அந்தியூர் -பர்கூர் இடையே வனப்பகுதியில் புலி, சிறுத்தைகள் நடமாட்டம் பொதுமக்கள் கவனமாக பயணிக்க வனத்துறையினர் எச்சரிக்கை
அந்தியூர் முதல் கர்நாடக மாநிலம் கர்கேகண்டி வரை அடர்ந்த வனப்பகுதியாகும் இருமாநில எல்கை மாநில நெடுஞ்சாலை உள்ளது. அந்தியூர் சென்னம்பட்டி தட்டகரை பர்கூர் ஆகிய வனச்சரகங்களில் புலி சிறுத்தை நடமாட்டம் அதிக அளவில் உள்ளதால் அவ்வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகள் வனப் பகுதிகளில் வாகனங்களை நிறுத்தவோ அல்லது புகைப்படம் எடுக்கவோ வேண்டாமென வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்
ஈரோடு மாவட்டம் அந்தியூர், பர்கூர், தட்டகரை வனச்சரகம் ஆகிய பகுதிகளில் வனவிலங்குகளின் நடமாட்டத்தை கண்காணிப்பதற்காக வனத்துறையினர் சார்பில் 35 இடங்களில் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இவற்றை வனத்துறை அதிகாரிகள் கண்காணித்து வந்த நிலையில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு வைக்கப்பட்ட தானியங்கி கண்காணிப்பு கேமராவிலிருந்து பதிவானதை வனத்துறையினர் ஆய்வு செய்ததில்
பர்கூர் வனப்பகுதியில் சிறுத்தை ஒன்று உணவு தேடி இரவு நேரத்தில் சுற்றித் திரிவது பதிவாகியுள்ளது. மற்ற வனவிலங்குகளின் நடமாட்டமும் கேமராவில் பதிவாகியுள்ளது. யானைகள், முள்ளம்பன்றி, மான், காட்டெருமை போன்ற வனவிலங்குகளும் பகல் மற்றும் இரவு நேரங்களில் உணவுகள் தேடி சுற்றி திரிவது கண்காணிப்புக் கேமராவில் பதிவாகியுள்ளது.
இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, ‘சிறுத்தைப்புலி உள்ளிட்ட வனவிலங்குகள் உணவு தேடி பகல் மற்றும் இரவு நேரங்களில் மலைப்பகுதிகளில் அடிக்கடி சுற்றி திரிகிறது. எனவே மலைப்பகுதி கிராம மக்கள் இரவு நேரங்களில் பாதுகாப்பில்லாமல் வெளியே வரக்கூடாது. வீடுகளுக்கு முன்பு மின்சார விளக்கை எரியவிட வேண்டும். மலைப்பாதையில் இருசக்கர வாகனங்களில் இரவு நேரங்களில் பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும்’ எனக் கேட்டுக் கொண்டனர்.
கருத்துகள்