முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தமிழ்நாட்டின் முதல்வர் மு.க. ஸ்டாலின், அரசுமுறைப் பயணமாக துபாய் சென்றார்.

தமிழ்நாட்டின் முதல்வர் மு.க. ஸ்டாலின், அரசுமுறைப் பயணமாக துபாய் சென்றார்.

துபாய் கண்காட்சியில் அவர்  தமிழ்நாடு அரங்கத்தைத் திறந்து வைக்கும் கண்காட்சியில் 192 நாடுகள் பங்கேற்கின்றன.

2021 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 1 ஆம் தேதி துபாயில் உலக எக்ஸ்போ கண்காட்சி தொடங்கி மார்ச் 31 ஆம் தேதி வரை நடக்கவுள்ளது. தமிழகத்துக்கு பெருமை சேர்க்கும் வகையில், துபாயின் இந்த கண்காட்சியில் மார்ச் 25 முதல் மார்ச் 31 ஆம் தேதி வரை தமிழ்நாடு வாரமாக அனுசரிக்கப்படுமென



தெரிவிக்கப்பட்ட.தையடுத்து, துபாய் உலக எக்ஸ்போ கண்காட்சியில் தமிழ்நாடு வார நிகழ்வுகளையும்  தமிழ்நாடு அரங்கினைபும் திறந்து வைப்பதற்காக சென்ற தமிழகத்தின் முதல்வர் மு.க.ஸ்டாலின்  துபாய் பயணம் தொடர்பாக தமிழக அரசு   வெளியிட்டுள்ள அறிக்கையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் துபாய் கண்காட்சியில் இன்று தமிழ்நாடு அரங்கைத் திறந்து வைப்பாரெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. துபாயின் இந்த கண்காட்சி அரங்கில் கலை, கலாசாரம், கைத்தறி, கைவினைப் பொருட்கள், தொழில்துறை, மருத்துவம், சுற்றுலா, ஜவுளி, தமிழ் வளர்ச்சி, தகவல், தொழில் பூங்காக்கள், உணவுப் பதப்படுத்துதல் என  தமிழகத்தின் சிறப்பை உலகிற்கு எடுத்து காட்டும் வகையில் காட்சிப்படங்கள் திரையிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்ட நிலையில்





அவருடன் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தொழில்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் கிருஷ்ணன், முதல்-அமைச்சரின் செயலாளர்கள் உதய சந்திரன், உமாநாத் மற்றும் அனு ஜார்ஜ் உள்ளிட்ட சில அதிகாரிகளும் அவருடன் பயணம் மேற்கொள்ள உள்ளனர். தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் முன்பே துபாய்க்கு சென்றுள்ளார்.



கண்காட்சியில்  192 நாடுகள் பங்கேற்கின்றன. ஒவ்வொரு நாட்டிற்கும் பிரத்யேக அரங்குகள் அமைக்கப்பட்டுள்ள துபாய் கண்காட்சியில் தமிழக அரங்கு அமைக்கபடுவதன் மூலம், பல உலக முதலீட்டாளர்கள் தமிழக தொழில்துறை பற்றியும் இங்குள்ள தனித்துவமான பல அம்சங்கள் பற்றியும் தெரிந்துகொள்ள  வாய்ப்பாக அமையலாம். 



தொழில் வளர்ச்சியில் எப்போதுமே தமிழகம் மிகச் சிறப்பாக செயல்படுகிறது. தமிழகத்தில் புதிய தொழில்களைத் தொடங்குவதிலும், நடைபெரும் தொழில்களை விரிவாக்கம் செய்யவும் அரசு முனைப்புக் காட்டுகிறது. புதிய கொள்கைகளை உருவாக்குவதோடு, தொழில் தொடங்குவதற்கான நடைமுறைகளை எளிமைப்படுத்துவதையும் தமிழக அரசு சீராகச் செய்கிறது.

வெளிநாட்டு தொழில் முதலீடுகளில் ஈர்ப்பதில் சிறப்பு கவனத்தை தமிழகத்தின் சார்பில்  சாலை, மனிதவளம், மின்சாரம், தொழிலிடம் உள்பட பல்வேறு அடிப்படை வசதிகளை அரசு மேம்படுத்தி வரும் புதிய தொழில்நுட்பங்களுக்கான கொள்கைகளையும் அரசு வகுத்த நிலையில்

முன்பு ஆட்சிக் காலத்தில் முதல்-அமைச்சரான  எடப்பாடி கே.பழனிசாமி



நேரடியாக அமெரிக்கா, லண்டன், துபாய் உள்ளிட்ட இடங்களுக்கு 14 நாட்கள் சுற்றுப் பயணம் மேற்கொண்டு, அங்குள்ள தொழிலதிபர்களை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டது போல 

தற்போதைய  தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் துபாய் தவிர அபுதாபிக்கும் செல்லவுள்ள நிலையில் உடன் தொழிதுறை சார்ந்த அமைச்சர்கள், அதிகாரிகள், தொழிலதிபர்களை முதல்வர் சந்தித்துப் பேசும் நிலை உருவாகும். முதக்வரின் பயணம் தமிழ் நாட்டிற்கு  அதிக  முதலீடுகளை ஈர்க்க வழிவகுக்கும் என நம்பலாம். மு.க.ஸ்டாலின் 


முதல்-அமைச்சராகப் பொறுப்பேற்ற பின் முதலீட்டை ஈர்க்க  முதலாவதாகச் செல்லும் அரசு முறை வெளிநாட்டுப் பயணத்தில் சார்ஜாவிலுள்ள பல்கலைக்கழகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கௌரவ முனைவர் பட்டம் அளிக்கப்பட உள்ளது‌ சென்னையில் இருந்து நேற்று மாலை 6 மணிக்கு விமானம் மூலமாக துபாய்க்கு புறப்பட்ட முதல்வர் நான்கு நாட்கள்  சுற்றுப் பயணத்தை மேற்கொண்டு மார்ச் மாதம் 28-ஆம் தேதி சென்னை திரும்புவார். துபாய் சென்ற முதல்வரை அமைச்சர்கள் வழியனுப்பி வைத்த நிலையில் துபாய் விமான நிலையத்தில், ஐக்கிய அமிரகத்திற்கான இந்திய துணைத் தூதர் அய்மன்புரி, துபாய் அரசு உயர் அலுவலர்கள். இசா அப்துல்லா அல்கோரர்,  ஸ்காலித் ஜமால் அல்ஹை ஆகியோர் வரவேற்றனர்.  துபாய் பன்னாட்டு நிதி மையத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தின் பொருளாதாரத் துறை அமைச்சர்  அப்துல்லா பின் டூக் அல் மர்ரியையும், ஐக்கிய அரபு அமீரகத்தின் வெளிநாட்டு வர்த்தகத் துறை அமைச்சர் டாக்டர் தானி பின் அகமது அல் சியோதியையும்  முதலமைச்சர் சந்தித்து, பல்வேறு துறைகளில் தமிழகத்தில் முதலீடுகள் மேற்கொள்வது குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவில் யானை ஐராவதமானது

இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதியால் திருவண்ணாமலை சன்யாசிக்கு திருச்சுழி ஆலயத்தில் வைத்து தானமளிக்கப்பட்ட ஆலயங்கள் தான்  திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம் பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தான மடாலயத்தின் பராமரிப்பிலுள்ள அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவிலுக்கு 1971-ஆம் ஆண்டு ஆத்தங்குடி கா.அரு.கா.காடப்ப செட்டியார் குடும்பத்தின் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி அதில்  யானை சுப்புலட்சுமி சிறிய குட்டி யானையாக கேரளாவில் இருந்து வனத்துறை மூலம் வாங்க பழைய 46 வது மடாதிபதி தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியார் அடிகளார் மூலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த யானை கோவில் அருகேயுள்ள மடத்தின் தகரக் கூடாரத்தில் உள் பகுதியில் கிடுகு வேயப்பட்ட நிலையில் மூன்றாவது யானைப் பாகன் கார்த்திக் பராமரிப்பு செய்த நிலையில் ஆலயத்தில் அழகு மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கலந்து பாதுகாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தீ பற்றி பரவியதில் முன் பின் கால்கள் கட்டப்பட்டிருந்த யானை கோவில் யானை பாகன் அருகில் இல்லாமல் இருந்ததால் வெப்பம் தாக்காமல் இருக்க தகர மேற்கூரைக்கு அட...