முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இரண்டாவது நாளாகத் தொடரும் நாடாளுமன்ற உறுப்பினரின் உள்ளிருப்புப் போராட்டம்

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இரண்டாவது நாளாகத் தொடரும் நாடாளுமன்ற உறுப்பினரின் உள்ளிருப்புப் போராட்டம்.


கரூர் நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் . செ.ஜோதிமணி தன் அலுவலகப் பணியை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார்.மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை உறுப்புகள் பொருத்துவதற்காக மத்திய அரசின் சமூகநீதி - அதிகாரமளித்தல் துறையின் மூலம்  செயல்படுத்தப்படுகிறதிட்டத்தின்படி நாடாளுமன்ற உறுப்பினர்கள் முயற்சியின் மூலமும் பரிந்துரை மூலமும், பெரிய அளவில் முகாம் நடத்தி பயனாளிகள் கண்டறியப்படுவதுண்டு.

அதன்படி, கரூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் செ.ஜோதிமணி ஆயிரக்கணக்கான பயனாளிகளுக்கு  தேவை இருப்பதை அறிந்து கரூர் மக்களவைத் தொகுதியில் அடங்கிய திண்டுக்கல், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை மாவட்டங்களைச் சேர்ந்த பகுதிகளில் அந்தந்த மாவட்ட ஆட்சியர்களுக்குத் தெரிவித்து, சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு பலருக்கு பயன் கிடைக்க செய்யப்பட்டுள்ளது.


கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் தன்னை அலட்சியம் செய்வதாகவும் மைய அரசின் உதவியை மக்களுக்குச் செல்லவிடாமல் தடுப்பதாகவும் குற்றம்சாட்டுகிறார் நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் செ.ஜோதிமணி.

இந்த பிரச்னைக்குக் காரணம், இது தொடர்பான தகவல்பரிமாற்றத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் செ.ஜோதிமணிக்கு ஆட்சியர் அனுப்பிய விளக்கக் கடித வாசகம்தான் என்கிறார்கள், மாவட்டத்திலுள்ள பலர்.



மாநில அரசாங்கத்தின் மூலம் இப்படியான முகாம்கள் நடத்தப்படுவதாகவும் தேவைப்பட்டால் நாடாளுமன்ற உறுப்பினர் செ.ஜோதிமணியின் யோசனைப்படி முகாம் நடத்தலாமென்றும் அவர் குறிப்பிட்டிருப்பதை, செ.ஜோதிமணி பிரச்னையாக எடுத்துக்கொண்டுள்ளார் நான் எனது கரூர் நாடாளுமன்ற தொகுதியில் உள்ள 6800 கிராமங்களில் 6300 கிராமங்களுக்கு போய் மக்களைச் சந்தித்திருக்கிறேன். உதவி கேட்டு மனு அளித்த ஆயிரக்கணக்கான மாற்றுத்திறனாளிகளின் எண்ணிக்கையைக் கண்டு அதிர்ந்து போனேன். தேவை இருக்கிறது என்று தெரியாமலா இந்தத் திட்டத்தைக் கேட்டு வாங்கியிருப்பேன்?” என்பது அவரின் பதில் வாதம்.



”மத்திய அரசின் திட்டத்தைச் செயல்படுத்த மறுக்க மாவட்ட ஆட்சியருக்கு அதிகாரம் உள்ளதா?எதனடிப்படையில் மாவட்ட ஆட்சியர் இப்படியொரு பதில் கடிதம் கொடுக்கிறார்? மத்திய அரசின் திட்டமானாலும், தமிழக அரசின் திட்டமானாலும் அடிப்படையில் மக்கள் வரிப்பணத்தில் நடத்தப்படுவது தான். கரூருக்கு மத்திய அரசின் திட்டம் இப்பொழுது தேவையில்லை என்று எதனடிப்படையில் மாவட்ட ஆட்சியர் முடிவுக்கு வந்தார்?



மத்திய அரசின் சமூக நீதி அமைச்சகத்திடம் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்க ADIP முகாம் நடத்த வேண்டுமென்று கேட்டுப் பெற்று வந்தேன். கரூர் நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட திண்டுக்கல், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை ஆட்சியர்கள் முகாம் நடத்தும் போது ஏன் கரூர் மாவட்ட ஆட்சியர் நடத்தவில்லை?” என வரிசையாக கேள்விகளை அடுக்குகிறார், நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் செ.ஜோதிமணி.

ஆர்ப்பாட்டம் செய்த செ.ஜோதிமணியிடம், அவருக்கு முன்பாக தரையில் அமர்ந்து சமாதானப்படுத்த முயன்றார், மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர். ஆனால் செ.ஜோதிமணியோ, மைய அரசின் உதவிக்கான முகாம்களை நடத்தும் தேதியை உடனே சொன்னால் தான் ஆர்ப்பாட்டத்தை முடிப்பேன் என உறுதியாகச் சொல்லிவிட்டார். இதில் அரசியல் கலந்த நடவடிக்கையா அல்லது வேறு வகை நிகழ்வின் பின்னணியாக என்பது புரியாமல் மக்கள் குழப்பமடைந்துள்ளார்கள். அது போராட்டம் முடிவுக்கு வரும் போது தெரியும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அமலாக்கத்துறை தற்காலிகமாக முடக்கிய நியோ மேக்ஸின் சில சொத்துகள்

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பல்லாயிரம் கோடிகள் பணத்தை முதலீடு செய்தனர். அதில் அரசுப்பணியில் பல்வேறு துறைகளில் இருந்து கொண்டு வருமான வரி செலுத்தாமல் முறைகேடு செய்து தவறான வழியில் லஞ்சமாக வாங்கிய இரகசியப் பணத்தையுடைய நபர்கள் செய்த முதலீட்டு கருப்புப் பணமும் அதில் அடங்கும், மேலும் அவர்கள் நிலை என்பது திருடனுக்குத் தேள் கொட்டிய நிலை போல புகார் கொடுத்து மேலும் மாட்டிக் கொள்ள அவர்கள் விரும்பவில்லை, அது ஒரு பெரிய பட்டியல் நீள்கிறது அதுவும் ED நன்கு அறியும். ஆகவே அவர்கள் தங்களை தங்கள் தற்காலிக செல்வாக்கைப் பயன்படுத்தி திரைமறைவில் மேற்கண்ட ஜாமீனில் வெளிவந்த குற்றவாளிகள் மூலம் பேரமும்,  கட்டப்பஞ்சாயத்தும் நடத்தி இரகசிய வழியாக பணம் அல்லது அவர்கள் வேறு பினாமி மூலம் வாங்கிய நிலையில் அதை பொருளாதாரக் குற்றப்பிரிவு இதுவரை புலனாய்வு செய்து கைப்பற்றாமல் உள்ள இரகசியமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மூலம் பணத்தை திரும்ப பெறுவதற்கு அந்த இலஞ்ச ஊழல் கருப்புப்பண முதலைகள் ஒரு பக்கம் இரகசிய வழியாக முயலும் நிலையில் அதை பொருளாதார குற்றப்பிரிவு கண்டும் காணாமல் தான் இதுவரை செயல்பட்ட நிலைய...