முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் எடுத்த நடவடிக்கைகள்: மாநிலங்களவையில் மத்திய அமைச்சர் பதில்

பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் எடுத்த நடவடிக்கைகள்: மாநிலங்களவையில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி பதில்


மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் திருமதி ஸ்மிருதி இரானி, மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்த பதிலில் கூறியிருப்பதாவது:


நாட்டில் ஊட்டச்சத்து குறைபாட்டை போக்க, தேசிய ஊட்டச் சத்து திட்டம் அமல்படுத்தப்பட்டது. இத்திட்டத்துக்கு கடந்த 2 ஆண்டுகளில் மொத்தம் ரூ.  5,312 கோடி வழங்கப்பட்டுள்ளது. இதில் ரூ. 2,985 கோடி பயன்படுத்தப்பட்டுள்ளது.  திறன் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 10.22 லட்சம் முன்களப் பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக 6.61 லட்சம் பேர் டிஜிட்டல் தளத்தில் பயிற்சி பெறுகின்றனர். இதுவரை 8.3 லட்சம் அங்கன்வாடி பணியாளர்கள் / உதவியாளர்கள் பயிற்சி பெற்றுள்ளனர். இவர்கள் வீடு வீடாக சென்று குழந்தைகளின் எடை மற்றும் உயரத்தை அளவிடுவதற்காக , மாதந்தோறும் முறையே ரூ.500, ரூ.250  என ஊக்கத் தொகை அளிக்கப்படுகிறது.


ஊட்டச்சத்து திட்டம் தொடங்கப்பட்டதில் இருந்து புத்தாக்க திட்டத்தின் கீழ் 26 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள் 50க்கும் மேற்பட்ட புதுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன.


பெண்களுக்கான வேலைவாய்ப்பு, தொழில் முனைவை மேம்படுத்த பிரதமரின் முத்ரா திட்டம், தொடக்க நிறுவன திட்டம், திறன் இந்தியா திட்டம் ஆகியவை தொடங்கப்படுகின்றன. குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம், பண்ணை சாரா துறையில், பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்க திட்டம் என்ற பெயரில் கடனுடன் கூடிய மானிய திட்டத்தை அமல்படுத்துகிறது.  இதன் மூலம் ஊரக பகுதிகளில் திட்ட செலவில் 25 சதவீதத்தையும், நகர்ப்புறத்தில் 15 சதவீதத்தையும் பயனாளிகள் மானியமாக பெற முடியும்.


உளவியல் மற்றும் சமூக உதவி மையமான நிம்ஹன்ஸ்-ல் உள்ள மருத்துவர்கள் மற்றும் ஆலோசகர்கள் துயரங்களை போக்குவதற்கான ஆலோசனைகளை  08046110007 என்ற போன் எண் மூலம் கடந்த 2020 மார்ச் மாதம் முதல் வழங்கி வருகின்றனர். இதில் ஏராளமான பெண்கள், குழந்தைகள்  உளவியல் ஆலோசனை பெற்றுள்ளனர்.

குழந்தைகளிடம் ஊட்டச்சத்து குறைபாட்டை மேம்படுத்த அங்கன்வாடி சேவைகள், வளர்இளம் பெண்களுக்கான திட்டம், பிரதமரின் மாத்ரு வந்தனா திட்டம் ஆகியவை ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு சேவைகள் திட்டத்தின் கீழ் மத்திய அரசு அமல்படுத்துகிறது.

அங்கன்வாடி சேவைகள் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 13,89,110 அங்கன்வாடி மையங்கள் செயல்பாட்டில் உள்ளன. தமிழகத்தில் 54, 439 அங்கன்வாடி மையங்கள் செயல்பாட்டில் உள்ளன. அங்கன்வாடி சேவை திட்டம் மூலம் தமிழகத்தில் 34,15,098 பயனாளிகள் பயன் பெறுகின்றனர்.

அங்கன்வாடி சேவைகளின் கீழ் துணை ஊட்டசத்து திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. குழந்தைக்கு முதல் 6 மாதம் வரை தாய்பால் மட்டுமே கொடுக்க பரிந்துரைக்கப்படுகிறது. 6- 36 மாத குழந்தைகளுக்கு நுண்பூட்டசத்து உணவு பொருட்கள் அங்கன்வாடி மையங்கள் மூலம் வழங்கப்டுகின்றன. 3-6 வயது குழந்தைகளுக்கு பால், வாழைப்பழம் மற்றும் அந்தந்த சீசனில் கிடைக்கும் பழங்கள் மற்றும் சூடான உணவு வழங்கப்படுகின்றன. ஊட்டசத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கு 8 முதல் 10 கிராம் அளவில் நுண்ணாட்ட சத்து உணவுப் பொருட்கள் வழங்கப்படுகின்றன. இதேபோல் கர்ப்பிணி  பெண்களுக்கு ஊட்டசத்து உணவு பொருட்கள் வழங்கப்டுகின்றன.

பெண்களின் மேம்பாட்டுக்காக, பெண் குழந்தைகளை படிக்க வைப்போம், பிரதமரின் வீட்டு வசதி திட்டம், தேசிய சமூக உதவி திட்டம், பிரதமரின் வியாய் வந்தனா திட்டம், சமக்ரா சிக்‌ஷா திட்டம், கல்வி உதவித் தொகை திட்டம், பாபு ஜாக்ஜீவன் ராம் சத்ராவாஸ் திட்டம், தூய்மை பள்ளி திட்டம் போன்றவற்றை மத்திய அரசு மேற்கொள்கிறது. 

கர்ப்பிணி பெண்கள் மற்றும் கருவில் இருக்கும் குழந்தைகள் ஆகியோரின் ஆரோக்கியம் மற்றும் நலனுக்காக ஜனனி சுரக்‌ஷா திட்டம், ஜனனி சிசு சுரக்‌ஷா திட்டம் ஆகியவற்றை மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது. ஜனனி சுரக்‌ஷா திட்டம் மூலம், தகுதியான பயனாளிகள் ரூ.6,000 பெறுகின்றனர்.

தமிழ்நாட்டில் 2020-21ம் ஆண்டில் அங்கன்வாடி சேவைகள் திட்டத்தின் கீழ் ரூ. 632 கோடி பயன்படுத்தப்பட்டுள்ளது.* குழந்தை உரிமைகள் பாதுகாப்புக்கான தேசிய ஆணையத்துக்கு 2020-21ம் ஆண்டில் ரூ. 18 கோடி ஒதுக்கப்பட்டது.  குழந்தை பாதுகாப்புசேவைகள் திட்டத்தின் கீழ் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு 2020-21ம் ஆண்டில் ரூ. ரூ.709  கோடி  வழங்கப்பட்டுள்ளது.

கொவிட் தொற்று காலத்தில் பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறை பிரச்னைகளை தீர்க்க பல நடவடிக்கைகளை பெண்களுக்கான தேசிய ஆணையம் மேற்கொண்டது. www.ncw.nic.in என்ற இணையதளம், 7217735372 என்ற வாட்ஸ் அப் எண் ஆகியவற்றில் புகார்கள் பெறப்பட்டு, காவல்துறையுடன் இணைந்து பெண்களுக்கு தேவையான உதவிகள் வழங்கப்பட்டன.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவில் யானை ஐராவதமானது

இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதியால் திருவண்ணாமலை சன்யாசிக்கு திருச்சுழி ஆலயத்தில் வைத்து தானமளிக்கப்பட்ட ஆலயங்கள் தான்  திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம் பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தான மடாலயத்தின் பராமரிப்பிலுள்ள அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவிலுக்கு 1971-ஆம் ஆண்டு ஆத்தங்குடி கா.அரு.கா.காடப்ப செட்டியார் குடும்பத்தின் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி அதில்  யானை சுப்புலட்சுமி சிறிய குட்டி யானையாக கேரளாவில் இருந்து வனத்துறை மூலம் வாங்க பழைய 46 வது மடாதிபதி தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியார் அடிகளார் மூலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த யானை கோவில் அருகேயுள்ள மடத்தின் தகரக் கூடாரத்தில் உள் பகுதியில் கிடுகு வேயப்பட்ட நிலையில் மூன்றாவது யானைப் பாகன் கார்த்திக் பராமரிப்பு செய்த நிலையில் ஆலயத்தில் அழகு மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கலந்து பாதுகாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தீ பற்றி பரவியதில் முன் பின் கால்கள் கட்டப்பட்டிருந்த யானை கோவில் யானை பாகன் அருகில் இல்லாமல் இருந்ததால் வெப்பம் தாக்காமல் இருக்க தகர மேற்கூரைக்கு அட...