் இழிவுபடுத்த பயன்படுத்தப்படக்கூடாது. மக்களின் வினாக்களுக்கு விடையளிக்க வேண்டும்" என வலியுறுத்தி
எழுப்பிய கேள்விக்கு நடிகர் சிவகுமாரின் மூத்த மகனும் பிரபல நடிகருமான சூர்யா விளக்கமளித்ததில்.,
"மதிப்புக்குரிய மாநிலங்களவை உறுப்பினர் அன்புமணி ராமதாஸுக்கு வணக்கம். தங்கள் கடிதத்தை சமூக ஊடங்களின் வாயிலாகப் படித்தேன். என் மீதும் எனது குடும்பத்தார் மீதும் தாங்கள் காட்டியிருக்கும் அன்பிற்கும் நன்றி.
நீதிநாயகம் சந்துரு வழக்கறிஞராக இருந்தபோது நடத்திய ஒரு வழக்கில், அதிகாரத்தை எதிர்த்து சட்டப்போராட்டம் மூலம் நீதி எவ்வாறு நிலைநாட்டப்பட்டது என்பது ஜெய்பீம் படத்தின் மையக்கரு. பழங்குடியின மக்கள் நடைமுறையில் சந்திக்கும் பல்வேறு பிரச்சனைகளையும் படத்தில் பேச முயற்சித்திருக்கிறோம்.
கடிதத்தில் நீங்கள் குறிப்பிட்டுள்ளதைப் போல, எந்தவொரு குறிப்பிட்ட தனிநபரையோ, சமுதாயத்தையோ அவமதிக்கும் நோக்கம் ஒருபோதும் எனக்கோ, படக்குழுவினருக்கோ இல்லை. சிலர் சுட்டிக் காட்டிய பிழையும், உடனடியாகத் திருத்தி சரி செய்யப்பட்டதைத் தாங்கள் அறிவிர்கள் என நினைக்கிறேன்.
படைப்புச் சுதந்திரம் என்ற பெயரில் எந்தவொரு சமுதாயத்தையும் இழிவுபடுத்தும் உரிமை இங்கு எவருக்கும் வழங்கப்படவில்லை என்ற தங்களின் கருத்தை முழுவதுமாய் நான் ஏற்கிறேன். அதேபோல, படைப்பு சுதந்திரத்துக்கு அச்சுறுத்தல் வராமல் காக்கப்பட வேண்டும் என்பதை நீங்களும் ஏற்பீர்கள் என்று நம்புகிறேன்.ஒரு திரைப்படம் என்பது ஆவணப்படம் அல்ல.
இத்திரைப்படத்தின் கதை, உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு புனையப்பட்டுள்ளது. இதில், வரும் கதாபாத்திரங்கள், பெயர்கள், சம்பவங்கள் அனைத்தும் யாரையும் தனிப்பட்ட அளவில் குறிப்பிடவிலை என்பதை தெரிவித்துக்கொள்கிறோம் என்கிற அறிவிப்பைப் படத்தின் தொடக்கத்திலேயே பதிவு செய்திருக்கிறோம்.
எளிய மக்களின் மீது நலன்மீது அக்கறையில்லாத யாருடைய கையில் அதிகாரம் கிடைத்தாலும், அவர்கள் ஒரே மாதிரிதான் நடந்துகொள்கிறார்கள். அதில், சாதி மத, மொழி, இன பேதம் இல்லை. உலகம் முழுவதும் இதற்கு சான்றுகள் உண்டு. படத்தின் மூலம் அதிகாரத்தை நோக்கி எழுப்பிய கேள்வியை, குறிப்பிட்ட பெயர் அரசியலுக்குள் சுருக்க வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
ஒருவரைக் குறிப்பிடுவதாக நீங்கள் சொல்லும் அந்தக் கதாபாத்திரத்தின் பெயர், வேறொருவரையும் குறிப்பதாக ஒரு பத்திரிகையாளர் குறிப்பிடுகிறார். எதிர்மறைக் கதாபாத்திரங்களுக்கு எந்தப் பெயர் வைத்தாலும் அதில் யாரேனும் மறைமுகமாக குறிப்பிடப்படுவதாக கருதப்படுமேயானால்,அதற்கு முடிவே இல்லை.
அநீதிக்கு எதிராக ஒன்றிணைய வேண்டிய போராட்டக் குரல், பெயர் அரசியலால் மடைமாற்றம் செய்யப்பட்டு நீர்த்துப் போகிறது. சக மனிதர்கள் வாழ்வு மேம்பட என்னால் முடிந்த பங்களிப்பைத் தொடர்ந்து செய்கிறேன். நாடு முழுவதிலும் எல்லா தரப்பு மக்களின் பேரன்பும், பேராதரவும் எனக்கு இருக்கிறது. விளம்பரத்துக்காக யாரையும் அவமதிக்க வேண்டிய எண்ணமோ, தேவையோ எனக்கு இல்லை என்பதை பணிவுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
சமத்துவமும், சகோதரத்துவமும் பெருக நாம் அனைவரும் அவரவர் வழியில் தொடர்ந்து செயல்படுவோம். தங்கள் புரிதலுக்கு நன்றி’ என்று குறிப்பிட்டுள்ளார்." அதாவது அன்புமணி படத்தை தவறாக புரிந்து கொண்டார் எனவும் நடிகர் சூர்யா நடித்த மற்றும் தயாரித்த ஜெய் பீம் திரையில் காட்டிய சம்பவங்கள் சரிதான் எனவும் அரசியலுக்குள் அன்புமணி சிக்க வைப்பது போன்ற தோற்றத்தை உண்டாக்குவது போல அறிக்கை மூலம் குறிப்பிட்ட நடிகர் சூர்யா. கருத்து
பாமகவினருக்கு அதிருப்தியை, உருவாக்கி திரைப்படத்தில் தவறாக கதை களத்தை அமைத்தது மட்டும் இல்லாமல் தான் செய்தது சரி என படைப்பு கருத்து சுதந்திரதிற்கு அச்சுறுத்தல் வர கூடாது, நான் நாடு முழுவதும் தெரிந்தவன் எனக்கு விளம்பரம் தேவையில்லை என நடிகர் சூர்யா குறிப்பிட்ட. சூழலில்தான் பாமக சேலம் மேற்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் இரா அருள் நடிகர் சூர்யாவிற்கு சூசகமாக பதிலளித்ள்ளார்.
இது குறித்து தனது முகநூலில் பதிவில் "அண்ணன் அன்புமணிக்கு சவால்விடும் குள்ளன் படத்தை சேலம் மாவட்டத்தில் இனி ஓட விடமாட்டோம் -அன்புமணியின் தம்பிகள் (தம்பிங்க தான் ஜெயிப்பாங்க) எனவும் குறிப்பிட்டுள்ளார்.
அவர் சூர்யாவை தான் குள்ளன் என விமர்சனம் செய்திருப்பது அவர் போட்டிருந்த பதிவிற்குக் கீழே கமெண்ட் செய்தவர்களை வைத்து அறிய முடிகிறது, இனி சூர்யா திரைப்படம் மட்டும் அல்ல அவரது சகோதரர் கார்த்தி திரைப்படமும் திரையில் வெளியாவது சந்தேகம் தான் என்பது விவரம் அறிந்தவர்கள் பார்வையாக உள்ளது. இதில் பொதுநீதி யாதெனில் :- முதலில் திரைப்படம் உண்மைச் சம்பவம் கொண்டு தயாரிக்கப்படுகிறது என்றால் பெயர் உள்ளிட்ட எந்த விவரமும் மாற்றம் செய்யக்கூடாது. மேலும் அந்தக் கதை பார்வதி சம்பந்தப்பட்ட நிகழ்வு, ஆகவே முதலில் அவரது ஒப்புதல் தேவை! பாவம்?! விபரம் தெரியாத அந்த மூதாட்டி இதில் கதைக் கலப்படம் செய்யவேண்டிய அவசியம் ஏன் என்பதே இங்கு வினாவாகும்? இதற்குத் தயாரிப்பு செய்த நடிகர் சூரியாவும் அவரது மனைவி நடிகை ஜோதிகாவும் பதில் கூறவேண்டுமேயன்றி, பதில் அரசியல் உள்நோக்கம் தேவையா என்பதே எழுவினா ? இனி பார்வதி ராயல்டி கேட்டால் நிலை என்ன என்பதை பலரும் மறந்து போகக் காரணம் அரசியல் தான். அதில் நடித்த நீதி கேட்கும் சூரியா தான் இதற்கு பதில் கூற வேண்டும்.
கருத்துகள்