திருப்பூர் அருகே பட்டா மாறுதலுக்கு இலஞ்சம் வாங்கிய ஊழல் பெருச்சாளி கைது ;
பட்டா பெயர் மாறுதலுக்கு, 25 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய முதுநிலை வருவாய் ஆய்வாளரை, ஊழல் தடுப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் கைது செய்தனர்.
திருப்பூர் மாவட்டம் செரங்காடு ராஜேந்திரன், (வயது 52); பனியன் பிரின்டிங் நிறுவனத்தின் உரிமையாளர்.
தாராபுரம் வட்டம் பொன்னாபுரத்தில், அவரது தந்தை பெயரிலிருந்த, 2.52 ஏக்கர் நிலத்துக்கு பட்டா பெயர் மாறுதல் செய்ய உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்தார்.
அதற்கு தாராபுரம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் பணிசெய்யும், முதுநிலை வருவாய் ஆய்வாளர் மகேந்திரன் வின்சென்ட், (வயது 40) தனக்கு 25 ஆயிரம் ரூபாய் லஞ்சமாகத் தரும்படி கேட்டதால்.
ராஜேந்திரன், திருப்பூர் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் செய்தார்.
அவர்கள் அறிவுறுத்தியபடி, பினாப்தளின் இரசாயனப் பொடி தடவிய ரூபாய் நோட்டுகளுடன், ராஜேந்திரன் நேற்று பிற்பகல் 3:00 மணியளவில் அரசு தரப்பில் வந்த சாட்சியுடன் சென்று வருவாய் அலுவலர் மகேந்திரன் வில்சனை அவரது அலுவலகத்தில் சந்தித்து
25 ஆயிரம் ரூபாயை வாங்கிய நிலையில் மகேந்திரன் வின்சென்டை, தொலைவில் கண்காணிப்பில் மறைந்திருந்த இலஞ்ச ஒழிப்புத் துறையினர் கைது செய்தனர். விசாரணைக்கு பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டார்.
கருத்துகள்