சென்னையில் ஐஎஸ்ஐ முத்திரை இல்லாத பொம்மைகளை விற்ற கடையில் பிஐஎஸ் அதிகாரிகள் சோதனை
இந்திய தர நிர்ணய அமைவனம் (BIS), சென்னை கிளை - 1 இன் அதிகாரிகள் குழு ஜனவரி 17-ம் தேதி,வேளச்சேரி வணிக வளாகம் ஒன்றில் பொம்மைக் கடையில் சோதனை மேற்கொண்டனர்.
BIS மேற்கொண்ட இந்த சோதனையின் போது, சுமார் 630 பொம்மைகள் (தோராயமாக ருபாய் 10 லட்சம் மதிப்பு ) , மின்சார மற்றும் மின்சாரம் அல்லாத பொம்மைகள், ட்ரோன்கள், லெகோஸ் போன்ற BIS ஸ்டாண்டர்ட் மார்க் இல்லாமல் விற்பனைக்கு இருந்தது தெரிய வந்தது. பொம்மைகள் (தரக்கட்டுப்பாடு) ஆணை, 2020 மற்றும் பிஐஎஸ் சட்டம் 2016 இன் பிரிவு 17(1)(ஏ) ஆகியவற்றை மீறுவதால் அவை அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டன.
BIS SRO, CNBO-1, சென்னை ஆல் இந்திய தர நிர்ணயச் சட்டம், 2016 இன் கீழ் குற்றவாளிக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இந்தக் குற்றத்திற்கு இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது ருபாய் 2,00,000/-அபராதம் விதிக்கப்படும். Section 29 of BIS Act, 2016இல் கூறப்பட்டுள்ளபடி, பொருளின் மதிப்பை போல பத்து மடங்கு அல்லது பிஸ் Standard Mark (Including Hallmark ) முத்திரையிடப்பட்ட தயாரிக்கப்பட்ட /விற்பனை செய்யப்பட்ட பொருள்களுக்கான மதிப்பிற்கு அபராதம் விதிக்கப்படும்.எனவே, பொம்மைகள் (தரக்கட்டுப்பாடு) ஆணை, 2020-ஐ மீறும் சம்பவங்கள் பற்றி ஏதேனும் தகவல் இருந்தால், BIS தெற்கு மண்டல அலுவலகம், சிஐடி வளாகம், 4வது குறுக்கு சாலை, தரமணி, சென்னை- 113 என்ற முகவரிக்கு பொதுமக்கள் தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். BIS CARE APP செயலியைப் பயன்படுத்துவதன் மூலமோ அல்லது cnbo1@bis.gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புவதன் மூலமாகவோ கூட இத்தகைய புகார்கள் செய்யப்படலாம் என பிஐஎஸ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
கருத்துகள்