தமிழ்நாட்டின் முதல்வர் மு.க. ஸ்டாலின், அரசுமுறைப் பயணமாக துபாய் சென்றார்.
துபாய் கண்காட்சியில் அவர் தமிழ்நாடு அரங்கத்தைத் திறந்து வைக்கும் கண்காட்சியில் 192 நாடுகள் பங்கேற்கின்றன.
2021 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 1 ஆம் தேதி துபாயில் உலக எக்ஸ்போ கண்காட்சி தொடங்கி மார்ச் 31 ஆம் தேதி வரை நடக்கவுள்ளது. தமிழகத்துக்கு பெருமை சேர்க்கும் வகையில், துபாயின் இந்த கண்காட்சியில் மார்ச் 25 முதல் மார்ச் 31 ஆம் தேதி வரை தமிழ்நாடு வாரமாக அனுசரிக்கப்படுமென
தெரிவிக்கப்பட்ட.தையடுத்து, துபாய் உலக எக்ஸ்போ கண்காட்சியில் தமிழ்நாடு வார நிகழ்வுகளையும் தமிழ்நாடு அரங்கினைபும் திறந்து வைப்பதற்காக சென்ற தமிழகத்தின் முதல்வர் மு.க.ஸ்டாலின் துபாய் பயணம் தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் துபாய் கண்காட்சியில் இன்று தமிழ்நாடு அரங்கைத் திறந்து வைப்பாரெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. துபாயின் இந்த கண்காட்சி அரங்கில் கலை, கலாசாரம், கைத்தறி, கைவினைப் பொருட்கள், தொழில்துறை, மருத்துவம், சுற்றுலா, ஜவுளி, தமிழ் வளர்ச்சி, தகவல், தொழில் பூங்காக்கள், உணவுப் பதப்படுத்துதல் என தமிழகத்தின் சிறப்பை உலகிற்கு எடுத்து காட்டும் வகையில் காட்சிப்படங்கள் திரையிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்ட நிலையில்
அவருடன் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தொழில்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் கிருஷ்ணன், முதல்-அமைச்சரின் செயலாளர்கள் உதய சந்திரன், உமாநாத் மற்றும் அனு ஜார்ஜ் உள்ளிட்ட சில அதிகாரிகளும் அவருடன் பயணம் மேற்கொள்ள உள்ளனர். தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் முன்பே துபாய்க்கு சென்றுள்ளார்.
கண்காட்சியில் 192 நாடுகள் பங்கேற்கின்றன. ஒவ்வொரு நாட்டிற்கும் பிரத்யேக அரங்குகள் அமைக்கப்பட்டுள்ள துபாய் கண்காட்சியில் தமிழக அரங்கு அமைக்கபடுவதன் மூலம், பல உலக முதலீட்டாளர்கள் தமிழக தொழில்துறை பற்றியும் இங்குள்ள தனித்துவமான பல அம்சங்கள் பற்றியும் தெரிந்துகொள்ள வாய்ப்பாக அமையலாம்.
தொழில் வளர்ச்சியில் எப்போதுமே தமிழகம் மிகச் சிறப்பாக செயல்படுகிறது. தமிழகத்தில் புதிய தொழில்களைத் தொடங்குவதிலும், நடைபெரும் தொழில்களை விரிவாக்கம் செய்யவும் அரசு முனைப்புக் காட்டுகிறது. புதிய கொள்கைகளை உருவாக்குவதோடு, தொழில் தொடங்குவதற்கான நடைமுறைகளை எளிமைப்படுத்துவதையும் தமிழக அரசு சீராகச் செய்கிறது.
வெளிநாட்டு தொழில் முதலீடுகளில் ஈர்ப்பதில் சிறப்பு கவனத்தை தமிழகத்தின் சார்பில் சாலை, மனிதவளம், மின்சாரம், தொழிலிடம் உள்பட பல்வேறு அடிப்படை வசதிகளை அரசு மேம்படுத்தி வரும் புதிய தொழில்நுட்பங்களுக்கான கொள்கைகளையும் அரசு வகுத்த நிலையில்
முன்பு ஆட்சிக் காலத்தில் முதல்-அமைச்சரான எடப்பாடி கே.பழனிசாமி
நேரடியாக அமெரிக்கா, லண்டன், துபாய் உள்ளிட்ட இடங்களுக்கு 14 நாட்கள் சுற்றுப் பயணம் மேற்கொண்டு, அங்குள்ள தொழிலதிபர்களை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டது போல
தற்போதைய தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் துபாய் தவிர அபுதாபிக்கும் செல்லவுள்ள நிலையில் உடன் தொழிதுறை சார்ந்த அமைச்சர்கள், அதிகாரிகள், தொழிலதிபர்களை முதல்வர் சந்தித்துப் பேசும் நிலை உருவாகும். முதக்வரின் பயணம் தமிழ் நாட்டிற்கு அதிக முதலீடுகளை ஈர்க்க வழிவகுக்கும் என நம்பலாம். மு.க.ஸ்டாலின்
முதல்-அமைச்சராகப் பொறுப்பேற்ற பின் முதலீட்டை ஈர்க்க முதலாவதாகச் செல்லும் அரசு முறை வெளிநாட்டுப் பயணத்தில் சார்ஜாவிலுள்ள பல்கலைக்கழகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கௌரவ முனைவர் பட்டம் அளிக்கப்பட உள்ளது சென்னையில் இருந்து நேற்று மாலை 6 மணிக்கு விமானம் மூலமாக துபாய்க்கு புறப்பட்ட முதல்வர் நான்கு நாட்கள் சுற்றுப் பயணத்தை மேற்கொண்டு மார்ச் மாதம் 28-ஆம் தேதி சென்னை திரும்புவார். துபாய் சென்ற முதல்வரை அமைச்சர்கள் வழியனுப்பி வைத்த நிலையில் துபாய் விமான நிலையத்தில், ஐக்கிய அமிரகத்திற்கான இந்திய துணைத் தூதர் அய்மன்புரி, துபாய் அரசு உயர் அலுவலர்கள். இசா அப்துல்லா அல்கோரர், ஸ்காலித் ஜமால் அல்ஹை ஆகியோர் வரவேற்றனர். துபாய் பன்னாட்டு நிதி மையத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தின் பொருளாதாரத் துறை அமைச்சர் அப்துல்லா பின் டூக் அல் மர்ரியையும், ஐக்கிய அரபு அமீரகத்தின் வெளிநாட்டு வர்த்தகத் துறை அமைச்சர் டாக்டர் தானி பின் அகமது அல் சியோதியையும் முதலமைச்சர் சந்தித்து, பல்வேறு துறைகளில் தமிழகத்தில் முதலீடுகள் மேற்கொள்வது குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.
கருத்துகள்