முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மாவட்ட வருவாய் அலுவலர் உள்ளிட்ட 11 நபர்கள் அரசு நிலங்களை அரசுக்கே விற்பனை செய்து ஊழல்

அரசு நிலங்களை அரசுக்கே விற்பனை செய்து ரூபாய்.பல கோடி மோசடி: திருப்பூர் மாவட்ட வருவாய் அலுவலர் உள்ளிட்ட 11 நபர்கள் மீது வழக்கு.


சமுதாய வளர்ச்சிக்காக, புதிய சாலை அமைப்பது, பழைய சாலைகளை விரிவுபடுத்துவது, 'சிப்காட்' எனப்படும் பொருளாதார சிறப்பு மண்டலங்களை உருவாக்கும் பணிகள் அரசின் சார்பில் தொடர்ந்து கூடுதல் பணிகள் நடைபெறும்  மாவட்டங்களில், காஞ்சிபுரமும் ஒன்றாகும். 

அதில் முதற்கட்டமாக தனியாரிடமிருந்து நிலங்களை கையகப்படுத்தி, அதற்குரிய இழப்பீடு வழங்கி அந்த நிலங்களில் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்படும். 

அவ்வாறு நில எடுப்பு செய்த நிலங்களில், வருவாய் துறையினர் நடத்திய முறைகேடுகள் ஒவ்வொன்றாக தற்போது வெளி வந்துகொண்டிருக்கிறது.

சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கத்திற்கு எடுக்கப்பட்ட நிலங்களில், ஸ்ரீபெரும்புதுார் தாலுகாவிலள்ள பீமந்தாங்கல் கிராமத்தில், அரசு தனியார் உரிமை கோணாமல் இருக்கும் அனாதீன நிலங்களை முறைகேடாகப் பட்டா பெற்று, அவற்றை அரசுக்கே விற்று, 33 கோடி ரூபாய் இழப்பீடு பெற்ற விவகாரம் 2021 ஆம் ஆண்டு ஜூன் மாதம்  வெளிவந்ததில், தேசிய நெடுஞ்சாலை நில எடுப்பு அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலரான, நர்மதா, ஆசிஸ்மேத்தா, செல்வம் என, ஏழு பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அந்த வழக்கை தமிழக அரசு சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றி உத்தரவிட்ட நிலையில் தற்போது விசாரிக்கப்படுகிறது.

இதேபோல், சென்னை - பெங்களூரிடையே புதிதாக எக்ஸ்பிரஸ் சாலை அமைக்க நில எடுப்பு செய்யப்படுகிறது. 

அவ்வாறு நிலமெடுப்பு செய்த போது, 2018 ஆம் ஆண்டில், ஸ்ரீபெரும்புதுார் தாலுகாவிலுள்ள நெமிலி கிராமத்தில், 2.24 லட்சம் சதுரடி உடைய ஓ.எஸ்.ஆர்., (பழைய நில அளவை ஆவணங்கள்)  உடைய அரசு நிலங்களுக்கு பத்திரப்பதிவு செய்யப்பட்டு,  பல மடங்கு இழப்பீடு பெறப்பட்டுள்ளது. 

இந்த விவகாரத்தில், 300 கோடி ரூபாய் புழங்கியுள்ளதாக, சென்னை உயர் நீதிமன்ற வழங்கிய உத்தரவில் கூறப்பட்டிருந்தது. இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

மேலும்  ஸ்ரீபெரும்புதுார் தாலுகாவில் உள்ள வல்லம் - வடகால் ஆகிய கிராமங்களில், 'சிப்காட்' தொழிற்சாலை பகுதியில் உள்ள ஓ.எஸ்.ஆர்., எனப்படும் அரசு நிலங்களுக்கு, போலி பத்திரம் தயாரித்து, சிப்காட் நில எடுப்பு அலுவலகத்தில், 21 கோடி ரூபாய் மோசடியாக இழப்பீடு பெற்றுள்ளனர்.

இந்த விவகாரம், காஞ்சிபுரம் மாவட்ட உயரதிகாரிகளுக்கு சமீபத்தில் தெரியவந்ததைத் 

தொடர்ந்து, தமிழக அரசின் உயரதிகாரிகளுக்கு மாவட்ட அதிகாரிகள் தெரியப்படுத்திய பின், சிப்காட் தாசில்தார் நாராயணன், மாவட்டக் குற்றப்பிரிவு காவல்துறையில் புகார் செய்தார்.

அதில் சிப்காட் நிலமெடுப்பு அலுவலகத்தில் பணியாற்றிய மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன் மற்றும் இரண்டு தாசில்தார் உள்ளிட்ட, 11 நபர்கள் மீது மாவட்டக் குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

அப்போது மாவட்ட வருவாய் அலுவலராக பணி செய்த ராஜேந்திரன், தற்போது திருப்பூர் மாவட்ட வருவாய் அலுவலராக பணி செய்கிறார். அவர் மீது புகார் விபரத்தில்

ஸ்ரீ பெரும்புதுார் தாலுகாவிலுள்ள வல்லம், வடகால் ஆகிய கிராமங்களில், தொழில் சம்பந்தமாக ஏற்படுத்தப்பட்ட சிப்காட் நிலங்கள், அரசுக்குச் சொந்தமானவை. 

இந்த இடங்களில், விற்பனை அல்லது பரிவர்த்தனை போன்ற எந்தவிதமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளக்கூடாது. 

சிப்காட் நிலங்கள், 2011, மற்றும் 2012 ஆம் ஆண்டுகளில் அறிவிக்கை வெளியிடப்பட்டு, 2013 ஆம் ஆண்டில் சிப்காட் துறையினருக்கு நிலம் ஒப்படைக்கப்பட்டுவிட்டதில், தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனமான சிப்காட் பெயருக்கு பட்டா மாற்றம் செய்யப்பட்டது.

ஆனால், வல்லம்- கிராமத்தில், நில எடுப்பு செய்யப்பட்ட சர்வே எண்களில், 2020 ஆம் ஆண்டில் மினிஷ்குமார் என்பவருக்கு சிறப்பு பொது அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது, செல்லத்தக்கதல்ல என்பது தெளிவாகிறது.

மேலும், 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வடகால் கிராமத்தில், 'வி.ஜி.பி., ஹவுசிங் டெவலப் கார்ப்பரேஷன்' என்ற நிறுவனம், அரசு அங்கீகாரம் பெற்ற வீட்டு மனைப்பிரிவில் அமைந்துள்ள சாலை, பூங்கா பரப்பான 7.25 லட்சம் சதுரஅடி இடத்தை, ஸ்ரீபெரும்புதுார் வட்டார வளர்ச்சி அலுவலகத்துக்கு, 1991 ஆம் ஆண்டில் தானமாக அளித்தது. 

இந்த தான நிலத்தை, இதே நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரான சந்தோஷம் என்பவரின் மகன் அமலாதாஸ் ராஜேஷ் என்பவர், பள்ளிப்பட்டு சார் - பதிவாளர் அலுவலகத்தில், தான நிலம் என்பதை ரத்து செய்தார்.

இதையடுத்து ஜெயசந்திரன், தமிழ்செல்வன், கார்த்திக் ஆகியோருக்கு, கிரையம் அளித்து, அதனடிப்படையில் இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளது.

வல்லம் - வடகால் கிராமங்களில், அங்கீகரிக்கப்பட்ட வீட்டுமனைப் பிரிவுகளில், பொது நோக்கத்திற்காக, ஒதுக்கீடு செய்யப்பட்ட சாலைகள், பூங்கா நிலங்களுக்கு, நில இழப்பீடு தொகையாக, 21.08 கோடி ரூபாய் அரசு விதிகளுக்கு மாறாக, நிதி இழப்பு ஏற்படுத்தும் வகையில், வழங்கப்பட்டுள்ளது என்பது தெளிவாகிறது. இவ்வாறு, புகார் வழக்கின் விபரத்தில் கூறப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில், நில எடுப்பு விவரகாரத்தில், ஏற்கனவே பீமந்தாங்கல், நெமிலி ஆகிய இடங்களிலும், தற்போது வல்லம்- - வடகால் சிப்காட் நிலங்களிலும் கோடிக்கணக்கான ரூபாய் முறைகேடாக மோசடி செய்து இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. 

இதுவரை மூன்று வகையான மோசடிகள் வெளிவந்த நிலையில், மற்ற சிப்காட் நிலங்களிலும் இதுபோன்ற மோசடிகள் பல நடைபெற்றிருப்பதாக வருவாய் துறையினர் தெரிவிக்கின்றன். 

மண்ணுார் - வளர்புரம் உள்ளிட்ட பிற சிப்காட் நில எடுப்பு கோப்புகளில் இதுபோன்ற மோசடிகளை விசாரிக்க, தனி குழுவை அரசு நியமிக்க எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

வல்லம்- - வடகால் சிப்காட் நில எடுப்புக்கு, 2011, 2012ம் ஆண்டுகளில் அறிவிப்பு வெளியாகி, 2013ம் ஆண்டே நிலங்கள் எடுக்கப்பட்டு இழப்பீடு வழங்கப்பட்டுவிட்டது. 

ஆனால், ஏழு ஆண்டுகள் கழித்து, மீண்டும் அந்த நிலங்களுக்கு இழப்பீடு கேட்டு விண்ணப்பிக்கும் போது, அவற்றை அரசிடம் இருந்து எவ்வாறு கேட்டு பெற முடியும் என, கேள்வி எழுந்துள்ளது. 

இந்த விவகாரத்தில், சிப்காட் துறையில் மேலிடம் வரை தொடர்பு இருக்கும் என, வருவாய் துறையினர் தெரிவிக்கின்றனர்.

பீமந்தாங்கல், நெமிலி உள்ளிட்ட நில எடுப்பு விவகாரங்களில், வழக்குப்பதிவு செய்த போலீசார், அரசு அதிகாரிகள் யாரையும் கைது செய்ததாக தெரியவில்லை. 

தற்போதும், வல்லம்- - வடகால் விவகாரத்தில், 21 கோடி ரூபாய்க்கு மோசடி நடைபெற்றுள்ளது. 

மாவட்ட வருவாய் அலுவலர், தாசில்தார் என பல்வேறு முக்கிய அதிகாரிகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

இதுபோன்ற நுாதன மோசடி வழக்குகளில் பெரிதாக யாரும் கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அமலாக்கத்துறை தற்காலிகமாக முடக்கிய நியோ மேக்ஸின் சில சொத்துகள்

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பல்லாயிரம் கோடிகள் பணத்தை முதலீடு செய்தனர். அதில் அரசுப்பணியில் பல்வேறு துறைகளில் இருந்து கொண்டு வருமான வரி செலுத்தாமல் முறைகேடு செய்து தவறான வழியில் லஞ்சமாக வாங்கிய இரகசியப் பணத்தையுடைய நபர்கள் செய்த முதலீட்டு கருப்புப் பணமும் அதில் அடங்கும், மேலும் அவர்கள் நிலை என்பது திருடனுக்குத் தேள் கொட்டிய நிலை போல புகார் கொடுத்து மேலும் மாட்டிக் கொள்ள அவர்கள் விரும்பவில்லை, அது ஒரு பெரிய பட்டியல் நீள்கிறது அதுவும் ED நன்கு அறியும். ஆகவே அவர்கள் தங்களை தங்கள் தற்காலிக செல்வாக்கைப் பயன்படுத்தி திரைமறைவில் மேற்கண்ட ஜாமீனில் வெளிவந்த குற்றவாளிகள் மூலம் பேரமும்,  கட்டப்பஞ்சாயத்தும் நடத்தி இரகசிய வழியாக பணம் அல்லது அவர்கள் வேறு பினாமி மூலம் வாங்கிய நிலையில் அதை பொருளாதாரக் குற்றப்பிரிவு இதுவரை புலனாய்வு செய்து கைப்பற்றாமல் உள்ள இரகசியமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மூலம் பணத்தை திரும்ப பெறுவதற்கு அந்த இலஞ்ச ஊழல் கருப்புப்பண முதலைகள் ஒரு பக்கம் இரகசிய வழியாக முயலும் நிலையில் அதை பொருளாதார குற்றப்பிரிவு கண்டும் காணாமல் தான் இதுவரை செயல்பட்ட நிலைய...