சென்னை மண்டல வருமானவரித்துறை மூலம் "சைக்லோதான்” நிகழ்ச்சி நடைபெற்றது
75 ஆண்டு சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, "சைக்லோதான்” நிகழ்ச்சி, சென்னை வருமான வரித் துறையால், ஏப்ரல் 23, 2022 சனிக்கிழமை அன்று நடத்தப்பட்டது. நிகழ்ச்சியின் தலைமை விருந்தினராக வருமான வரித்துறை முதன்மை தலைமை ஆணையர் திருமதி கீதா ரவிச்சந்திரன் இ.வ.ப அவர்கள் பங்கேற்று சைக்கிள் ஓட்டத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் வருமான வரித்துறையின் தலைமை ஆணையர்கள், முதன்மை ஆணையர்கள், ஆணையர்கள், வருமான வரித்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர். வருமான வரித்துறை முதன்மை தலைமை ஆணையர் திருமதி கீதா ரவிச்சந்திரன் இ.வ.ப. அவர்கள் உரையாற்றினார்.
"சைக்லோதான்" 5, 10 மற்றும் 20 கிலோமீட்டர் தூரம் ஆகிய மூன்று பிரிவுகளில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இருநூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றார்கள். வருமான வரித்துறையின் அதிகாரிகள், அலுவலர்கள் மற்றும் பொது மக்கள் ஆர்வத்துடன் சைக்லோதனில் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பங்குபெற்ற அனைவருக்கும் பதக்கங்களும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
கருத்துகள்