முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

குஜராத்தின் அடலாஜில் உள்ள ஸ்ரீ அன்னபூர்ணாதாம் அறக்கட்டளையின் கல்வி வளாகம் விடுதி பூமி பூஜை

குஜராத்தின் அடலாஜில் உள்ள ஸ்ரீ அன்னபூர்ணாதாம் அறக்கட்டளையின் கல்வி வளாகத்தையும், விடுதியையும் பிரதமர் தொடங்கிவைத்தார்; ஜன்சஹாயக் அறக்கட்டளையின் ஹிராமணி ஆரோக்கியதாமுக்கான பூமி பூஜையையும் அவர் செய்துவைத்தார்.

அனைத்து சமூகங்களும் தங்களின் திறனுக்கு ஏற்ப செயல்படுகின்றன; சமூகத்திற்கான தங்களின் பங்களிப்பை நிறைவேற்றுவதில் நிலவுடைமை சமூகம் ஒருபோதும் பின்தங்கிவிடக் கூடாது”

“ஒற்றுமையின் சிலையில் சர்தார் படேலுக்கு இந்தியா மகத்தான அஞ்சலியை செலுத்துகிறது என்று பிரதமர் கூறினார்”

“ஊட்டச்சத்து குறைபாடு என்பது உணவுப் பற்றாக்குறையால் என்பதைவிட, உணவுப் பற்றிய அறிவுப்பற்றாக்குறையால் ஏற்படுகிறது”

“குஜராத் மாநிலம் திறமையையும், ஆர்வத்தையும், கொண்டிருப்பதால்  தொழில்துறையின் 4.0-வின்  தரங்களை எட்டுவதில்  நாட்டுக்கு  தலைமை வகிக்க வேண்டும்”

குஜராத்தின் அடலாஜில் உள்ள ஸ்ரீ அன்னபூர்ணாதாம் அறக்கட்டளையின் கல்வி வளாகத்தையும், விடுதியையும் பிரதமர்  திரு நரேந்திர மோடி  இன்று காணொலி காட்சி மூலம் தொடங்கிவைத்தார். இந்த நிகழ்வின் போது, ஜன்சஹாயக் அறக்கட்டளையின் ஹிராமணி ஆரோக்கியதாமுக்கான பூமி பூஜையையும் அவர் செய்துவைத்தார்.  குஜராத் முதலமைச்சர் திரு பூபேந்திரபாய் படேல் உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், நீண்ட காலமாக ஸ்ரீ அன்னபூர்ணாதாமின் தெய்வீக, ஆன்மீக, சமூக பணிகளுடன், இணைந்திருந்தது குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார்.  சுகாதாரம், கல்வி,  ஊட்டச்சத்து ஆகிய துறைகளில் பங்களிப்பு செய்வது குஜராத்தின் இயற்கைக் குணம் என்று அவர் குறிப்பிட்டார். அனைத்து சமூகங்களும் தங்களின் திறனுக்கு ஏற்ப செயல்படுகின்றன; சமூகத்திற்கான தங்களின் பங்களிப்பை நிறைவேற்றுவதில் நிலவுடைமை சமூகம் ஒருபோதும் பின்தங்கிவிடக் கூடாது.வளத்தின் தெய்வமான  அன்னை அன்னபூர்ணா அனைவராலும் குறிப்பாக நிலவுடைமை சமூகத்தால் போற்றி வணங்கப்படுவதாகும். இந்த சமூகம் அன்றாட வாழ்க்கையின் எதார்த்தங்களோடு  இணைந்ததாகும். அன்னை அன்னபூர்ணாவின் சிலை அண்மையில் கனடாவிலிருந்து காசிக்கு மீட்டுக் கொண்டுவரப்பட்டது என்று பிரதமர் கூறினார். “கடந்த சில ஆண்டுகளில் வெளிநாடுகளிலிருந்து இது போன்ற டசன் கணக்கான நமது கலாச்சாரத்தின் அடையாளங்கள் மீட்டுக் கொண்டுவரப்பட்டுள்ளன” என்று அவர் கூறினார்.

நமது கலாச்சாரத்தில் உணவு, சுகாதாரம், கல்வி ஆகியவற்றுக்கு எப்போதும் மகத்தான முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது என்று கூறிய பிரதமர், இன்று ஸ்ரீ அன்னபூர்ணாதாம் இவற்றை விரிவுபடுத்தியுள்ளது என்றார்.  தற்போது வந்துள்ள புதிய வசதிகள், குஜராத்தின் சாமான்ய மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். குறிப்பாக ஒரே நேரத்தில் 14 பேருக்கு டயாலிசிஸ் செய்யும் வசதி 24 மணி நேரமும், ரத்தம் வழங்கும் ரத்த வங்கி, ஆகியவை மாபெரும் தேவையைப் பூர்த்தி செய்யும். மாவட்ட மருத்துவமனைகளில் கட்டணமின்றி டயாலிசிஸ் செய்யும் வசதியை மத்திய அரசு தொடங்கியிருப்பதாக பிரதமர் கூறினார்.

குஜராத்தி  மக்கள்  பக்கம் கவனத்தைத் திருப்பிய பிரதமர், நல்லப் பணிக்காக அறக்கட்டளையையும், அதன் தலைமைத்துவத்தையும், பாராட்டினார். இந்த பிரமுகர்களின் சிறந்த பண்பு ஆக்கப்பூர்வமான பணியுடன் இயக்கம் கலந்துள்ளது என்று அவர் தெரிவித்தார். ‘மென்மையான ஆனால் உறுதியான’ முதலமைச்சரின் தலைமைத்துவத்தை  பாராட்டிய அவர், இயற்கை வேளாண்மையை, வலியுறுத்தினார். எங்கெல்லாம் சாத்தியமோ, அங்கெல்லாம் இயற்கை வேளாண்மையை  ஊக்கப்படுத்துமாறு கூடியிருந்தோரைப் பிரதமர் கேட்டுக் கொண்டார். குஜராத்தில் வளர்ச்சியின் வளமான பாரம்பரியம் பற்றி குறிப்பிட்ட பிரதமர், இங்கு வளர்ச்சியின் புதிய தரங்கள், உருவாகின்றன. வளர்ச்சியின் இந்த பாரம்பரியம், முதலமைச்சரால் முன்னெடுத்துச் செல்லப்படுகிறது என்று அவர் கூறினார்.

ஒற்றுமையின் சிலையை சர்தார் படேலுக்கு இந்தியா மகத்தான அஞ்சலியை செலுத்துகிறது என்றும், இவரது பெயர் உலகம் முழுவதும் பரவியிருக்கிறது என்றும் பிரதமர் கூறினார்.அன்னை அன்னப்பூர்ணாவின் பூமியான  குஜராத்தில் ஊட்டச்சத்துக் குறைபாட்டிற்கு இடமிருக்கக் கூடாது என்று பிரதமர் தெரிவித்தார். ஊட்டச்சத்துக் குறைபாடு என்பதும் அறியாமையால் வருவது என்று அவர் குறிப்பிட்டார். சமச்சீரான உணவு பற்றிய விழிப்புணர்வை பரவலாக்குவதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார். சுகாதாரத்தின் பாதையில், முதல் அடி உணவு என்று குறிப்பிட்ட பிரதமர், ஊட்டச்சத்து குறைபாடு என்பது உணவுப் பற்றாக்குறையால் என்பதைவிட, உணவுப் பற்றிய அறிவுப்பற்றாக்குறையால் ஏற்படுகிறது என்றார்.  பெருந்தொற்றுக் காலத்தில் 80 கோடிக்கும் அதிகமான மக்களுக்கு விலையின்றி உணவு தானியங்களை அரசு உறுதி செய்தது பற்றி பிரதமர் குறிப்பிட்டார். நேற்றிரவு  அமெரிக்க அதிபருடன் தாம் பேசியதை  சுட்டிக்காட்டிய  திரு மோடி, அனுமதிக்கான விதிகளை  உலக சுகாதார நிறுவனம் தளர்த்தினால், மற்ற நாடுகளுக்கு உணவு தானியங்களை அனுப்பி வைக்க இந்தியா  முன்வரும் என்று அமெரிக்க அதிபரிடம் தாம்  கூறியதாகத் தெரிவித்தார்.   அன்னை அன்னபூர்ணாவின் கருணையால் இந்திய விவசாயிகள் ஏற்கனவே உலகத்தின் மீது அக்கறை கொண்டிருக்கிறார்கள் என்று பிரதமர் கூறினார்.

குஜராத்தில் தடுப்பூசி இயக்கத்தைச் சிறப்பாக செயல்படுத்தியதைப் பிரதமர் பாராட்டினார். தொழிற்சாலை வளர்ச்சியின்  புதிய போக்குகளின் தேவைக்கு ஏற்ப திறன் மேம்பாட்டை  அதிகப்படுத்துவதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.  ஃபார்மசி கல்லூரி தொடங்குவதில் முக்கியத்துவம் அளித்தது பற்றி குறிப்பிட்ட அவர், இது மாநிலத்தின்  மருந்துப் பொருட்கள் உற்பத்தி தொழில்துறைக்கு முன்னோட்டமாக இருந்ததாகக் கூறினார்.   சமூகம் மற்றும் அரசின் முயற்சிகள், திறன் வளர்ச்சியை  பன்முகத் தாக்கத்தை ஏற்படுத்துவதாக  அவர் குறிப்பிட்டார். குஜராத் மாநிலம் திறமையையும், ஆர்வத்தையும், கொண்டிருப்பதால் தொழில்துறையின் 4.0-வின்  தரங்களை எட்டுவதில்  நாட்டுக்கு  தலைமை வகிக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

டயாலிசிஸ் நோயாளிகளின் நிதிநிலை எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்துவதாக குறிப்பிட்ட பிரதமர், நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும், கட்டணமில்லாத டயாலிசிஸ் வசதியை பரவலாக்குவதை வலியுறுத்தினார். அதே போல், குறைந்த செலவில், மருந்து வழங்குவதன் மூலம் மக்கள் மருந்தக மையம் நோயாளிகளின் செலவைக் குறைப்பதாகத் தெரிவித்தார். தூய்மை, போஷான்,  மக்கள் மருந்தகம், டயாலிசிஸ் இயக்கம், ஸ்டென்ட்  மற்றும் முழங்கால் மாற்று உபகரண  விலைக் குறைப்பு போன்ற நடவடிக்கைகள் சாமானிய மக்களின் சுமையைக் குறைத்துள்ளது. அதே போல் ஆயுஷ்மான் பாரத் திட்டம், ஏழை மற்றும் நடுத்தரப் பிரிவு நோயாளிகளுக்கு குறிப்பாக பெண்களுக்கு உதவி செய்துள்ளது என்று பிரதமர் மேலும் தெரிவித்தார்.

விடுதி மற்றும் கல்வி வளாகம் 600 மாணவர்களுக்கான 150 அறைகளுடன் உண்டு, உறைவிட வசதியைக் கொண்டுள்ளது. ஜிபிஎஸ்சி, யுபிஎஸ்சி தேர்வுகளுக்கான பயிற்சி மையங்கள், இ-நூலகம், கருத்தரங்கக் கூடம், விளையாட்டு உபகரணங்கள் அறை, தொலைக்காட்சி அறை, ஆரம்ப சுகாதாரம் போன்ற இதர வசதிகளும் மாணவர்களுக்கு செய்யப்பட்டுள்ளன

ஜன்சஹாயக் அறக்கட்டளை ஹிராமணி ஆரோக்கியதாமை மேம்படுத்தும். ஒரே நேரத்தில் 14 பேருக்கு டயாலிசிஸ் செய்யும் வசதி, 24 மணி நேரமும் ரத்தம் வழங்கும் ரத்த வங்கி, 24 மணி  நேரமும் செயல்படும் மருந்தகம், நவீன நோயியல் சோதனைக் கூடம், சுகாதார பரிசோதனைகளுக்கான உயர்தர சாதனம் உள்ளிட்ட நவீன மருத்துவ வசதிகளையும் இது கொண்டிருக்கும். ஆயுர்வேதம், ஹோமியோபதி, அக்குபஞ்சர், யோகா சிகிச்சை ஆகியவற்றுக்கான நவீன வசதிகளுடன்  பகல் நேர கவனிப்பு மையமாகவும், இது இருக்கும். முதலுதவிப் பயிற்சி, தொழில்நுட்பாளர் பயிற்சி, மருத்துவப் பயிற்சி ஆகிய வசதிகளையும் இது கொண்டிருக்கும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த