விவசாயிகளுக்கான பாதுகாப்பு உபகரணங்கள்
விவசாயிகளுக்கிடையே புதிய பல்வேறு ஒருங்கிணைந்த பூச்சிக்கொல்லி மருந்து மேலாண்மை தொழில்நுட்பம் தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 35 மத்திய ஒருங்கிணைந்த பூச்சிக்கொல்லி மருந்து மேலாண்மை மையங்கள் செயல்படுகின்றன.
இதன் மூலம் விவசாயிகளுக்கான பண்ணைப் பள்ளிகள் நடத்தப்படுகின்றன.
விவசாய நிலங்களில் பூச்சிகளை எளிதில் கண்டறிவதற்கான உபகரணங்கள் வழங்கப்படுகின்றன. அத்துடன் கையுறைகள், தொப்பி, கவசஉடை உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களும் அவர்களுக்கு அளிக்கப்படுகின்றன. பூச்சிக்கொல்லி மருந்துகளை தெளிக்கும் போது இந்த உபகரணங்களை பயன்படுத்துவது குறித்த செயல்முறையும் அவர்களுக்கு அளிக்கப்படுகிறது. ரசாயன பூச்சிக்கொல்லி மருந்துகளை தெளிக்கப்பட வேண்டிய அளவு குறித்து விவசாயிகளுக்கு இதில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
மக்களவையில் இது குறித்த கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த போது மத்திய வேளாண் அமைச்சர் திரு நரேந்திர சிங் தோமர் கூறினார்.
கருத்துகள்