பிரபல கார்ட்டூன் கலைஞர் திரு.நாராயண் தேப்நாத் அவர்களின் மறைவுக்குப் பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்
பிரபல கார்ட்டூன் கலைஞர் திரு.நாராயண் தேப்நாத் அவர்களின் மறைவுக்குப் பிரதமர் திரு.நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
டுவிட்டர் பதிவில் பிரதமர் கூறியிருப்பதாவது;
“திரு.நாராயண் தேப்நாத் அவர்கள் தமது படைப்புகள், கார்ட்டூன்கள் மற்றும் சித்திரங்கள் மூலம் பலரது வாழ்க்கையை விளக்கம் பெற செய்துள்ளார். அவரது படைப்புகள் அவரின் மதிநுட்பத்தைப் பிரதிபலித்தன. அவரால் உருவாக்கப்பட்ட கேலிச்சித்திரங்கள் உலகம் முழுவதும் செல்வாக்குப் பெற்றவை. அவரது மறைவால் கவலையடைந்தேன். அவரது குடும்பத்தினருக்கும், ஆதரவாளர்களுக்கும் இரங்கல்கள். ஓம் சாந்தி”.
கருத்துகள்