தேசிய பாதுகாப்பு எஸ்டேட் வளாக மேலாண்மை நிறுவனத்தில் நில அளவை சிறப்பு மையத்தைப் பாதுகாப்பு அமைச்சர் தொடங்கி வைத்தார்.
மத்திய அரசின் திறன் மேம்பாட்டு முயற்சியின் ஒரு பகுதியாக, மத்திய பயிற்சி நிறுவனங்களில் ஒன்றான தேசிய பாதுகாப்பு எஸ்டேட் வளாக மேலாண்மை நிறுவனம் நில அளவை சிறப்பு மையத்தை உருவாக்கியுள்ளது. இதனைப் பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் டிசம்பர் 16-ம்தேதி தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய ராஜ்நாத் சிங், மற்ற அரசு துறைகளைப் போல, பாதுகாப்பு துறையிலும், நில அளவை முக்கியமானது என்று கூறினார். சிறப்பு மையத்தை உருவாக்கியிருப்பது மிகச்சிறந்த முன்முயற்சி என்று அவர் பாராட்டினார்.
கருத்துகள்