மசாஜ் சென்டர் நடத்தியவரிடம். 50,000 ரூ. இலஞ்சம் வாங்கிய அசோக் நகர் காவல்துறை உதவி ஆணையர் வின்சென்ட் ஜெயராஜ் கைது
சென்னை அசோக் நகர் காவல்துறை உதவி ஆணையர் வின்சென்ட் ஜெயராஜ்
அந்தப்பகுதியில் செந்தில்குமார் சட்டவிரோதமாக மசாஜ் சென்டர் நடத்தி வருகிறார்.இந்த நிலையில் மசாஜ் சென்டர் நடத்த வேண்டுமென்றால் மாதம் மாதம் 50,000 ரூபாயை இலஞ்சமாகத் தர வேண்டுமென தொடர்ச்சியாக மிரட்டி வந்துள்ளார். மேலும் பார்லரில் சட்ட விரோதமாக பாலியல் தொழில் செய்யவும் அவர் கட்டாயப்படுத்தியதாகத் கூறப்படுகிறது இது தொடர்பாக இலஞ்ச ஒழிப்புத்துறையினரிடம் செந்தில்குமார் புகார் அளித்த பின்னர் அவர் கேட்டது போல செந்தில் குமார் கொண்டு வந்த 50,000 ரூபாயை பினாப்தலின் தடவிகீ கொடுத்து அனுப்பிய ஊழல் தடுப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் காவல் நிலையம் வந்து கொடுக்க அவர் கூறியதனையடுத்து கொண்டு சென்ற போது
இவற்றையெல்லாம் மறைந்திருந்து கண்காணித்து வந்த ஊழல் தடுப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் காவல் உதவி ஆணையர் வின்சென்ட் லஞ்சம் வாங்கிய போது கையுடன் பிடித்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதனிடையே பூந்தமல்லியிலுள்ள வின்சென்ட் ஜெயராஜ் வீட்டிலும் ஊழல் தடுப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
கருத்துகள்