முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

குஜராத்தின் அடலாஜில் உள்ள ஸ்ரீ அன்னபூர்ணாதாம் அறக்கட்டளையின் கல்வி வளாகம் விடுதி பூமி பூஜை

குஜராத்தின் அடலாஜில் உள்ள ஸ்ரீ அன்னபூர்ணாதாம் அறக்கட்டளையின் கல்வி வளாகத்தையும், விடுதியையும் பிரதமர் தொடங்கிவைத்தார்; ஜன்சஹாயக் அறக்கட்டளையின் ஹிராமணி ஆரோக்கியதாமுக்கான பூமி பூஜையையும் அவர் செய்துவைத்தார்.

அனைத்து சமூகங்களும் தங்களின் திறனுக்கு ஏற்ப செயல்படுகின்றன; சமூகத்திற்கான தங்களின் பங்களிப்பை நிறைவேற்றுவதில் நிலவுடைமை சமூகம் ஒருபோதும் பின்தங்கிவிடக் கூடாது”

“ஒற்றுமையின் சிலையில் சர்தார் படேலுக்கு இந்தியா மகத்தான அஞ்சலியை செலுத்துகிறது என்று பிரதமர் கூறினார்”

“ஊட்டச்சத்து குறைபாடு என்பது உணவுப் பற்றாக்குறையால் என்பதைவிட, உணவுப் பற்றிய அறிவுப்பற்றாக்குறையால் ஏற்படுகிறது”

“குஜராத் மாநிலம் திறமையையும், ஆர்வத்தையும், கொண்டிருப்பதால்  தொழில்துறையின் 4.0-வின்  தரங்களை எட்டுவதில்  நாட்டுக்கு  தலைமை வகிக்க வேண்டும்”

குஜராத்தின் அடலாஜில் உள்ள ஸ்ரீ அன்னபூர்ணாதாம் அறக்கட்டளையின் கல்வி வளாகத்தையும், விடுதியையும் பிரதமர்  திரு நரேந்திர மோடி  இன்று காணொலி காட்சி மூலம் தொடங்கிவைத்தார். இந்த நிகழ்வின் போது, ஜன்சஹாயக் அறக்கட்டளையின் ஹிராமணி ஆரோக்கியதாமுக்கான பூமி பூஜையையும் அவர் செய்துவைத்தார்.  குஜராத் முதலமைச்சர் திரு பூபேந்திரபாய் படேல் உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், நீண்ட காலமாக ஸ்ரீ அன்னபூர்ணாதாமின் தெய்வீக, ஆன்மீக, சமூக பணிகளுடன், இணைந்திருந்தது குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார்.  சுகாதாரம், கல்வி,  ஊட்டச்சத்து ஆகிய துறைகளில் பங்களிப்பு செய்வது குஜராத்தின் இயற்கைக் குணம் என்று அவர் குறிப்பிட்டார். அனைத்து சமூகங்களும் தங்களின் திறனுக்கு ஏற்ப செயல்படுகின்றன; சமூகத்திற்கான தங்களின் பங்களிப்பை நிறைவேற்றுவதில் நிலவுடைமை சமூகம் ஒருபோதும் பின்தங்கிவிடக் கூடாது.வளத்தின் தெய்வமான  அன்னை அன்னபூர்ணா அனைவராலும் குறிப்பாக நிலவுடைமை சமூகத்தால் போற்றி வணங்கப்படுவதாகும். இந்த சமூகம் அன்றாட வாழ்க்கையின் எதார்த்தங்களோடு  இணைந்ததாகும். அன்னை அன்னபூர்ணாவின் சிலை அண்மையில் கனடாவிலிருந்து காசிக்கு மீட்டுக் கொண்டுவரப்பட்டது என்று பிரதமர் கூறினார். “கடந்த சில ஆண்டுகளில் வெளிநாடுகளிலிருந்து இது போன்ற டசன் கணக்கான நமது கலாச்சாரத்தின் அடையாளங்கள் மீட்டுக் கொண்டுவரப்பட்டுள்ளன” என்று அவர் கூறினார்.

நமது கலாச்சாரத்தில் உணவு, சுகாதாரம், கல்வி ஆகியவற்றுக்கு எப்போதும் மகத்தான முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது என்று கூறிய பிரதமர், இன்று ஸ்ரீ அன்னபூர்ணாதாம் இவற்றை விரிவுபடுத்தியுள்ளது என்றார்.  தற்போது வந்துள்ள புதிய வசதிகள், குஜராத்தின் சாமான்ய மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். குறிப்பாக ஒரே நேரத்தில் 14 பேருக்கு டயாலிசிஸ் செய்யும் வசதி 24 மணி நேரமும், ரத்தம் வழங்கும் ரத்த வங்கி, ஆகியவை மாபெரும் தேவையைப் பூர்த்தி செய்யும். மாவட்ட மருத்துவமனைகளில் கட்டணமின்றி டயாலிசிஸ் செய்யும் வசதியை மத்திய அரசு தொடங்கியிருப்பதாக பிரதமர் கூறினார்.

குஜராத்தி  மக்கள்  பக்கம் கவனத்தைத் திருப்பிய பிரதமர், நல்லப் பணிக்காக அறக்கட்டளையையும், அதன் தலைமைத்துவத்தையும், பாராட்டினார். இந்த பிரமுகர்களின் சிறந்த பண்பு ஆக்கப்பூர்வமான பணியுடன் இயக்கம் கலந்துள்ளது என்று அவர் தெரிவித்தார். ‘மென்மையான ஆனால் உறுதியான’ முதலமைச்சரின் தலைமைத்துவத்தை  பாராட்டிய அவர், இயற்கை வேளாண்மையை, வலியுறுத்தினார். எங்கெல்லாம் சாத்தியமோ, அங்கெல்லாம் இயற்கை வேளாண்மையை  ஊக்கப்படுத்துமாறு கூடியிருந்தோரைப் பிரதமர் கேட்டுக் கொண்டார். குஜராத்தில் வளர்ச்சியின் வளமான பாரம்பரியம் பற்றி குறிப்பிட்ட பிரதமர், இங்கு வளர்ச்சியின் புதிய தரங்கள், உருவாகின்றன. வளர்ச்சியின் இந்த பாரம்பரியம், முதலமைச்சரால் முன்னெடுத்துச் செல்லப்படுகிறது என்று அவர் கூறினார்.

ஒற்றுமையின் சிலையை சர்தார் படேலுக்கு இந்தியா மகத்தான அஞ்சலியை செலுத்துகிறது என்றும், இவரது பெயர் உலகம் முழுவதும் பரவியிருக்கிறது என்றும் பிரதமர் கூறினார்.அன்னை அன்னப்பூர்ணாவின் பூமியான  குஜராத்தில் ஊட்டச்சத்துக் குறைபாட்டிற்கு இடமிருக்கக் கூடாது என்று பிரதமர் தெரிவித்தார். ஊட்டச்சத்துக் குறைபாடு என்பதும் அறியாமையால் வருவது என்று அவர் குறிப்பிட்டார். சமச்சீரான உணவு பற்றிய விழிப்புணர்வை பரவலாக்குவதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார். சுகாதாரத்தின் பாதையில், முதல் அடி உணவு என்று குறிப்பிட்ட பிரதமர், ஊட்டச்சத்து குறைபாடு என்பது உணவுப் பற்றாக்குறையால் என்பதைவிட, உணவுப் பற்றிய அறிவுப்பற்றாக்குறையால் ஏற்படுகிறது என்றார்.  பெருந்தொற்றுக் காலத்தில் 80 கோடிக்கும் அதிகமான மக்களுக்கு விலையின்றி உணவு தானியங்களை அரசு உறுதி செய்தது பற்றி பிரதமர் குறிப்பிட்டார். நேற்றிரவு  அமெரிக்க அதிபருடன் தாம் பேசியதை  சுட்டிக்காட்டிய  திரு மோடி, அனுமதிக்கான விதிகளை  உலக சுகாதார நிறுவனம் தளர்த்தினால், மற்ற நாடுகளுக்கு உணவு தானியங்களை அனுப்பி வைக்க இந்தியா  முன்வரும் என்று அமெரிக்க அதிபரிடம் தாம்  கூறியதாகத் தெரிவித்தார்.   அன்னை அன்னபூர்ணாவின் கருணையால் இந்திய விவசாயிகள் ஏற்கனவே உலகத்தின் மீது அக்கறை கொண்டிருக்கிறார்கள் என்று பிரதமர் கூறினார்.

குஜராத்தில் தடுப்பூசி இயக்கத்தைச் சிறப்பாக செயல்படுத்தியதைப் பிரதமர் பாராட்டினார். தொழிற்சாலை வளர்ச்சியின்  புதிய போக்குகளின் தேவைக்கு ஏற்ப திறன் மேம்பாட்டை  அதிகப்படுத்துவதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.  ஃபார்மசி கல்லூரி தொடங்குவதில் முக்கியத்துவம் அளித்தது பற்றி குறிப்பிட்ட அவர், இது மாநிலத்தின்  மருந்துப் பொருட்கள் உற்பத்தி தொழில்துறைக்கு முன்னோட்டமாக இருந்ததாகக் கூறினார்.   சமூகம் மற்றும் அரசின் முயற்சிகள், திறன் வளர்ச்சியை  பன்முகத் தாக்கத்தை ஏற்படுத்துவதாக  அவர் குறிப்பிட்டார். குஜராத் மாநிலம் திறமையையும், ஆர்வத்தையும், கொண்டிருப்பதால் தொழில்துறையின் 4.0-வின்  தரங்களை எட்டுவதில்  நாட்டுக்கு  தலைமை வகிக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

டயாலிசிஸ் நோயாளிகளின் நிதிநிலை எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்துவதாக குறிப்பிட்ட பிரதமர், நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும், கட்டணமில்லாத டயாலிசிஸ் வசதியை பரவலாக்குவதை வலியுறுத்தினார். அதே போல், குறைந்த செலவில், மருந்து வழங்குவதன் மூலம் மக்கள் மருந்தக மையம் நோயாளிகளின் செலவைக் குறைப்பதாகத் தெரிவித்தார். தூய்மை, போஷான்,  மக்கள் மருந்தகம், டயாலிசிஸ் இயக்கம், ஸ்டென்ட்  மற்றும் முழங்கால் மாற்று உபகரண  விலைக் குறைப்பு போன்ற நடவடிக்கைகள் சாமானிய மக்களின் சுமையைக் குறைத்துள்ளது. அதே போல் ஆயுஷ்மான் பாரத் திட்டம், ஏழை மற்றும் நடுத்தரப் பிரிவு நோயாளிகளுக்கு குறிப்பாக பெண்களுக்கு உதவி செய்துள்ளது என்று பிரதமர் மேலும் தெரிவித்தார்.

விடுதி மற்றும் கல்வி வளாகம் 600 மாணவர்களுக்கான 150 அறைகளுடன் உண்டு, உறைவிட வசதியைக் கொண்டுள்ளது. ஜிபிஎஸ்சி, யுபிஎஸ்சி தேர்வுகளுக்கான பயிற்சி மையங்கள், இ-நூலகம், கருத்தரங்கக் கூடம், விளையாட்டு உபகரணங்கள் அறை, தொலைக்காட்சி அறை, ஆரம்ப சுகாதாரம் போன்ற இதர வசதிகளும் மாணவர்களுக்கு செய்யப்பட்டுள்ளன

ஜன்சஹாயக் அறக்கட்டளை ஹிராமணி ஆரோக்கியதாமை மேம்படுத்தும். ஒரே நேரத்தில் 14 பேருக்கு டயாலிசிஸ் செய்யும் வசதி, 24 மணி நேரமும் ரத்தம் வழங்கும் ரத்த வங்கி, 24 மணி  நேரமும் செயல்படும் மருந்தகம், நவீன நோயியல் சோதனைக் கூடம், சுகாதார பரிசோதனைகளுக்கான உயர்தர சாதனம் உள்ளிட்ட நவீன மருத்துவ வசதிகளையும் இது கொண்டிருக்கும். ஆயுர்வேதம், ஹோமியோபதி, அக்குபஞ்சர், யோகா சிகிச்சை ஆகியவற்றுக்கான நவீன வசதிகளுடன்  பகல் நேர கவனிப்பு மையமாகவும், இது இருக்கும். முதலுதவிப் பயிற்சி, தொழில்நுட்பாளர் பயிற்சி, மருத்துவப் பயிற்சி ஆகிய வசதிகளையும் இது கொண்டிருக்கும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலயக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...