இதற்கு முன் எங்கெல்லாம் பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி நடந்ததோ, அங்கெல்லாம் மீண்டும் ஆட்சி அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது. அதாவது, அதிகாரத்தால், அதிகாரத்தை நிலை நாட்டிக் கொள்வது என்பது பாரதிய ஜனதா கட்சியின் ஃபார்முலா ஆகியது
பஞ்சாப்பில் பாரதிய ஜனதா கட்சியைப் பஞ்சராக்கிய நிலையில் மக்கள்.இதர மாநிலங்களில் மட்டுமே வெற்றியை பெற்றது பாரதிய ஜனதா . கட்சி என்பதை உற்றுநோக்க வேண்டும்.
காங்கிரஸ் கட்சி தன் தளங்களை மெல்ல, மெல்ல இழந்து கொண்டு வருவது அவர்கள் தங்களை சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும்
.ஒரு சிரிய யூனியன் பிரதேசத்தின் கட்சி ஆம் ஆத்மி தன்னை தேசிய கட்சியாக படிப்படியாக கட்டமைத்து வருவதுடன் பஞ்சாப் மாநிலத்தின் ஆட்சி அமைக்க உள்ள நிலையில் ஐந்த மாநில தேர்தல் முடிவுகள் வாயிலாக மக்கள் எதைச் சொல்கிறார்கள்?சமத்துவத்திற்கு வாக்களிக்காமல் உணர்வுகளுக்கு வாக்களித்துள்ளார்கள் என பல்வேறு கருத்துக்கள் உலவியபோதும் உத்திரப் பிரதேசம் மீண்டும் பாஜக வசமானது .
அரசியல் அறிவாளிகள் தனியார் நிறுவனங்களிடம் இருந்து தொண்டர்களிடம் மீண்டும் திரும்ப வேண்டும்.
5 மாநிலத்தில் தேர்தல் முடிவுகள் தரும் ஆழமான பாடமிது .உத்திரப்பிரதேச தேர்தல் பிரச்சாரத்தில் 20 க்கு எதிர் 80 என்று யோகி ஆதித்தியநாத் வெளிப்படையாக கூறினார்.
ஹிசாப் சிக்கலை புல்வாமா தாக்குதல்கள் போன்று தேர்தலுக்கு 3 வாரத்தில் நடத்தினார்கள்.
முத்தலாக் சட்ட மாற்றம் போன தேர்தலில் வந்தது.
அட்டவணைப் பிரிவு மக்கள் யாருடன் நின்றார்கள்.
இந்தக் கள ஆய்வுகளின் தரவுகள் இல்லாத போது உத்திரப்பிரதேசம் மட்டுமன்றி வேறு எங்கும் அரசியல் செய்ய முடியாது.
பஞ்சாப் மாநிலத்தின் ஆம் ஆத்மி வெற்றி என்பது டெல்லி போன்ற மேல் தர வர்க்க வாக்குகள் தான்.
ஆகவே அவர்கள் முதலாளித்துவ இந்துத்துவ ஆம் ஆத்மிக்கு வாக்களிக்கிறார்கள்.
காங்கிரசிற்கும் பாசகவிற்கும் எந்த வகையான வேறுபாடுகளும் இல்லை மதக் கோட்பாடுகளில் முதலாளித்துவத்தில் கல்வித் திட்டங்களில். பிறகு எதற்கு மீண்டும் காங்கிரசிற்கு வாய்ப்புகள் தர வேண்டும் என்று பாஜகவிற்கு வாக்குகளைக் குத்துகிறார்கள்.
இடதுசாரி அமைப்புகள் 1991 ஆம் ஆண்டுக்குப் பிறகு களத்தை விட்டு விட்டார்கள். இனி அவர்கள் எந்த வர்க்கத்தை எதிர்த்து அரசியல் செய்வார்கள்? என்பது எழு வினா 2004-2009 காலகட்டம் என்பது அப்போதைய பாஜகவுக்கு எதிரான வாக்குகள் பெற்றதால் இடதுசாரிகள் ஓரளவு வெற்றி பெற்றனர்.
தமிழ்நாட்டில் பாசக வளர்ச்சியை திமுக இணையதள உடன்பிறப்புகள், முற்போக்குகள் இடதுசாரிகள் வளர்த்து வருகிறார்கள். அதிமுகவின் உயிர்ப்பு இல்லாத நிலை என்பதைப் புரிந்து திமுகவின் எதிர்கால ஆண்டுகள் தொடர்ந்து தேய்மானத்தில் போகும் என்பது அரசியல் பார்வையாளர்கள் கருத்து
நாம் தமிழர் கட்சி களத்தில் இறங்கி மக்களோடு சேர்ந்து வேலை செய்தால் அன்றி இணையத்தில் மட்டுமே உயிருடன் இருக்கும் வாங்கு வங்கி கிடையாது மேலும் அதில் உள்ள நபர்கள் தங்களை இலங்கை தமிழர் ஆதரவாளராக மட்டுமே வெளிக்காட்டும் நிலையில் பாஜக தன் இலக்கை நோக்கி தமிழகத்தின் மீது படிப்படியாக அடி வைக்கிறது என்றே கூறலாம். உத்திரப்பிரதேச தேர்தல் வரலாற்றில் பிரதமர் நரேந்திர தலைமையில் தொடர்ந்து இரண்டாவது முறையாக தனிப் பெருமான்மையுடன் முதல்வர் யோகி ஆதித்யா நாத் வெற்றி பெற்று மீண்டும் வரலாறு படைத்து ஆட்சி அமைக்க .
பாஜகவின் மேல் வாக்காளர்கள் அதிக நம்பிக்கை வைத்துள்ளனர் என்பது தெளிவாகிறது. காங்கிரஸ் கட்சி தற்போது நிலையில் நல்ல தலைமை தேவை என்பதே தேர்தலில் உணர்த்தும் பாடம்.
கருத்துகள்