கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான எடியூரப்பாவின் பேத்தியான சௌந்தர்யாவின் உடல்,
தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. சௌந்தர்யா தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. டாக்டரான சௌந்தர்யாவுக்கு, இரண்டாண்டுகளுக்கு முன் டாக்டர் நீரஜ் என்றவருடன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு குழந்தையும் உள்ளது. மேலும் கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, சௌந்தர்யாவின் உடல் பிரதேச பரிசோதனை செய்யப்படும் மருத்துவமனைக்கு விரைந்துள்ள நிலையில் இது குறித்து விசாரணை நடந்து வருகிறது. இது எடியூரப்பா குடும்பத்தில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கருத்துகள்