கடந்த இரண்டாண்டுகளாகவே அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளன.
குறிப்பாக பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலைகள் தொடர்ந்து உயர்த்தப்படுவதால் அடித்தள மக்கள் வாழ்க்கை நிலை பாதிக்கப்படுகின்ற நிலையில் வெல்லம், அப்பளம், சாக்லெட் போன்ற உணவுப் பொருட்கள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் உட்பட 143 பொருட்களின் மீதான ஜிஎஸ்டி வரியை, மத்திய அரசு பத்து சதவீதம் உயர்த்தியுள்ளது.
மக்கள் கொரோனா நோய்த் தொற்று பரவல் காரணமாக நெருக்கடியால் இயல்பு நிலை வாழ்க்கை நிலை குலைந்த நிலையில், மத்திய அரசின் ஜிஎஸ்டி வரி உயர்வு என்பது ஏற்கனவே பாதிக்கப்பட்ட மக்களை மிகவும் பாதிக்கும் செயலாகும். மேலும் மாநில அரசின் நிதியாதாரத்தை பாரதிய ஜனதா கட்சியின் மத்திய அரசு வழங்கும் நிலை தாமதமாகும் சூழ்நிலையில் தமிழகத்திற்கு பெரும் நிதியிழப்பு ஏற்பட்டு வருகிறது. இதன் காரணமாக தமிழகத்திற்கு வழங்க வேண்டிய இழப்பீட்டு தொகையை வழங்காமல் இழுத்தடித்து வருகிறது.
என்ற குற்றச்சாட்டும் மாநில அளவில் எழுகிறது, இழப்பீடு வழங்கும் காலத்தை மேலும் நீடிக்க வேண்டும் என்ற மாநில அரசின் கோரிக்கை மீது மத்திய அரசிடம் இருந்து பதிலில்லை
கருத்துகள்