வேலூர் சின்ன அல்லாபுரத்தில் கேபிள் டிவி ஆப்பரேட்டர் துரைவர்மா. நேற்றிரவு தன் எலெக்ட்ரிக் பைக்கை வீட்டில் சார்ஜ் செய்ய போட்டுவிட்டு உறங்கச் சென்று உள்ளார்.
இவருடைய மகள் மோகன பிரீத்தி 8 ஆம் வகுப்பில் படிக்கிறார். சமீபத்தில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்கிய நிலையில் அதை அதிக நேரம் ஜார்ஜ் செய்ய நினைத்ததால் தூங்கியிருக்கின்றனர். எலெக்ட்ரிக் பைக்கின் சார்ஜ் அதிகமாகி வயரில் தீப்பிடித்ததால் நள்ளிரவில் பைக் வெடித்துச் சிதறியது. இதனால் அருகிலிருந்த மற்றொரு பைக்கும் தீப்பற்றி எரிந்தது. வீட்டிற்குள்ளிருந்து பார்த்த தந்தையும் மகளும் புகைமூட்டம் அதிகமாக இருப்பதால் வெளியே செல்லவேண்டாம் என நினைத்து கழிவறையில் பதுங்கியிருகக. எதிர்பாராதவிதமாக கழிவறையிலும் புகைமூட்டம் சூழ்ந்ததனால் மூச்சுத்திணறி கழிவறையிலேயே தந்தை மகள் இருவரும் உயிரிழந்தனர். துரைவர்மா வீட்டிலிருந்து அதிகப்படியான புகை வருவதைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் தீயணைப்புத் துறை மற்றும் காவல்துறைக்கு தகவல் அளித்ததன் அடிப்படையில் வந்த
தீயணைப்புத்துறையினர் தீயை அணைத்து உள்ளே சென்று பார்த்தபோது இருவரும் உயிரிழந்தது தெரியவந்தது. கழிவறையிலிருந்து உடல்களை மீட்ட காவல்துறையினர், பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதேபோல் ஏற்கனவே ஓரிடத்தில் இது போன்ற எலக்ட்ரிக் பைக் விபத்து நிகழ்ந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த பைக் ஆபத்து நிறைந்த தென் மக்கள் மத்தியில் ஒரு பயம் நிலவுகிறது.
கருத்துகள்