கோவிந்தபுரம் விட்டல் ருக்மணி பாண்டுரங்கன் ஆலயத்தில் விஸ்வ வித்யாலயா ஆகம வேத பாடசாலை துவக்க நிகழ்ச்சியில் பங்கேற்கும் தமிழக ஆளுநர்
தஞ்சாவூர் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெறும் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள தமிழ்நாடு மாநில ஆளுநர் ஆர்.என்.ரவி சென்னையிலிருந்து விமானத்தில் திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தார்
ஆளுநருக்கு திருச்சிராப்பள்ளி மாவட்ட வருவாய் அலுவலர் பழனிக்குமார், மாநகரக் காவல்துறை ஆணையர் கார்த்திகேயன், மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளர் சுஜித் குமார், மாநகராட்சி ஆணையர் முஜிபூர் ரகுமான் , மாநகராட்சி மேயர் அன்பழகன் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
அங்கிருந்து ஆளுநர் ஆர்.என்.ரவி கார் மூலமாக தஞ்சாவூருக்கு மதியம் செல்கிறவர். தஞ்சாவூர் சுற்றுலா மாளிகையில் மதிய உணவுக்குப் பின், முன்னாள் இராணுவ வீரர்களைச் சந்தித்துப் பேசிய பின்னர் தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் ஆலயம் மற்றும் சரஸ்வதி மகால் ஆவணங்கள் கொண்ட நூலகத்தைப் பார்வையிடும் நிலையில். இரவு தஞ்சாவூரில் தங்கி 13 ஆம் தேதி காலை தஞ்சாவூரிலிருந்து கார் மூலம் கும்பகோணம் அருகே உள்ள கோசாலை உள்ள கோவிந்தபுரம் விட்டல் ருக்மணி பாண்டுரங்கன் சமஸ்தான் கோலில் வளாகத்தில் நடைபெறும் விஸ்வ வித்யாலயா எனும் ஆகம வேத பாடசாலைக்கான அடிக்கல் நாட்டும் துவக்க நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.கும்பகோணம் வட்டத்தில் கோவிந்தபுரம் ஸ்ரீவிட்டல் ருக்மணி சம்ஸ்தான் கோவில் சேங்காலிபுரம் நாராயண தீஷிதர் புதல்வர் ராமதீஷீதர். இவர் இன்றும் பிரவசனம் செய்து கொண்டு வருபவர். இவரது புத்திரர் ஸ்ரீஸ்ரீவிட்டல்தாஸ் மகராஜ்.
நாமசங்கீர்த்தனமே நாதன்தாள் பற்றுவதற்கான நல்ல வழி என்பதை உலகெங்கும் பறைசாற்றிய ஞானானந்த சுவாமிகள் சீடரான குருஜி ஹரிதாஸ் கிரி சுவாமிகளையும், ஸ்ரீஸ்ரீகிருஷ்ண பிரேமி மகராஜ் ஆகியோரை தமது குருவாக ஏற்று நாடெங்கும் நாமசங்கீர்த்தனத்தை நடத்தி வருபவர் ஸ்ரீஸ்ரீவிட்டல்தாஸ் மகராஜ் ஆவார்
வடமாநிலத்தில் பண்டரிபுரம் ஸ்ரீபாண்டுரங்கனின் கோவிலைப் போன்று அனைத்து பக்தர்களும் கோவில் கர்ப்பகிரகத்தினுள் சென்று சாமியை தரிசிக்க வேண்டும் இந்துக்களில் ஜாதி, மொழி வேறுபாடு இல்லாமல் ஸ்ரீஸ்ரீவிட்டல்தாஸ் மகராஜ் கோவிந்தபுரத்தில் பலகோடி ரூபாய் உபயதாரர்களின் ஆதரவில் கோவில் கோசாலையுடன் அமைத்துள்ளார். பண்டரிபுரத்திலிருந்து வந்த பாண்டுரங்கனும், ருக்மணியும் தமிழகத்தில் அமைக்கப்பட்ட புதிய கோவிலில் அருள் தருகின்றனர்.
கோவிலில் மகாமண்டபம், அர்த்தமண்டபம், நாமசங்கீர்த்தனை கூடம், அன்னதானக்கூடம், மகாபக்த விஜயத்தில் இடம்பெற்றுள்ள பக்த சிரோண்மனிகளின் கதை சிற்பங்கள், பொன் போன்ற ஒளிரும் மேல் விதானம் மடப்பள்ளி போன்றவை அமைக்கப்பட்டுள்ளது. அது பலரும் தானமாக வழங்கிய பசுக்களுக்கான பிரத்யேக கோசாலை அமைந்துள்ளது. ஸ்ரீஸ்ரீவிட்டல்தாஸ் மகராஜ் நாடெங்கும் நாமசங்கீர்த்தனம் செய்தே பல தனவான்களின் ஆதரவு பக்தர்களின் உபயம் மற்றும் கைங்கர்யத்துடன் இக் கோவில் திருப்பணி செய்யப்பட்டது.
கும்பகோணம் அருகே கோவிந்தபுரத்தில், ஸ்ரீவிட்டல் ருக்மணி பாண்டுரங்கன் கோவில் முதல் கும்பாபிஷேகம் ஜூலை மாதம் 15 ஆம் தேதி, 2011 ஆம் ஆண்டில் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
ஜெயகிருஷ்ண தீட்சிதர் என்ற இயற்பெயர் கொண்ட விட்டல்தாஸ் மகராஜ், பல கோடி ரூபாய் மதிப்பில், மகாராஷ்ட்டிர மாநிலம், பண்டரிபுரத்தில் உள்ள போலவே, உபயதார்களின் உதவியில் இக்கோவிலை அமைத்துள்ளார் என்பது குறிப்படத்தக்கது.
அதன் பின்னர் அங்கிருந்து தஞ்சாவூர் வந்து மதிய உணவுக்கு பின், தென்னகக் கலை பண்பாட்டு மையத்துக்குச் சென்று, அங்கு நடைபெறும் வடகிழக்கு மாநிலங்களின் கலைவிழாவான கைவினைப் பொருட்கள் கண்காட்சி மற்றும் உணவுத் திருவிழாவில் பங்கேற்ற பின் தஞ்சாவூரில் இரவு தங்கும் ஆளுநர், 14 ஆம் தேதி காலை கார் மூலம் திருச்சிராப்பள்ளி விமான நிலையம் சென்று சென்னை செல்கிறார்.
கருத்துகள்