ஜமாஅத்தில் வாடகைக்கு பிரியாணி அண்டா கேட்டதால் மோதல் கலவரம் திருமணமும் நின்று போனது
தண்டரம்பட்டு அருகே ஏற்பட்ட கோஷ்டி மோதலில் பத்து பேர் படுகாயம் பதிமூன்று நபர்கள் கைது.
பிரியாணி சமைக்க பெரிய பாத்திரம் கேட்டதால் மோதல் வெடித்தது திருமணமும் நின்று போன நிலையில்
சம்பவ இடத்தில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளர்
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகிலுள்ள தரடாப்பட்டு கிராமம் இணையத்துல்லா (வயது 45), முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவராவார். இவரது பதவிக் காலத்தில் முறைகேடு நடைபெற்றதாக புகார் வந்த நிலையில் . அது தொடர்பாக அதே ஊரைச் சேர்ந்த சையத் கவுஸ்கான் (வயது 50) சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கு தொடர்பாக முறைகேடு நிரூபிக்கப்பட்டதால் இணையத்துல்லாவுக்கு விசாரணை முடிவில் மூலமாக அபராதம் விதிக்கப்பட்டது.
தொடர்ந்து இருதரப்பினருக்கும் இடையே பகை முன்விரோதம் ஏற்பட்டதன் காரணமாக இருவருக்குமிடையே அடிக்கடி மோதல்கள் ஏற்பட்டு வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இவர்களுக்குப் பலமுறை காவல்துறை மற்றும் தாசில்தார் மூலமாக சமாதானக் கூட்டம் மற்றும் பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. ஆனால் இவர்களுக்குள் உடன்பாடு ஏற்படாத நிலையில்.
சில மாதங்களுக்கு முன்பு சையத் கவுஸ்கானை உள்ளூர்ஜமாத்திலிருந்து விலக்கி வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து சையத் கவுஸ்கானின் உறவினர் குடும்பத்தில் அதே ஊரில் திருமண ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. திருமணத்திற்கு பிரியாணி சமையல் செய்வதற்காக கவுஸ்கான் மற்றும் உறவினர்கள் ஜமாத்திற்கு சென்று வாடகைக்கு விடும் சமையல் பாத்திரங்களைக் கேட்டுள்ளனர். அவர் நடந்த தவறுகளுக்கு மன்னிப்பு கேட்பதாகவும், திருமணத்தை நடத்தித் தரும்படியும் ஜமாஅத் பிரமுகர்களிடம் தெரிவித்துள்ளனர். ஆனால் அதற்கு ஜமாஅதார் மறுப்பு தெரிவித்த காரணமாக இரு தரப்புக்குமிடையே வாய்த்தகராறு ஏற்பட்ட பின்னர் பெரியதாகி கலவரமாக மாறியது. இருதரப்பினரும் கட்டைகள் மற்றும் கத்தி ஆகியவற்றுடன் சரமாரியாக தாக்கிக் கொண்டனர். இருசக்கர வாகனம் மற்றும் கார் ஆகியவற்றை அடித்து நொறுக்கினர். இந்த கலவரத்தில் இணையதுல்லா உள்பட பத்துப் பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் திருவண்ணாமலை அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அவர்களில் இருவர் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் நூற்றுக்கணக்கான ஆயுதப்படைக் காவல்துறையினர் அக் கிராமத்தில் குவிக்கப்பட்டு கலவரம் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. சம்பவம் நடைபெற்ற பகுதியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன்குமார் ரெட்டி, கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளர் அசோக்குமார், வெள்ளைத்துரை ஆகியோர் நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். சாத்தனூர் காவல்துறையினர் நடந்த கலவரம் தொடர்பாக 39 நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்து, சையத் கவுஸ்கான் உள்ளிட்ட 13 நபர்களைக் கைது செய்தனர். மேலும் தண்ராம்பட்டு கிராமத்தில் காவல்துறையினர் குவிக்கப்பட்டு இரவு பகலாக கண்காணிப்பு பணியில் ஈடுபடுகின்றனர். இந்தக் கலவரத்தின் காரணமாக நடைபெற இருந்த திருமணமும் நின்றது. அந்தக் கிராம பகுதியில் இந்த சம்பவம் பரபரப்பாகப் பேசப்படுகிறது.
கருத்துகள்