பெண் நீதிபதி கணவர் மீது சில இளைஞர்கள் தகராறு செய்து தாக்குதல் இருவர் கைது .
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி குற்றவியல் நீதித்துறை நடுவரான நர்மதா.தனது கணவர் நவீன்குமாருடன் நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் காரைக்குடி பர்மா காலனியில் புதிதாகத் துவக்கப்பட்டுள்ள ‘மங்கிஸ் மேஜிக்’ என்ற உணவகத்திற்கு சாப்பிடச் சென்றுள்ளனர் உணவக வாசலில் செல்பி எடுத்துக் கொண்டிருந்த சில இளைஞர்கள், வழி விடும்படி கேட்ட நீதிபதியின் கணவர் மீது, தாக்குதல் நடத்த முற்பட்டதால் அதிர்ச்சியான நிலையில் தகராறு செய்த இருவர் கைது
அதே கடை வாசல் பகுதியில் 5 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஒன்று கூடி நின்று ‘செல்பி’ எடுத்துள்ளனர். வழியை மறித்துக் கொண்டு நின்று செல்பி எடுப்பவர்களைப் பார்த்து நீதிபதியின் கணவர் ‘வழிவிடுங்கள், தள்ளி நின்று எடுங்கள்’ எனக் கூறியதாகத் தெரிகிறது.
வந்திருப்பது பெண் நீதிபதி மற்றும் அவரது கணவர் என அறியாத அந்த இளைஞர்கள் நீதிபதியின் கணவரிடம் வாக்குவாதம் செய்துள்ளனர். வாக்குவாதம் முற்றிய நிலையில் இளைஞர் ஒருவர் நீதிபதியின் கண்முன்னே அவரது கணவர் நவீன்குமாரைத் தள்ளி விட்டதுடன் வாக்குவாதமும் செய்துள்ளனர். அங்கு அருகிலிருந்தவர்கள் தடுத்து சமாதனம் செய்து அனுப்பி வைத்திருக்கின்றனர் . இதன் பின்னர் நடந்த சம்பவம் குறித்து நீதிபதியின் கணவர் நவீன்குமார் காரைக்குடி வடக்குக் காவல் நிலையத்தில் புகார் செய்ததன் அடிப்படையில் உணவகத்திலுள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளைக் கொண்டு இரண்டு இளைஞர்களைக் காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கருத்துகள்