முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அம்பேத்கர் பிறந்தநாளைத் துப்புரவு தொழிலாளர்களுடன் கொண்டாடிய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர்

அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் அம்பேத்கர் பிறந்தநாளைத் துப்புரவு தொழிலாளர்களுடன்


கொண்டாடினார்

சமத்துவம் நமது அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படை அம்சமாக  உள்ளது. சமத்துவம் மற்றும் சமவாய்ப்புகள் குறித்த டாக்டர் பி.  ஆர். அம்பேத்கரின் தொலைநோக்குப் பார்வை நரேந்திர மோடி அரசின் அனைவரும் இணைவோம் அனைவரும் உயர்வோம்  என்பதை வலியுறுத்துவதன் மூலம் எதார்த்தமாக மாற்றப்பட்டுள்ளது. 

மத்திய மின்னணு, தகவல் தொழில்நுட்பம், திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் துறை இணையமைச்சர் திரு ராஜீவ் சந்திரசேகர் பெங்களூருவில் உள்ள மகளிருக்கான தேசிய திறன் பயிற்சி நிறுவனத்தில் அம்பேத்கர் பிறந்தநாளைக் கொண்டாடினார். 

அங்கு மாணவர்கள், ஆசிரியர்கள்,  மற்றும் அதிகாரிகளுடன் கலந்துரையாடிய அமைச்சர்,  இந்திய அரசியல் சட்டத்தின் சிற்பியான டாக்டர் பி. ஆர். அம்பேத்கர் தேசக் கட்டமைப்பில் சிறப்பு முக்கியத்துவம் பெற்றிருப்பதாகக் கூறினார்.  பன்முகத்தன்மை கொண்ட தேசமாக இருப்பினும் பல்வேறு புவியியல் சூழலில் வாழ்ந்தாலும்  நம் அனைவருக்கும் பொது அடையாளமாக இருப்பது  இந்தியர்கள் என்பதுதான் என்றும் தெரிவித்தார்.  அம்பேத்கர் பிறந்த நாள் மற்றும் மகாவீரர் பிறந்த நாளையொட்டி அனைவருக்கும் அவர் வாழ்த்து தெரிவித்தார்.  தேசிய திறன் மேம்பாட்டுப் பயிற்சி நிறுவனத்தின் மாணவர்கள்  ஏற்பாடு செய்திருந்த  கண்காட்சியை அவர் பார்வையிட்டார். போட்டித்  தன்மையில் நிலைத்திருக்க தாங்களாகவே  திறனை மேம்படுத்திக்கொள்ள அவர்களை ஊக்கப்படுத்தினார்.  இன்றைய காலத்திற்கு ஏற்ப டிஜிட்டல் திறனைக் கற்பது அவசியம் என்பதையும் அவர் எடுத்துரைத்தார்.  நரேந்திர மோடி அரசுக்கான நம்பிக்கை என்பது திறன் மேம்பாட்டில் மகளிருக்குக்  கூடுதல் வாய்ப்புகளை உருவாக்குவதாகும் என்று அவர் உறுதிபட தெரிவித்தார். 


இந்த நிகழ்ச்சிக்குப் பின் ஆஸ்டின் நகருக்குச் சென்ற அமைச்சர் திரு ராஜீவ் சந்திரசேகர் அங்கு டாக்டர் பி ஆர் அம்பேத்கர் உருவச்சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். காசி விஸ்வநாதர் மற்றும் வெல்லாரி அம்மன் கோவிலுக்குச் சென்ற அவர் துப்புரவு தொழிலாளர்களுடன் மதிய உணவு அருந்தினார். மேலும்

டாக்டர் பி.ஆர். அம்பேத்கர்  132-வது  பிறந்த  தின விழா சென்னை  துறைமுகத்தில் 14.04.2022  அன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. 

சென்னை துறைமுக ஆணையத்தின் தலைவர் திரு. சுனில் பாலீவால், ஐ.ஏ.எஸ்.,  மற்றும்  துணைத்தலைவர்  திரு எஸ். பாலாஜி அருண்குமார்  ஐ.ஆர்.டி.எஸ்,  ஆகியோர்கள்  துறைமுக வளாகத்தில் உள்ள  ஆங்கர் கேட் கட்டிடத்தில் அமைந்திருக்கும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் அவர்களின் திரு.உருவச்சிலை மற்றும் அன்னாரின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். மற்றும் துறைமுகத்தின் உள்ளே  சென்டர் பெர்த்தில் அமைந்திருக்கும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் அவர்களின் மார்பளவு சிலைக்கு மாலை அணிவித்தனர்.  சென்னை துறைமுக ஆணையத்தின்  துறைத் தலைவர்கள், உயர் அதிகாரிகள், பணியாளர்கள் மற்றும் பல்வேறு முக்கிய பிரமுகர்கள் தொழிற்சங்கத்தினர்  நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

மேற்கண்ட தகவலை செயலாளர் சென்னைத் துறைமுகம்  இன்று வெளியிட்டுள்ள பத்திரிகை செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் பாபா சாகேப் டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் 132-வது பிறந்தநாளன்று நாடு அவருக்கு அஞ்சலி செலுத்தியது

பாரத ரத்னா பாபா சாகேப் டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் 132-வது பிறந்தநாளான இன்று காலை, நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள சன்சாத் பவன் புல்வெளியில் உள்ள பாபா சாகேப் சிலைக்கு குடியரசுத் தலைவர் திரு ராம்நாத் கோவிந்த் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

குடியரசுத் துணைத் தலைவர் திரு எம். வெங்கையா நாயுடு, பிரதமர் திரு நரேந்திர மோடி மற்றும் மக்களவைத் தலைவர் திரு ஓம் பிர்லா ஆகியோரும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் தந்தை டாக்டர் அம்பேத்கருக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார் மற்றும் மத்திய அமைச்சர்கள், உயரதிகாரிகளும் அஞ்சலி செலுத்தினர்.

சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த