ரூ. 60 ஆயிரம் லஞ்சம் பெற்ற வட்டாட்சியர் கைது.
கங்கேயத்தைச் சேர்ந்த நபர் தன்னுடைய 75 லட்ச ரூபாய் சொத்து மதிப்புக்கு சால்வன்சி சான்றிதழ் கேட்டு உரிய ஆதாரங்கள் இணைத்து பணம் வங்கி மூலம் செலுத்திய பிறகு காங்கேயம் வருவது வட்டாட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பித்தார்
அதற்காக சான்றிதழை வழங்க 1.50 லட்சம் ரூபாய் லஞ்சமாகத் தர வேண்டுமென கேட்டு வட்டாட்சியர் சிவகாமி டிமான்டு செய்ததாகக் கூறப்படுகிறது. இவ்வளவு தொகை தன்னால் கொடுக்க முடியாதென விண்ணப்பித்த நபர் தெரிவித்ததால் இறுதியில் 60 ஆயிரம் ரூபாய் கொடுத்தால் சான்றிதழ் தருகிறேன் என வட்டாட்சியர் சிவகாமி கராராக பேசிய பின்.
அதிர்ச்சி அடைந்த விண்ணப்பதாரர் திருப்பூர் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் இலஞ்ச ஒழிப்புத் துறையினரிடம் புகார் அளித்துள்ளார். ஊழல் தடுப்பு மற்றும் இலஞ்ச ஒழிப்புத்துறை துணைக் கண்காணிப்பாளர் தட்சிணாமூர்த்தி தலைமையில் புகார் தாரர் கொண்டு வந்த பணத்தை இரசாயனம் தடவிய பின் விண்ணப்பதாரரிடம் வழங்கி. அந்த நோட்டுகளை வட்டாட்சியரிடம் விண்ணப்பதாரர் அரசு தரப்பில் சாட்சியுடன் இணைந்து கொடுக்கும் போது அங்கு மறைந்திருந்த ஊழல் தடுப்பு மற்றும் இலஞ்ச ஒழிப்புத் துறையினர் வட்டாட்சியர் சிவகாமியை இலஞ்சப்பணம் பெற்ற கையுடன் பிடித்தனர். தொடர்ந்து 3 மணி நேரத்திற்க்கும் மேலாக வட்டாட்சியர் சிவகாமியிடம் துறுவித் துறுவி விசாரணை நடத்தினர்.
புகார் உறுதியானதைத் தொடர்ந்து வட்டாச்சியர் சிவகாமியை இலஞ்ச ஒழிப்புத் துறையினர் கைது செய்தனர்.உடன் ஆய்வாளர் மற்றும் பத்துக்கும் மேற்பட்ட காவலர்கள் உடனிருந்தனர். திருப்பூர் மாவட்டத்தில் காங்கேயம் வட்டாட்சியராகப் பணிபுரிந்து வரும் . சிவகாமி இவர் ஏற்கனவே திருப்பூர் வருவாய் கோட்டாட்சியரிடம் உதவியாளராக இருந்தவர், தாராபுரத்தில் வட்டாட்சியராக இருந்தவர் இவர் மீது ஊழல் தடுப்பு மற்றும் இலஞ்ச ஒழிப்புத் துறையில் வருவாய் நில உரிமைச் சொத்து மதிப்புச் சான்றிதழ் சால்வன்ஸி பெறுவதற்காக 60 ஆயிரம் ரூபாய் இலஞ்சம் பெற்ற குற்றத்துக்காக லஞ்ச ஒழிப்புத் துறையினராலீ கைது செய்யப்பட்டு தற்பொழுது விசாரணை முடிந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்திருக்கிறார்கள்.
காங்கேயம் அருகே பொங்கலூர் வருவாய் ஆய்வாளராக இருந்த செந்தில்குமார் என்பவரை கடந்த மாதத்தில் இலஞ்சம் பெற்ற குற்றத்துக்காக கைது செய்ததும் குறிப்பிடத்தக்கது. திருப்பூர் மாவட்டத்தில் அடுக்கடுக்காக அரசு அதிகாரிகள் தொடர்ந்து ஊழல் தடுப்பு மற்றும் இலஞ்ச ஒழிப்புத் துறையினரால் கைது செய்யப்படுவது பொது மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
கருத்துகள்