சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே
இலந்தைகுளம் கிராமத்தில் பொங்கல் விழா, கார்த்திக் என்பவர் நேற்று முன்தினம் விளையாட்டு போட்டிகளை ஏற்பாடு செய்தார். 'மைக்'கில் பேச்சுப் போட்டி விழாவில், சிவானந்தம், 24 என்பவர் வந்து மைக்கில் பேசியதை தட்டி கேட்டதையடுத்து, தகராறு ஏற்பட்டு, பின்னர் அங்கிருந்தவர்கள் சமாதானம் செய்தனர். மீண்டும் இரவு கார்த்திக்குடன் சிவானந்தம் உள்ளிட்ட ஐவரும் தகராறு செய்த நிலையில். திருப்புவனம் காவல் சரகம் இலந்தைக்குளம் கிராமத்தில் ஒரு தரப்பினா் பொங்கல் விழா மற்றும் விளையாட்டுப் போட்டிகளை நடத்தினா். அப்போது ஏற்பட்ட தகராறில் உறவினா்களுக்குள் இரு பிரிவுகளாக பிரிந்து மோதிக் கொண்டதில், இதே கிராமத்தைச் சோ்ந்த நாச்சான் மகன் கருப்பசாமியை ( வயது 28) சிலா் ஈட்டி மற்றும் கத்தியால் குத்திக் கொலை செய்தனா். மேலும் அருண்குமாா் என்பவரும் காயமடைந்தாா். இதையடுத்து, இலந்தைக்குளம் கிராமத்தில் காவல்துறையினர் குவிக்கப்பட்டனா்.
அங்கு வந்த கருப்புசாமி, அருண்குமார், ஆகியோர், கார்த்திக்கிற்கு ஆதரவாகப் பேச, ஆத்திரமடைந்தவர்கள் விலங்குகளை வேட்டையாட உதவும் சுளுக்கி என்ற ஆயுதத்தால் குத்தியதில் கருப்புசாமி உயிரிழந்தார். அருண்குமார் காயமடைந்தார். சிவானந்தம் உள்ளிட்ட ஐந்து பேரையும் திருப்புவனம் காவல்துறையினர் கைது செய்தனர். இந்தக் கொலை குறித்து வழக்குப் பதிந்து அதே கிராமத்தைச் சோ்ந்த கண்ணன் (வயது 22), ராஜ்குமாா் (வயது 21), சிவநாதன் (வயது 24), சரத்குமாா் (வயது 20), சிவா ஆகிய 5 பேரையும் கைது செய்து நீதிமன்றக் காவலுக்கு அனுப்பி வைத்தனா்.
கருத்துகள்