முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

குஜராத் காந்தி நகரில் நடைபெறவுள்ள மிகப் பெரிய பாதுகாப்புக் கண்காட்சிக்கான ஏற்பாடுகள்: மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆய்வு

குஜராத் காந்தி நகரில் நடைபெறவுள்ள மிகப் பெரிய பாதுகாப்புக் கண்காட்சிக்கான ஏற்பாடுகள்: மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆய்வு


குஜராத் காந்தி நகரில் நடைபெறவுள்ள ஆசியாவின் மிகப் பெரிய பாதுகாப்பு க்  கண்காட்சி-2022க்கான ஏற்பாடுகளை, பாதுகாப்புத்துறை  அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங் இன்று ஆய்வு செய்தார்.  இதில் தரைப்படை, கடற்படை, விமானப்படை மற்றும் உள்நாட்டு பாதுகாப்புக்கான கருவிகள் இடம் பெறுகின்றன. கோவிட்-19 தொற்று குறைந்து வருவதால், சுதகாதாரத்துக்கான நெறிமுறைகளை மத்திய அரசு கடந்த பிப்ரவரி  10ம் தேதி தளர்த்தியது. அப்போது முதல் இந்நிகழ்ச்சிக்கான முக்கியத்துவம் அதிகரித்து வருகிறது.


கடந்த 1999ம் ஆண்டு பாதுகாப்புக்  கண்காட்சி தொடங்கப்பட்டது. ஆனால் தற்போதைய கண்காட்சி இதுவரை இல்லாத அளவில் மிகப் பெரியது. கொரோனா தொற்று காரணமாக, இந்தாண்டு பாதுகாப்பு கண்காட்சி நடைபெறுமா இல்லலையா என்ற நிச்சயமற்ற தன்மை இருந்தபோதும்,  பாதுகாப்புத்  தளவாட  உள்நாட்டு உற்பத்தித்  திட்டங்கள் ஒத்தி வைக்கப்படவில்லை.  பாதுகாப்புக்  கண்காட்சி - 2022 நடத்தவும் பாதுகாப்புத்துறை அமைச்சகம் கடந்த 2021ம் ஆண்டு ஜூலை 31ம் தேதி முடிவெடுத்தது.

பாதுகாப்புக்  கண்காட்சி-2022, இந்தியாவின் பெருமைக்கான பாதையை எதிரொலிக்கவுள்ளது.  பாதுகாப்புக்  கண்காட்சியை, அனைத்து தரப்பினரையும் உள்ளடங்கியதாக மாற்ற, இது நேரடியாகவும், காணொலி மூலமாகவும் நடத்தப்படுகிறது. கட்டுப்பாடுகள் மற்றும் தாமதங்களால் இந்தக்  கண்காட்சியில் நேரடியாக கலந்து கொள்ள முடியாத நிறுவனங்கள் காணொலி மூலம் பங்கேற்கலாம்.  கண்காட்சியில் நேரடியாக பங்கேற்க முடியாதவர்கள், காணொலிமூலம் அதிகளவில் பங்கேற்க வேண்டும் என பாதுகாப்புத்துறை அமைச்சகம் அழைப்பு விடுத்துள்ளது.

பாதுகாப்பு கண்காட்சி, 3 இடங்களில் 1 லட்சம் சதுர மீட்டர் பரப்பளவில் நடந்தத்  திட்டமிடப்பட்டு வருகிறது. ஹெலிபேட் கண்காட்சி மையத்தில் கண்காட்சியும், மகாத்மா மந்திர் கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி மையத்தில் நிகழ்ச்சிகளும், கருத்தரங்குகளும், சபர்மதி ஆற்றங்கரையில் நேரடி செய்முறை விளக்கமும் நடத்தப்படவுள்ளன. 

இந்தியாவில் சுகாதார நெறிமுறைகள் தளர்த்தப்பட்டிருப்பது, பாதுகாப்புக்  கண்காட்சி -2022-ல் அதிக ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், இதில் 78 நாடுகள் பங்கேற்பதாகவும் பாதுகாப்புத்துறை அமைச்சர் குறிப்பிட்டார். இதற்காக 39 அமைச்சர்கள் அடங்கிய  குழுவினர் மற்றும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள் வரவேற்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். வெளிநாட்டு பாதுகாப்புத்துறை அமைச்சர்களின் வருகையும் உறுதி செய்யப்பட்டு வருகிறது.

பிரம்மாண்ட பாதுகாப்புக்  கண்காட்சி-2022-க்கான கவுன்ட் டவுன் தொடங்கியுள்ளதால், பாதுகாப்புத்துறை  வர்த்தகத்தின் நலனுக்காக பாதுகாப்புத்  துறை அமைச்சகத்தின் மீது நம்பிக்கை வைத்து, பல நிறுவனங்கள் இதில் கலந்து கொள்கின்றன. இந்தக்  கண்காட்சி மேலும் ஒரு நாள் நீட்டிக்கப்பட்டுள்ளது உள்ளூர் மாணவர்களுக்கு பலன் அளிக்கும் எனவும், அவர்களுக்கு பிரத்தியேக  வசதிகள் திட்டமிடப்பட்டுள்ளன எனவும் அமைச்சர் திரு.ராஜ்நாத் சிங் தெரிவித்தார். 2022 மார்ச் 14ம் தேதி நடைபெறும் பாதுகாப்புக் கண்காட்சியில், இளம் தொழில்முனைவோர், குஜராத்தின் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களுக்கான அனைத்து வசதிகளும் இருக்கும்.

பிராந்தியத்தில் அமைதி மற்றும் பாதுகாப்பை வலுப்படுத்துவதில், உலகளாவிய நடவடிக்கையை மேற்கொண்டு, வர்த்தக நலன்களை மேலும் அதிகரிக்கும் இந்தியாவின் தீர்மானத்தின் அடையாளமாக பாதுகாப்புக்  கண்காட்சி - 2022 உள்ளது. பாதுகாப்புக்  கண்காட்சிக்கான தயார் நிலை மற்றும் முயற்சிகளை ஆய்வு செய்த பாதுகாப்புத்துறை அமைச்சர், பாதுகாப்புக்  கண்காட்சி-2022 பாதுகாப்பாகவும், வெற்றிகரமாகவும் நடத்தப்படும் என நம்பிக்கை தெரிவித்தார்.

பாதுகாப்புத்துறை இணையமைச்சர் திரு அஜய் பட், ராணுவத்   தளபதி ஜெனரல் மனோஜ் முகந்த் நரவானே, டிஆர்டிஓ தலைவர் டாக்டர் ஜி சதீஷ் ரெட்டி உட்பட பலர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவில் யானை ஐராவதமானது

இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதியால் திருவண்ணாமலை சன்யாசிக்கு திருச்சுழி ஆலயத்தில் வைத்து தானமளிக்கப்பட்ட ஆலயங்கள் தான்  திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம் பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தான மடாலயத்தின் பராமரிப்பிலுள்ள அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவிலுக்கு 1971-ஆம் ஆண்டு ஆத்தங்குடி கா.அரு.கா.காடப்ப செட்டியார் குடும்பத்தின் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி அதில்  யானை சுப்புலட்சுமி சிறிய குட்டி யானையாக கேரளாவில் இருந்து வனத்துறை மூலம் வாங்க பழைய 46 வது மடாதிபதி தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியார் அடிகளார் மூலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த யானை கோவில் அருகேயுள்ள மடத்தின் தகரக் கூடாரத்தில் உள் பகுதியில் கிடுகு வேயப்பட்ட நிலையில் மூன்றாவது யானைப் பாகன் கார்த்திக் பராமரிப்பு செய்த நிலையில் ஆலயத்தில் அழகு மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கலந்து பாதுகாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தீ பற்றி பரவியதில் முன் பின் கால்கள் கட்டப்பட்டிருந்த யானை கோவில் யானை பாகன் அருகில் இல்லாமல் இருந்ததால் வெப்பம் தாக்காமல் இருக்க தகர மேற்கூரைக்கு அட...