முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மாவட்ட வருவாய் அலுவலர் உள்ளிட்ட 11 நபர்கள் அரசு நிலங்களை அரசுக்கே விற்பனை செய்து ஊழல்

அரசு நிலங்களை அரசுக்கே விற்பனை செய்து ரூபாய்.பல கோடி மோசடி: திருப்பூர் மாவட்ட வருவாய் அலுவலர் உள்ளிட்ட 11 நபர்கள் மீது வழக்கு.


சமுதாய வளர்ச்சிக்காக, புதிய சாலை அமைப்பது, பழைய சாலைகளை விரிவுபடுத்துவது, 'சிப்காட்' எனப்படும் பொருளாதார சிறப்பு மண்டலங்களை உருவாக்கும் பணிகள் அரசின் சார்பில் தொடர்ந்து கூடுதல் பணிகள் நடைபெறும்  மாவட்டங்களில், காஞ்சிபுரமும் ஒன்றாகும். 

அதில் முதற்கட்டமாக தனியாரிடமிருந்து நிலங்களை கையகப்படுத்தி, அதற்குரிய இழப்பீடு வழங்கி அந்த நிலங்களில் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்படும். 

அவ்வாறு நில எடுப்பு செய்த நிலங்களில், வருவாய் துறையினர் நடத்திய முறைகேடுகள் ஒவ்வொன்றாக தற்போது வெளி வந்துகொண்டிருக்கிறது.

சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கத்திற்கு எடுக்கப்பட்ட நிலங்களில், ஸ்ரீபெரும்புதுார் தாலுகாவிலள்ள பீமந்தாங்கல் கிராமத்தில், அரசு தனியார் உரிமை கோணாமல் இருக்கும் அனாதீன நிலங்களை முறைகேடாகப் பட்டா பெற்று, அவற்றை அரசுக்கே விற்று, 33 கோடி ரூபாய் இழப்பீடு பெற்ற விவகாரம் 2021 ஆம் ஆண்டு ஜூன் மாதம்  வெளிவந்ததில், தேசிய நெடுஞ்சாலை நில எடுப்பு அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலரான, நர்மதா, ஆசிஸ்மேத்தா, செல்வம் என, ஏழு பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அந்த வழக்கை தமிழக அரசு சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றி உத்தரவிட்ட நிலையில் தற்போது விசாரிக்கப்படுகிறது.

இதேபோல், சென்னை - பெங்களூரிடையே புதிதாக எக்ஸ்பிரஸ் சாலை அமைக்க நில எடுப்பு செய்யப்படுகிறது. 

அவ்வாறு நிலமெடுப்பு செய்த போது, 2018 ஆம் ஆண்டில், ஸ்ரீபெரும்புதுார் தாலுகாவிலுள்ள நெமிலி கிராமத்தில், 2.24 லட்சம் சதுரடி உடைய ஓ.எஸ்.ஆர்., (பழைய நில அளவை ஆவணங்கள்)  உடைய அரசு நிலங்களுக்கு பத்திரப்பதிவு செய்யப்பட்டு,  பல மடங்கு இழப்பீடு பெறப்பட்டுள்ளது. 

இந்த விவகாரத்தில், 300 கோடி ரூபாய் புழங்கியுள்ளதாக, சென்னை உயர் நீதிமன்ற வழங்கிய உத்தரவில் கூறப்பட்டிருந்தது. இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

மேலும்  ஸ்ரீபெரும்புதுார் தாலுகாவில் உள்ள வல்லம் - வடகால் ஆகிய கிராமங்களில், 'சிப்காட்' தொழிற்சாலை பகுதியில் உள்ள ஓ.எஸ்.ஆர்., எனப்படும் அரசு நிலங்களுக்கு, போலி பத்திரம் தயாரித்து, சிப்காட் நில எடுப்பு அலுவலகத்தில், 21 கோடி ரூபாய் மோசடியாக இழப்பீடு பெற்றுள்ளனர்.

இந்த விவகாரம், காஞ்சிபுரம் மாவட்ட உயரதிகாரிகளுக்கு சமீபத்தில் தெரியவந்ததைத் 

தொடர்ந்து, தமிழக அரசின் உயரதிகாரிகளுக்கு மாவட்ட அதிகாரிகள் தெரியப்படுத்திய பின், சிப்காட் தாசில்தார் நாராயணன், மாவட்டக் குற்றப்பிரிவு காவல்துறையில் புகார் செய்தார்.

அதில் சிப்காட் நிலமெடுப்பு அலுவலகத்தில் பணியாற்றிய மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன் மற்றும் இரண்டு தாசில்தார் உள்ளிட்ட, 11 நபர்கள் மீது மாவட்டக் குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

அப்போது மாவட்ட வருவாய் அலுவலராக பணி செய்த ராஜேந்திரன், தற்போது திருப்பூர் மாவட்ட வருவாய் அலுவலராக பணி செய்கிறார். அவர் மீது புகார் விபரத்தில்

ஸ்ரீ பெரும்புதுார் தாலுகாவிலுள்ள வல்லம், வடகால் ஆகிய கிராமங்களில், தொழில் சம்பந்தமாக ஏற்படுத்தப்பட்ட சிப்காட் நிலங்கள், அரசுக்குச் சொந்தமானவை. 

இந்த இடங்களில், விற்பனை அல்லது பரிவர்த்தனை போன்ற எந்தவிதமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளக்கூடாது. 

சிப்காட் நிலங்கள், 2011, மற்றும் 2012 ஆம் ஆண்டுகளில் அறிவிக்கை வெளியிடப்பட்டு, 2013 ஆம் ஆண்டில் சிப்காட் துறையினருக்கு நிலம் ஒப்படைக்கப்பட்டுவிட்டதில், தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனமான சிப்காட் பெயருக்கு பட்டா மாற்றம் செய்யப்பட்டது.

ஆனால், வல்லம்- கிராமத்தில், நில எடுப்பு செய்யப்பட்ட சர்வே எண்களில், 2020 ஆம் ஆண்டில் மினிஷ்குமார் என்பவருக்கு சிறப்பு பொது அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது, செல்லத்தக்கதல்ல என்பது தெளிவாகிறது.

மேலும், 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வடகால் கிராமத்தில், 'வி.ஜி.பி., ஹவுசிங் டெவலப் கார்ப்பரேஷன்' என்ற நிறுவனம், அரசு அங்கீகாரம் பெற்ற வீட்டு மனைப்பிரிவில் அமைந்துள்ள சாலை, பூங்கா பரப்பான 7.25 லட்சம் சதுரஅடி இடத்தை, ஸ்ரீபெரும்புதுார் வட்டார வளர்ச்சி அலுவலகத்துக்கு, 1991 ஆம் ஆண்டில் தானமாக அளித்தது. 

இந்த தான நிலத்தை, இதே நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரான சந்தோஷம் என்பவரின் மகன் அமலாதாஸ் ராஜேஷ் என்பவர், பள்ளிப்பட்டு சார் - பதிவாளர் அலுவலகத்தில், தான நிலம் என்பதை ரத்து செய்தார்.

இதையடுத்து ஜெயசந்திரன், தமிழ்செல்வன், கார்த்திக் ஆகியோருக்கு, கிரையம் அளித்து, அதனடிப்படையில் இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளது.

வல்லம் - வடகால் கிராமங்களில், அங்கீகரிக்கப்பட்ட வீட்டுமனைப் பிரிவுகளில், பொது நோக்கத்திற்காக, ஒதுக்கீடு செய்யப்பட்ட சாலைகள், பூங்கா நிலங்களுக்கு, நில இழப்பீடு தொகையாக, 21.08 கோடி ரூபாய் அரசு விதிகளுக்கு மாறாக, நிதி இழப்பு ஏற்படுத்தும் வகையில், வழங்கப்பட்டுள்ளது என்பது தெளிவாகிறது. இவ்வாறு, புகார் வழக்கின் விபரத்தில் கூறப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில், நில எடுப்பு விவரகாரத்தில், ஏற்கனவே பீமந்தாங்கல், நெமிலி ஆகிய இடங்களிலும், தற்போது வல்லம்- - வடகால் சிப்காட் நிலங்களிலும் கோடிக்கணக்கான ரூபாய் முறைகேடாக மோசடி செய்து இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. 

இதுவரை மூன்று வகையான மோசடிகள் வெளிவந்த நிலையில், மற்ற சிப்காட் நிலங்களிலும் இதுபோன்ற மோசடிகள் பல நடைபெற்றிருப்பதாக வருவாய் துறையினர் தெரிவிக்கின்றன். 

மண்ணுார் - வளர்புரம் உள்ளிட்ட பிற சிப்காட் நில எடுப்பு கோப்புகளில் இதுபோன்ற மோசடிகளை விசாரிக்க, தனி குழுவை அரசு நியமிக்க எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

வல்லம்- - வடகால் சிப்காட் நில எடுப்புக்கு, 2011, 2012ம் ஆண்டுகளில் அறிவிப்பு வெளியாகி, 2013ம் ஆண்டே நிலங்கள் எடுக்கப்பட்டு இழப்பீடு வழங்கப்பட்டுவிட்டது. 

ஆனால், ஏழு ஆண்டுகள் கழித்து, மீண்டும் அந்த நிலங்களுக்கு இழப்பீடு கேட்டு விண்ணப்பிக்கும் போது, அவற்றை அரசிடம் இருந்து எவ்வாறு கேட்டு பெற முடியும் என, கேள்வி எழுந்துள்ளது. 

இந்த விவகாரத்தில், சிப்காட் துறையில் மேலிடம் வரை தொடர்பு இருக்கும் என, வருவாய் துறையினர் தெரிவிக்கின்றனர்.

பீமந்தாங்கல், நெமிலி உள்ளிட்ட நில எடுப்பு விவகாரங்களில், வழக்குப்பதிவு செய்த போலீசார், அரசு அதிகாரிகள் யாரையும் கைது செய்ததாக தெரியவில்லை. 

தற்போதும், வல்லம்- - வடகால் விவகாரத்தில், 21 கோடி ரூபாய்க்கு மோசடி நடைபெற்றுள்ளது. 

மாவட்ட வருவாய் அலுவலர், தாசில்தார் என பல்வேறு முக்கிய அதிகாரிகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

இதுபோன்ற நுாதன மோசடி வழக்குகளில் பெரிதாக யாரும் கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த