முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் எடுத்த நடவடிக்கைகள்: மாநிலங்களவையில் மத்திய அமைச்சர் பதில்

பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் எடுத்த நடவடிக்கைகள்: மாநிலங்களவையில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி பதில்


மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் திருமதி ஸ்மிருதி இரானி, மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்த பதிலில் கூறியிருப்பதாவது:


நாட்டில் ஊட்டச்சத்து குறைபாட்டை போக்க, தேசிய ஊட்டச் சத்து திட்டம் அமல்படுத்தப்பட்டது. இத்திட்டத்துக்கு கடந்த 2 ஆண்டுகளில் மொத்தம் ரூ.  5,312 கோடி வழங்கப்பட்டுள்ளது. இதில் ரூ. 2,985 கோடி பயன்படுத்தப்பட்டுள்ளது.  திறன் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 10.22 லட்சம் முன்களப் பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக 6.61 லட்சம் பேர் டிஜிட்டல் தளத்தில் பயிற்சி பெறுகின்றனர். இதுவரை 8.3 லட்சம் அங்கன்வாடி பணியாளர்கள் / உதவியாளர்கள் பயிற்சி பெற்றுள்ளனர். இவர்கள் வீடு வீடாக சென்று குழந்தைகளின் எடை மற்றும் உயரத்தை அளவிடுவதற்காக , மாதந்தோறும் முறையே ரூ.500, ரூ.250  என ஊக்கத் தொகை அளிக்கப்படுகிறது.


ஊட்டச்சத்து திட்டம் தொடங்கப்பட்டதில் இருந்து புத்தாக்க திட்டத்தின் கீழ் 26 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள் 50க்கும் மேற்பட்ட புதுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன.


பெண்களுக்கான வேலைவாய்ப்பு, தொழில் முனைவை மேம்படுத்த பிரதமரின் முத்ரா திட்டம், தொடக்க நிறுவன திட்டம், திறன் இந்தியா திட்டம் ஆகியவை தொடங்கப்படுகின்றன. குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம், பண்ணை சாரா துறையில், பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்க திட்டம் என்ற பெயரில் கடனுடன் கூடிய மானிய திட்டத்தை அமல்படுத்துகிறது.  இதன் மூலம் ஊரக பகுதிகளில் திட்ட செலவில் 25 சதவீதத்தையும், நகர்ப்புறத்தில் 15 சதவீதத்தையும் பயனாளிகள் மானியமாக பெற முடியும்.


உளவியல் மற்றும் சமூக உதவி மையமான நிம்ஹன்ஸ்-ல் உள்ள மருத்துவர்கள் மற்றும் ஆலோசகர்கள் துயரங்களை போக்குவதற்கான ஆலோசனைகளை  08046110007 என்ற போன் எண் மூலம் கடந்த 2020 மார்ச் மாதம் முதல் வழங்கி வருகின்றனர். இதில் ஏராளமான பெண்கள், குழந்தைகள்  உளவியல் ஆலோசனை பெற்றுள்ளனர்.

குழந்தைகளிடம் ஊட்டச்சத்து குறைபாட்டை மேம்படுத்த அங்கன்வாடி சேவைகள், வளர்இளம் பெண்களுக்கான திட்டம், பிரதமரின் மாத்ரு வந்தனா திட்டம் ஆகியவை ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு சேவைகள் திட்டத்தின் கீழ் மத்திய அரசு அமல்படுத்துகிறது.

அங்கன்வாடி சேவைகள் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 13,89,110 அங்கன்வாடி மையங்கள் செயல்பாட்டில் உள்ளன. தமிழகத்தில் 54, 439 அங்கன்வாடி மையங்கள் செயல்பாட்டில் உள்ளன. அங்கன்வாடி சேவை திட்டம் மூலம் தமிழகத்தில் 34,15,098 பயனாளிகள் பயன் பெறுகின்றனர்.

அங்கன்வாடி சேவைகளின் கீழ் துணை ஊட்டசத்து திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. குழந்தைக்கு முதல் 6 மாதம் வரை தாய்பால் மட்டுமே கொடுக்க பரிந்துரைக்கப்படுகிறது. 6- 36 மாத குழந்தைகளுக்கு நுண்பூட்டசத்து உணவு பொருட்கள் அங்கன்வாடி மையங்கள் மூலம் வழங்கப்டுகின்றன. 3-6 வயது குழந்தைகளுக்கு பால், வாழைப்பழம் மற்றும் அந்தந்த சீசனில் கிடைக்கும் பழங்கள் மற்றும் சூடான உணவு வழங்கப்படுகின்றன. ஊட்டசத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கு 8 முதல் 10 கிராம் அளவில் நுண்ணாட்ட சத்து உணவுப் பொருட்கள் வழங்கப்படுகின்றன. இதேபோல் கர்ப்பிணி  பெண்களுக்கு ஊட்டசத்து உணவு பொருட்கள் வழங்கப்டுகின்றன.

பெண்களின் மேம்பாட்டுக்காக, பெண் குழந்தைகளை படிக்க வைப்போம், பிரதமரின் வீட்டு வசதி திட்டம், தேசிய சமூக உதவி திட்டம், பிரதமரின் வியாய் வந்தனா திட்டம், சமக்ரா சிக்‌ஷா திட்டம், கல்வி உதவித் தொகை திட்டம், பாபு ஜாக்ஜீவன் ராம் சத்ராவாஸ் திட்டம், தூய்மை பள்ளி திட்டம் போன்றவற்றை மத்திய அரசு மேற்கொள்கிறது. 

கர்ப்பிணி பெண்கள் மற்றும் கருவில் இருக்கும் குழந்தைகள் ஆகியோரின் ஆரோக்கியம் மற்றும் நலனுக்காக ஜனனி சுரக்‌ஷா திட்டம், ஜனனி சிசு சுரக்‌ஷா திட்டம் ஆகியவற்றை மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது. ஜனனி சுரக்‌ஷா திட்டம் மூலம், தகுதியான பயனாளிகள் ரூ.6,000 பெறுகின்றனர்.

தமிழ்நாட்டில் 2020-21ம் ஆண்டில் அங்கன்வாடி சேவைகள் திட்டத்தின் கீழ் ரூ. 632 கோடி பயன்படுத்தப்பட்டுள்ளது.* குழந்தை உரிமைகள் பாதுகாப்புக்கான தேசிய ஆணையத்துக்கு 2020-21ம் ஆண்டில் ரூ. 18 கோடி ஒதுக்கப்பட்டது.  குழந்தை பாதுகாப்புசேவைகள் திட்டத்தின் கீழ் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு 2020-21ம் ஆண்டில் ரூ. ரூ.709  கோடி  வழங்கப்பட்டுள்ளது.

கொவிட் தொற்று காலத்தில் பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறை பிரச்னைகளை தீர்க்க பல நடவடிக்கைகளை பெண்களுக்கான தேசிய ஆணையம் மேற்கொண்டது. www.ncw.nic.in என்ற இணையதளம், 7217735372 என்ற வாட்ஸ் அப் எண் ஆகியவற்றில் புகார்கள் பெறப்பட்டு, காவல்துறையுடன் இணைந்து பெண்களுக்கு தேவையான உதவிகள் வழங்கப்பட்டன.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த