வாகனத் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் மீண்டும் ஒரு விலை உயர்வை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில்.
கார்கள் தயாரிப்பில், நாட்டின் மிகப் பெரிய நிறுவனங்களான மஹேந்திரா ,மாருதி சுஷுகி மேலும் ஒரு விலை உயர்வை அறிவிக்கத் திட்டமிட்டு வருவதாகத தெரிகிறது. மூலப் பொருட்களின் விலை உயர்ந்ததை அடுத்து, விலையை மீண்டும் உயர்த்தலாம் என இந்த நிறுவனங்கள் கருதுவதாகத் தெரிகிறது. 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல், இந்நிறுவனங்களில் இதுவரை கிட்டத்தட்ட 9 சதவீதம் அளவுக்கு, கார்களின் விலையை உயர்த்தியது.
இதுவரை, ஓராண்டில் இந்த அளவுக்கு விலையை இப்படி உயர்த்தியதில்லை. என்ற நிலையில், மேலும் ஒரு விலை உயர்வு அறிவிப்புக்கு இந்த நிறுவனங்கள் தயாராகி வருவது மாருதி மட்டுமின்றி, பிற கார் தயாரிப்பு நிறுவனங்களும் விலை உயர்வை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உருக்கு, அலுமினியம், அரிதான உலோகங்கள் ஆகியவற்றின் விலை உயர்ந்து வருகிறது. தற்போதைய புவிசார்ந்த சூழல் காரணமாக, பொருட்கள் விலை மேலும் உயரும் பட்சத்தில், மீண்டும் விலை உயர்வு அறிவிப்புகளை எதிர்பார்க்கலாமென, பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர் . அதோடு அரசின் சார்பில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் வாங்கிய, வாகனங்களுக்கான தகுதிச் சான்றை புதுப்பிக்கும் கட்டணம், பல மடங்கு உயர்ந்துள்ள நிலையில்.
சுற்றுச்சூழல் மாசைக் குறைக்கும் வகையில், பழைய வாகனங்களை ஸ்கிராப் செய்த அழிக்கும் சட்டத்தை அமல்படுத்துமாறு, மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் அரசுகளை மத்திய அரசு வலியுறுத்துவது. அதை வாகன உரிமையாளர்களும், மாநில அரசுகளும் எதிர்த்தும் வருகிறது. அதனால் சட்டம் இதுவரை நிறைவேற்றப்படாத நிலையில், 15 ஆண்டுகள் பழமையான வாகனங்களின் தகுதிச் சான்றை புதுப்பிக்கும் கட்டணம், ஏப்ரல் முதல் பல மடங்கு அதிகரித்துள்ளது.
வாகனம் வாங்கியது முதல் எட்டாண்டுகள் வரை, இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை; ஒன்பதாமாண்டிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் தகுதிச் சான்றை புதிப்பிக்க வேண்டும் என்ற சாலை போக்குவரத்து விதி உள்ள நிலையில், 15 ஆண்டுகளான வாகனங்களுக்கான தகுதிச் சான்றுக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது இருசக்கர வாகனம், 1,800 ரூபாயும்; மூன்று சக்கர வாகனம், 5,000 ரூபாயும்; இலகு ரக வாகனம், 9,100 ரூபாயும், மத்திய ரக வாகனம், 14 ஆயிரத்து 300 ரூபாயும், கன ரக வாகனங்களுக்கு, 15 ஆயிரத்து 500 ரூபாயும் எனக் கட்டணங்களை நிர்ணயித்துள்ளதுடன்,தாமதக் கட்டணமாக ஒவ்வொரு நாளும், 50 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட உள்ளது. இதனால் பாதிக்கப்படுவது எளியோர் தான் .
கருத்துகள்