திப்ருகரில் சுற்றுலா மற்றும் ஆற்றுப் பகுதி மேம்பாட்டுத் திட்டங்களை திரு. சர்பானந்த சோனோவால் ஆய்வு செய்தார்
திப்ருகரில் சுற்றுலா மற்றும் ஆற்றுப் பகுதி மேம்பாட்டுத் திட்டங்களை திரு. சர்பானந்த சோனோவால் ஆய்வு செய்தார்
திப்ருகரில் சுற்றுலா படகுத்துறை மற்றும் போகிபீல் பாலத்திற்கு அருகே ஆற்றுப் பகுதி மேம்பாட்டுத் திட்டங்களை மத்திய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழி அமைச்சர் திரு.சர்பானந்த சோனோவால் இன்று ஆய்வு செய்தார்.
பல்முனை இணைப்புக்கான பிரதமரின் கதிசக்தி தேசிய மாபெரும் செயல் திட்டத்தின் கீழ் இந்திய அரசு மற்றும் வடகிழக்கு ஃப்ரான்டியர் ரயில்வேயால் இத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. 2021 நவம்பர் 22 அன்று அமைச்சர் செய்த ஆய்வின் தொடர்ச்சியாக இந்த ஆய்வு அமைந்துள்ளது. அதிகாரிகள் மற்றும் இதர பங்குதாரர்களை இன்றைய பயணத்தின்போது சந்தித்த அமைச்சர், திட்டங்களை உரிய நேரத்தில் நிறைவு செய்யுமாறு அவர்களைக் கேட்டுக்கொண்டார்.
ஆங்கிலேய ஆட்சியின் போது முக்கிய ஆற்று துறைமுகமாக இருந்த திப்ருகர், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றியது. திப்ருகரை நாட்டின் முக்கிய ஆற்று துறைமுகமாக உருவாக்குவதற்காக போகிபீல் பாலத்தின் அருகே வளர்ச்சி திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பிரதமரின் கதிசக்தி தேசிய மாபெரும் செயல் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்கள் நீர்வழிகளின் வாயிலாக திப்ருகருக்கான இணைப்பு வசதிகளை மேம்படுத்துவதோடு, வேலைவாய்ப்புகளை உருவாக்கி இப்பகுதியின் மக்களுக்கு சர்வதேச சந்தை அணுகல்களை வழங்கும்.
கருத்துகள்