புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே கவரப்பட்டியில் பெட்டிக்கடை நடத்தி வருபவர் சங்கர் (வயது 29). இவருக்கு பிறவிலேயே பார்வையிழந்தவர். சங்கர் கவரப்பட்டி பள்ளி அருகே யாரோ அரசுக்கு தெரியாமல் மது விற்பனை செய்வதாகவும் அதனை தடுத்து அவர்களை கைது செய்ய வேண்டியும் காவல்துறை அவசரப் போலீஸ் உதவி எண் 100-க்கு தகவல் அளித்துள்ளார். அதன் காரணமாக அவரைத் துன்புறுத்தியுள்ளனர். இதனால் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
தற்போது பார்வையற்ற மாற்று திறனாளி சங்கர் விராலிமலை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்ற நிலையில் .புகாரை எடுத்துக்கொண்ட காவல்துறை புதுக்கோட்டை மாவட்ட காவல் கட்டுப்பாட்டுக்கு மாற்றப்பட்டது. மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபன் உரிய நடவடிக்கை எடுக்க விராலிமலை காவல் நிலையத்திற்கு உத்தரவிட்டார்.
இதை அறிந்த விராலிமலை காவல் நிலையத்தில் பணி செய்யும் பணியாளர்கள் "நீ எப்படி 100 க்கு அழைத்து தகவல் சொல்லாலாம், நீயும் மதுபானம் விற்பனை செய்வதாக எங்களுக்குத் தகவல் வந்துள்ளது. விசாரனைக்கு காவல் நிலையம் வர வேண்டும் என்று அழைத்து சென்றுள்ளனர்.
அங்கு காவல் நிலையம் வெளியில் உள்ள புளிய மரத்தடியில் அவரை அடித்து துன்புறுத்தியுள்ளனர். இதனால் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
தற்போது பார்வையற்ற மாற்று திறனாளி சங்கர் விராலிமலை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த பிரச்சினையை அறிந்த முன்னாள் அமைச்சரும், விராலிமலை சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர்.விஜயபாஸ்கர் மத்திய மண்டல காவல்துறை தலைவர் .பாலகிருஷ்ணனை தொலைபேசியில் தொடர்புகொண்டு இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியதைத் தொடர்ந்து, மாற்றுத் திறனாளி சங்கரைத் தாக்கிய 3 காவலர்களையும் பணியிடை நீக்கம் செய்து டிஐஜி சரவணா சுந்தர் உத்தரவிட்டுள்ளார்.
அதேபோல் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தாலுகா ராஜகிரி அஞ்சல் விரலூர் கிராமத்தில் அடங்கிய சிறு கிராமம் கொடிக்கால்பட்டி இங்கு வசிக்கும் சுப்பையா மகன் சிவக்குமார் புதுக்கோட்டை மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளருக்கு அனுப்பி வைத்துள்ள புகார் மனு ஒன்றில். சசிக்கலா என்பவர் இடத்தில் கடைநடத்தும் துரைராஜ், சுப்ரமணியன், பழனிச்சாமி ஆகியோர் சட்ட விரோதமாக மது விற்பனை செய்வதால் மக்கள் வசிக்கும் பகுதி மதுக்கடை பார் போல மாற்றம் ஆன நிலையில்
பெண்கள் குழந்தைகள் அந்தப் பகுதியில் நடமாட இயலாத நிலையில் உள்ள தகவல் அந்த பகுதியில் உள்ள காவல்துறை அறிந்தும் மாமூல் காரணமாக நடவடிக்கை எடுக்கவில்லை என்பதை அவர் கூறிய புகார் உறுதிப்படுத்தும் நிலையில் மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளர் இனியாவது துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பகுதி மக்களின் கோரிக்கையாகும்.
கருத்துகள்