மேற்கு வங்காளத்தின் சட்டமன்றம் காலவரையற்ற முடக்கம்..
மேற்கு வங்காள அரசுக்கும், அந்த மாநிலஆளுநருக்குமி டையே நடக்கும் மோதல் போக்கு காரணமாக, மாநிலத்தில், ஆளுநர் ஜக்தீப் தன்கர் இன்று மேற்கு வங்காளத்தின் சட்டமன்றத்தை முடக்கியுள்ளார்.
அரசியல் நிர்ணய சட்டப்பிரிவு 174 அடிப்படையில் மேற்கு வங்க சட்டசபை பிப்ரவரி மாதம் 12 ஆம் தேதி முதல் காவரையறையின்றி முடக்கப்படுவதாக அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.
1947ஆம் வருடம் அன்றைய வங்காளம், இந்துக்கள் பெரும்பான்மையினராக இருந்த பகுதி மேற்கு வங்காளம் என்றும், இஸ்லாமியரின் பகுதி கிழக்கு வங்காளம் என்றும் பிரிக்கப்பட்டது. இன்றைய வங்காளதேசமே அந்த கிழக்கு வங்காளமாகும்.1948 ஆம் ஆண்டு முதல் 1977 ஆம் ஆண்டு வரை மேற்கு வங்காளத்தை இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி தொடர்ச்சியாக இருபத்தொன்பது ஆண்டுகள் ஆட்சி செய்தது. 1977 ஆம் ஆண்டிலிருந்து 2011 ஆம் ஆண்டு வரை தொடர்ச்சியாக 34 ஆண்டுகள் மேற்கு வங்காளம் இடது சாரி கட்சிகளால் ஆளப்பட்டது.
2011 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றதை அடுத்து மம்தா பானர்ஜி முதல்வராகப் பதவியேற்றார். மேற்கு வங்காளம் 294 சட்டமன்றத் தொகுதிகளும், 42 மக்களவை தொகுதிகளையும் கொண்டதாகும்.
கருத்துகள்