முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

குடியரசு தினத்தை முன்னிட்டு, குடியரசுத் தலைவர் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரை பிரதமர் வாழ்த்து

குடியரசு தினத்தை முன்னிட்டு, குடியரசுத் தலைவர் திரு ராம்நாத் கோவிந்த் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரை


அன்பான நாட்டு மக்களே!

வணக்கம்!

நாட்டின் 73வது குடியரசு தினத்தை முன்னிட்டு இந்தியா மற்றும் வெளிநாட்டில் உள்ள இந்தியர்கள் அனைவருக்கும் எனது இதயபூர்வமான வாழ்த்துக்கள். இது நாம் அனைவருக்கும் பொதுவான, இந்தியத்தன்மையை கொண்டாடுவதற்கான தருணம். 1950ம் ஆண்டு இதே தினத்தில்தான், நம் அனைவரின் புனிதமான சாரம், ஒரு முறையான வடிவத்தை பெற்றது. இந்நாளில்தான், இந்தியா மிகப் பெரிய ஜனநாயக குடியரசாக நிறுவப்பட்டது மற்றும் இந்திய மக்களாகிய நாம், அரசியல் சாசனத்தை, நமது ஒட்டுமொத்த தொலைநோக்காக நடைமுறைப்படுத்தினோம். நமது ஜனநாயகத்தின் பன்முகத்தன்மை மற்றும் உயிரோட்டம் உலகம் முழுவதும் பாராட்டப்படுகிறது. இந்த ஒற்றுமை உணர்வு, ஒரே நாடாக இருப்பதுதான் ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு கொண்டாட்டம் பெருந்தொற்று காரணமாக எளிமையாக இருக்கலாம். ஆனால் உணர்வு எப்போதும்போல் வலுவாக உள்ளது.



இந்நிகழ்ச்சியில்,  சுயராஜ்ஜியத்துக்காக தங்கள் ஈடுஇணையற்ற வீரரத்தை வெளிப்படுத்திய மற்றும் மக்களை தூண்டிய சுதந்திர போராட்ட வீரர்களை நாம் நினைவில் கொள்வோம். இரு நாட்களுக்கு முன்பு, ஜனவரி 23ம் தேதி, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 125வது பிறந்ததினத்தை நாம் கொண்டாடினோம். இவர்தான் ‘ஜெய்-ஹிந்த்’ என்ற உற்சாகமான வணக்கத்தை பின்பற்றியவர். சுதந்திரத்துக்கான இவரது தாகம், இந்தியாவை கவுரமான நாடாக்க இவர்  மேற்கொண்ட லட்சியம் நம் அனைவரையும் ஊக்குவிக்கிறது. 


அரசியல் சாசனத்தை உருவாக்கிய அரசியல்சாசன அவையில், சிறந்த சிந்தனைவாதிகள் இடம் பெற்றிருந்தது நமது பாக்கியம்.  அவர்கள் நமது சுதந்திரபோராட்டத்துக்கு வழிகாட்டியவர்கள். நீண்ட ஆண்டுகளுக்கப்பின்பு, இந்தியாவின் ஆன்மா மீண்டும் விழித்தெழுந்தது. இந்த விதிவிலக்கான ஆண்களும், பெண்களும், புதிய விடியலின் முன்னோடிகளாக இருந்தனர்.   அவர்கள், மக்கள் சார்பில், ஒவ்வொரு சட்டத்தின் அம்சங்களையும் விவாதித்தனர். இந்த ஆய்வு 3 ஆண்டுகள் வரை நடந்தது. இறுதியில், டாக்டர் பாபாசாகிப் அம்பேத்கர்தான், வரைவு குழுவின் தலைவராக, அரசியல் சாசனத்தின் இறுதி பதிப்பை தயாரித்தார்.



அரசின் செயல்பாட்டு விவரங்கள் அடங்கிய அரசியல் சாசன உரை நீளமானது. இதன் முன்னுரை வழிகாட்டி விதிமுறைகளை சுருக்கமாக கூறுகிறது - ஜனநாயகம், நீதி, சுதந்திரம், சமத்துவம் மற்றும் சுகோதரத்துவம். இவை அடித்தளத்தை அமைக்கின்றன. இதில்தான் நமது குடியரசு நிற்கிறது. இவையே நமது கூட்டுப் பரம்பரியத்தை உருவாக்கும் மதிப்புகள்.

குடிமக்களின் அடிப்படை உரிமைகள் மற்றும் அடிப்படைக் கடமைகள் என்ற வடிவில் இந்த மதிப்புகள் நமது அரசியல் சாசனத்தில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளன. உரிமைகளும் மற்றும் கடமைகளும், ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள்.

அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அடிப்படைக் கடமைகளை மக்கள் கடைப்பிடிப்பது அடிப்படை உரிமைகளை அனுபவிப்பதற்கான சரியான சூழலை உருவாக்குகிறது.  தேசிய சேவைகளுக்கு அழைப்பு விடுக்கும்போது, அதை நிறைவேற்றுவது அடிப்படை கடமை. அதனால், கோடிக்கணக்கான மக்கள், தூய்மை இந்தியா திட்டத்தையும்,  கோவிட் தடுப்பூசி திட்டத்தையும் மக்கள் இயக்கமாக மாற்றினர்.  இதுபோன் பிரச்சாரங்களின் வெற்றிக்கான பெருமை நமது மக்களை சார்ந்தது.  நாட்டு நலன் குறித்த இந்த பிரச்சாரத்தை, தங்களின் தீவிர பங்களிப்பு மூலம் நமது மக்கள் தொடர்ந்து வலுப்படுத்துவர் என்பது உறுதி. 

இந்திய அரசியல் சாசனம், 1949ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி அரசியல் சாசன அவையால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதை நாம் தற்போது அருசியல்சாசன தினமாக கொண்டாடுகிறோம்.  ஆனால், இது 2 மாதம் கழித்துதான் அமல்படுத்தப்பட்டது.  முழு சுதந்திரம் பெற 1930ம் ஆண்டு தீர்மானிக்கப்பட்ட தினத்தை குறிப்பிடுவதற்காக இவ்வாறு செய்யப்பட்டது. 1930ம் ஆண்டிலிருந்து 1947ம் ஆண்டு வரை, ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26ம் தேதிதான் ‘பூர்ண சுயராஜ்ய தினமாக’ கொண்டாடப்படுகிறது. அதனால் அந்த தினம் அரசியல் சாசனத்தை அமல்படுத்த தேர்வு செய்யப்பட்டது.

1930ம் ஆண்டில் எழுதிய மகாத்மா காந்தி, ‘பூர்ண சுயராஜ்ய தினம் எவ்வாறு கொண்டாடப்படு வேண்டும் என நாட்டு மக்களுக்கு அறிவுறுத்தினார். அவர் கூறுகையில்:

‘‘அகிம்சை மற்றும் உண்மை வழிகளில் மட்டுமே நம் முடிவை அடைய விரும்புவதால், சுய சுத்திகரிப்பு மூலம் மட்டுமே அதை அடைய முடியும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஆகையால் ஆக்கப்பூர்வமாக பணிகளை செய்ய இந்தநாளை நாம் அர்பணிக்க வேண்டும்’’காந்திஜியின் அறிவுரை காலத்தால் அழியாதவை என்று சொல்லத் தேவையில்லை. குடியரசு தினத்தை நாம் கொண்டாட அவர் விரும்பியிருக்கலாம். சுயபரிசோதனை மூலம் நாம் சிறந்த மனிதர்களாக மாறுவதையும், அதன்பின்பே மற்றவர்களுடன் கைகோர்த்து சிறந்த இந்தியா மற்றும் சிறந்த உலகை நாம் உருவாக்க வேண்டும் என அவர் விரும்பினார்.

அன்பார்ந்த நாட்டு மக்களே,

இப்போது உள்ளது போல், உலகத்துக்கு இவ்வளவு உதவி தேவைப்பட்டதில்லை.  கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக, கொரோனாவுடன் மனித இனம் போராடி வருகிறது. லட்சக்கணக்கான உயிர்களை இழந்துவிட்டோம், உலக பொருளாதாரமே பாதிப்படைந்துள்ளது. இது மனித இனத்துக்கு அசாதாரண சவாலாக உள்ளது.

பெருந்தொற்று மேலாண்மை இந்தியாவில் மிகவும் சிக்கலானதாக இருந்திருக்க வேண்டியது. நம் நாட்டில் அதிக மக்கள் தொகை உள்ளது. வளரும் பொருளாதார நாடாக, கண்ணுக்கு தெரியாத எதிரியை எதிர்த்து போராடும் அளவுக்கு வளங்கள் மற்றும் கட்டமைப்புகள்  நம்மிடம் இல்லை.  ஆனாலும், இதுபோன்ற சிக்கலான நேரத்தில், நாட்டின் மீட்பு நடவடிக்கை வெற்றிகரமாக இருந்தது.  கொரோனாவுக்கு எதிராக ஈடுஇணையற்ற உறுதியை நாம் வெளிப்படுத்தினோம் என கூறவதில் நான் பெருமையடைகிறேன்.  முதல் ஆண்டிலேயே, சுகாதார கட்டமைப்பை நாம் அதிகரித்தோம், பிறருக்கும் உதவினோம். இரண்டாம் ஆண்டில் உள்நாட்டில் தடுப்பூசியை உருவாக்கி, உலகின் மிகப் பெரிய தடுப்பூசி நடவடிக்கையை தொடங்கினோம். பிறநாடுகளுக்கும் தடுப்பூசிகளையும், மருந்தகளையும் நாம் வழங்கினோம். இந்தியாவின் இந்த பங்களிப்பை சர்வதேச அமைப்புகள் பாராட்டுகின்றன.

சில பின்னடைவுகள் இருக்கலாம். துரஅதிர்ஷடமாக இந்த தொற்று மாறுபட்ட புதிய வகைகளுடன் திரும்ப வந்து விட்டது. இந்த தொற்று வேகமாக பரவுவதால், நாம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

தேசிய கல்வி கொள்கையுடன் நமது அரசு சரியான சூழலை ஏற்படுத்தியுள்ளது. இது  பாரம்பரிய மதிப்புகள் மற்றும் நவீன திறமைகளின் சரியான கலப்பாக உள்ளது.

நாட்டு மக்களே,

கடந்தாண்டு, நமது விளையாட்டு வீரர்கள் ஒலிம்பிக்கில் சாதனை படைத்தனர். இந்த இளம் சாம்பியன்கள் இன்று லட்சக்கணக்கானோரை ஊக்குவிக்கின்றனர்.

இந்தியா பழங்கால நாகரீக நாடு ஆனால், இளமையான குடியரசு நாடு. நமக்கு, நாட்டை மேம்படுத்துவது தொடரச்சியான முயற்சி. குடும்ப அளவிலும், நாட்டளவிலும், அடுத்த தலைமுறையின் சிறப்பான எதிர்காலத்துத்தை உறுதி செய்வதற்காக ஒரு தலைமுறை கடினமாக உழைக்கிறது.  நாம் சுதந்திரம் பெற்றபோது, காலனி ஆட்சி நம்மை ஏழ்மையில் விட்டுச் சென்றது. ஆனால் 75 ஆண்டுகளில் நாம் நல்ல முன்னேற்றத்தை கண்டுள்ளோம். நமது நாடு தொடர்ந்து முன்னேற்ற பாதையில் சென்று உலகளவில் சரியான இடத்தை பிடிக்கும்  என்பதில் நான் உறுதியாக உள்ளேன்.

மீண்டும் ஒரு முறை உங்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியான குடியரசு தினம்!

நன்றி,

ஜெய்ஹிந்த்! என் நிறைவு  செய்தார் குடியரசு தினத்தையொட்டி நாட்டு மக்களுக்கு பிரதமர் வாழ்த்து

குடியரசு தினத்தையொட்டி, பிரதமர் திரு.நரேந்திரமோடி, நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பிரதமர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்; 

“आप सभी को गणतंत्र दिवस की हार्दिक शुभकामनाएं। जय हिंद! உங்கள் அனைவருக்கும் மகிழ்ச்சிகரமான குடியரசு தின வாழ்த்துகள். ஜெய்ஹிந்த்! #குடியரசுதினம்“  என்று தெரிவித்துள்ளார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த