தமிழ்நாட்டில் பரவும் ஒவ்வாமை உணவும், ஒட்டகப் பால் தேனீர் கடைகளும்.
கோயம்புத்தூர் மாவட்டம் நீலாம்பூரைச் சேர்ந்த மணிகண்டன். பார்சல் சர்வீஸ் நடத்தியவர், கரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், நோய் எதிர்ப்பு திறன் அதிகரிக்க ஒட்டகப் பால் குடித்தால் நன்மை என யாரோ ஒருவர் கூறியதை அறிந்து, ஒட்டகப் பால் வாங்கிக் குடித்து வந்ததுடன், ஒட்டக பால் குறித்து பதிவுகளையும் படித்துள்ளார். ஒட்டகப் பாலின் நன்மையை (அரபு நாடுகளில் வேண்டுமானால் சரியாக அமையும், இங்கு எப்படிச் சரிவரும் ? )
அப்படித் தெரிந்து கொண்ட பின்னர் இங்கேயே ஒட்டகப் பால் பண்ணை அமைக்க முடிவு செய்து. அதில் சர்க்கரை நோய் உள்ளிட்ட நோய்களுக்கு மருந்தாக ஒட்டகப் பால் இருப்பதாக மணிகண்டன், தன்னை போல் ! மக்கள் அனைவரும் பயன்பெற வேண்டும் என எண்ணி ஒட்டகப் பால் பண்ணையை ஆரம்பிக்க முடிவு செய்த நிலையில், அரசு அனுமதியுடன் குஜராத் மற்றும் இராஜஸ்தான் பாலைவனப் பகுதியிலிருந்து 6 ஒட்டகங்களை வாங்கி வந்து,
நீலாம்பூரையடுத்த குளத்தூரில் சங்கமித்ரா என்ற பெயரில் ஒட்டகப் பண்ணை அமைத்து தற்போது பால் விற்பனையும் செய்து வருகிறார். இது போக ஒட்டகத்தை வேடிக்கை பார்க்க வரும் மக்களைக் கவர்வதற்காக அங்கு குதிரை, முயல், வாத்து, மீன்களையும் வளர்த்து வருவது குறித்து மணிகண்டன் தெரிவிக்கையில், "கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொரோனாவால் பாதிக்கப்பட்டேன். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஒட்டகப் பால் அருந்தினால் நன்மை எனத் தெரிந்த நபர்கள் கூறியதையடுத்து, வெளி மாநிலத்திலிருந்து ஒட்டகப் பால் வாங்கிக் குடித்தேன்.கொரோனா ஊரடங்கு காலத்தில் குழந்தைகள் செல்போன் மற்றும் டிவியில் அதிக கவனம் செலுத்தி வந்த நிலையில், அதனைத் தவிர்க்கும் வகையில் வீட்டில் முயல், மீன், ஆடுகள் வளர்த்து குழந்தைகளின் கவனத்தை ஈர்க்கச் செய்தேன்.தொடர்ந்து, ஒட்டகப் பாலின் நன்மையை?! தெரிந்து கொண்ட பின்னர் இங்கேயே ஒட்டகப் பால் பண்ணை அமைக்க முடிவு செய்தேன்.இராஜஸ்தான் மாநிலத்திலிருந்து அரசு அனுமதி பெற்று ஆறு ஓட்டங்களை வாங்கி வந்து பண்ணை அமைத்துள்ளேன். ஒட்டகப் பால் லிட்டர் 450 ருபாய்க்கு விற்பனை செய்கிறேன். ஒட்டகப் பாலில் டீ, காபி, ரோஸ்மில்க் ஆகியவற்றைத் தயார் செய்தும் விற்பனை செய்கிறேன். சர்க்கரை நோயாளிகள் ஒட்டகப் பால் குடித்து வந்தால் சர்க்கரை அளவு கட்டுக்குளிருக்கும். அதற்கான மருத்துவச் சான்றும் உள்ளது. ஒட்டகத்தை பார்வையிட வருபவர்கள் குதிரை சவாரியும் செய்யலாமாம். இதற்கான அனுமதிச் சீட்டு பெரியவர்களுக்கு 20 ரூபாயும், குழந்தைகளுக்கு 10 ரூபாயும் என வசூலிக்கப்படுகிறது" என்றார் சர்க்கஸ் நடந்த வரி விதிப்பு செய்யும் வனிகவரித்துறை இதை கவணிக்க வேண்டும்.
மக்கள் அறியாமை மற்றும் பொழுதுபோக்கு காரணமாக இவர் இதை ஒரு தொழிலாகவே ஆரம்பித்து விட்டார்.ஒரு கிளியை வைத்து பெட்டியில் அடைத்து கிளி ஜோஸியம் பார்க்க விடாமல் தடுக்கும் வனத்துறையின் சட்டங்கள் மணிகண்டனுக்கு மட்டும் வளைந்து கொடுக்கும் காரணம் நமக்குப் புரியவில்லை. ஆனால் அவரது வாடிக்கையாளரான ஒரு பெண் கூறுகையில், "ஒட்டகப் பாலில் டீ, காபி ஆகியவை விற்பனை செய்வதாக கேள்விப்பட்டு நாங்கள் வந்தோம். ஒட்டகங்களை நேரில் பார்ப்பதால் சர்க்கஸ் போல குழந்தைகள் மகிழ்ச்சி அடைகிறார்கள். தவிர முதல் முறையாக ஒட்டகப் பாலில் டீ குடித்தது வித்தியாசமான அனுபவமாக இருந்தது. குதிரைகள், முயல், மீன்கள் என அனைத்தையும் பார்வையிடுவதால் பொழுதுபோக்கு இடத்திற்கு வந்தது போல் உள்ளது" என்கிறார். நமது தமிழக மக்களின் உணவுக் கலாச்சாரம் கடந்த பத்து வருடங்களில் அதிகம் மாறிவிட்டது. அதிகம் சைவ உணவுகள் மட்டுமே உண்ணும் நிலை இருந்த காலங்களில் ஏதோ சில விசேஷ நாட்களில் மட்டும் அசைவ உணவுகள் உட்கொள்ளும் மக்களின் நிலை தற்போது மாற்றம் மடைந்த காரணமாக, எங்கு பார்த்தாலும் போட்டி போட்டு பிரியாணிக் கடைகள். தெருவுக்கு நான்கு வந்த காரணம் மக்கள் தங்கள் நாட்டு தட்பவெப்ப நிலை அறியாமல் நோய்களை விலைகொடுத்து வாங்குவதை யாரும் தடுக்கவில்லை. காரணம் அதற்கு வழி கூறும் அறநெறி நடந்த பெரியவர்கள் எல்லாம் முதியோர் இல்லத்தில் வாழும் போது உணவுக் கட்டுப்பாடு மட்டுமே கடைப்பிடிக்க தற்போது மக்கள் விரும்பாத காரணமாகவே அசைவ உணவுக்கடைகள் பெருகிவிட்டது. 1995 ஆம் ஆண்டு வரை தமிழகத்தின் மிலிட்டரி ஹோட்டல்கள் மற்றும் முனியாண்டி விலாஸ் தவிர வேறு எங்கும் அசைவ உணவு வகைகளைக் காண முடியாது.
மேலும் மக்கள் தற்போது இருக்கும் நிலையில் சைவ உணவுக் கடைகள் மட்டுமே தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் இருக்கிறது. செட்டிநாடு என்பது சைவ உணவுக்கு மட்டுமே சிறப்பு . அதை அப்படியே தற்போது தலைகீழாக மாற்றிவிட்டது ஒரு வியாபார கும்பல், செட்டிநாடு என்று பெயர் சொல்லி அழைப்பது அசைவ உணவுக் கடைகள் என்ற நிலையில் தரம் தாழ்த்தி அழைக்கக் காரணம் செட்டிநாட்டு உணவுக் கலாச்சாரம் மற்றும் பண்பாட்டில் அறிமுகம் இல்லாத வெளி நபர்கள் அந்த பெயரில் அசைவ உணவுக் கடைகள் வியாபார நோக்கில் நடந்துவதே காரணமாக அமைந்தது. மக்கள் தற்போது புதிய புதிய அயல் நாட்டு உணவுகள் வாங்கி, அல்லது தருவித்து உண்ணும் நிலை இதில் சென்னைக்கு பிழைப்புத் தேடிச் சென்று குடும்பம், குடும்பமாக வாழும் மக்கள் விடுமுறை நாட்களில் தற்போது உணவு வீட்டில் சமைத்து உண்பதில்லை. அதனால் முளைத்த கிராமத்திலிருந்து சென்ற அஞ்சப்பர்கள் நடத்தும் உணவுக் கடைகள் தங்கள் விற்பனை உணவின் விலையைத் தாங்களே முடிவு செய்து கொள்ளை இலாபம் பார்த்து, இன்று பல கிளைகள் உலகின் பல பகுதிகளில். ஆனால் கடந்த பத்து வருடங்களில் மட்டுமே இப்படி ஒரு நிலை வரக் காரணம் மக்கள் உணவை மருந்து போல நினைக்கவில்லை, ஆகவே பல மருந்துக்கடைகளின் கிளைகளும் அதிகரித்துள்ளது. அடுத்த தலைமுறை நமது மரபு வழி உணவுகளை அறிய வாய்ப்பு இல்லை . அதுபோலவே தற்போது நமது மரபுக்கு ஒவ்வாமை கொண்ட ஒட்டகப் பால் தேனீர் கடைகள். இதைப் பார்க்கும் போது. "மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின் " என்ற வள்ளுவர் வாக்கு தற்போது உணரப்படவில்லை. ஒரு காலத்தில் திருப்பூர், பல்லடம் பகுதிகள் தவிர்த்து வேறு எங்கும் அடுமனைகள் அல்லது பேகக்கரிகள் இல்லை. தற்போது ஐயங்கார் பெயரில் அசைவம் விற்பனை பேக்கரிகள் இல்லாத இடமில்லை. உள்ளூர் தேனீர் கடைகள் இதில் தொலைத்து காணாமல் போனது தான் உண்மை. "நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல்." இதன் உட்பொருள் பொழுது போக்கு உணவுகள் காரணமாக, எதிர்காலத்தில் உணரும் நிலை வரும்.. அப்போது இது மக்களுக்குப் புரியும். அதுவரை ஒட்டகப் பல் ,கழுதைப்பால்,கரடிப்பால், எல்லாம் விற்பனையாகும் வியாபாரிகள் யுத்தி இது.
கருத்துகள்