தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் ஒரே கட்டமாக பிப்ரவரி மாதம் 19 ஆம் தேதி நடைபெறுமென தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் அறிவித்தார்.
தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான அட்டவணை
பிப்ரவரி 19-ஆம் தேதி நகர்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக நடைபெறும் வேட்பு மனுக்கள் பரீசலனை : பிப்ரவரி மாதம் ஐந்தாம் தேதி
வேட்புமனுக்கள் வாபஸ் பெறும் தேதி : பிப்ரவரி மாதம் ஏழாம் தேதி.
தேர்தலில் வாக்குப்பதிவு : பிப்ரவரி மாதம் 19 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை : முடிவு பிப்ரவரி மாதம் 22 ஆம் தேதி .மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தது. தேர்தல் நடவடிக்கைகள் பிப்ரவரி 24-ஆம் தேதியோடு முடிவுக்கு வரும்.
சென்னையில் மூன்று இ ஆ ப அதிகாரிகள் தேர்தல் பார்வையாளராக செயல்படுவார்கள் எனவும். 80,000 காவலர்கள் தேர்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவர். வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கை சிசிடிவி கேமரா காட்சி கண்காணிப்புடன் நடைபெறுமெனவும் தமிழகத்தின் மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் தெரிவித்தார்.
கருத்துகள்