அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் அம்பேத்கர் பிறந்தநாளைத் துப்புரவு தொழிலாளர்களுடன்
கொண்டாடினார்
சமத்துவம் நமது அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படை அம்சமாக உள்ளது. சமத்துவம் மற்றும் சமவாய்ப்புகள் குறித்த டாக்டர் பி. ஆர். அம்பேத்கரின் தொலைநோக்குப் பார்வை நரேந்திர மோடி அரசின் அனைவரும் இணைவோம் அனைவரும் உயர்வோம் என்பதை வலியுறுத்துவதன் மூலம் எதார்த்தமாக மாற்றப்பட்டுள்ளது.
மத்திய மின்னணு, தகவல் தொழில்நுட்பம், திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் துறை இணையமைச்சர் திரு ராஜீவ் சந்திரசேகர் பெங்களூருவில் உள்ள மகளிருக்கான தேசிய திறன் பயிற்சி நிறுவனத்தில் அம்பேத்கர் பிறந்தநாளைக் கொண்டாடினார்.
அங்கு மாணவர்கள், ஆசிரியர்கள், மற்றும் அதிகாரிகளுடன் கலந்துரையாடிய அமைச்சர், இந்திய அரசியல் சட்டத்தின் சிற்பியான டாக்டர் பி. ஆர். அம்பேத்கர் தேசக் கட்டமைப்பில் சிறப்பு முக்கியத்துவம் பெற்றிருப்பதாகக் கூறினார். பன்முகத்தன்மை கொண்ட தேசமாக இருப்பினும் பல்வேறு புவியியல் சூழலில் வாழ்ந்தாலும் நம் அனைவருக்கும் பொது அடையாளமாக இருப்பது இந்தியர்கள் என்பதுதான் என்றும் தெரிவித்தார். அம்பேத்கர் பிறந்த நாள் மற்றும் மகாவீரர் பிறந்த நாளையொட்டி அனைவருக்கும் அவர் வாழ்த்து தெரிவித்தார். தேசிய திறன் மேம்பாட்டுப் பயிற்சி நிறுவனத்தின் மாணவர்கள் ஏற்பாடு செய்திருந்த கண்காட்சியை அவர் பார்வையிட்டார். போட்டித் தன்மையில் நிலைத்திருக்க தாங்களாகவே திறனை மேம்படுத்திக்கொள்ள அவர்களை ஊக்கப்படுத்தினார். இன்றைய காலத்திற்கு ஏற்ப டிஜிட்டல் திறனைக் கற்பது அவசியம் என்பதையும் அவர் எடுத்துரைத்தார். நரேந்திர மோடி அரசுக்கான நம்பிக்கை என்பது திறன் மேம்பாட்டில் மகளிருக்குக் கூடுதல் வாய்ப்புகளை உருவாக்குவதாகும் என்று அவர் உறுதிபட தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சிக்குப் பின் ஆஸ்டின் நகருக்குச் சென்ற அமைச்சர் திரு ராஜீவ் சந்திரசேகர் அங்கு டாக்டர் பி ஆர் அம்பேத்கர் உருவச்சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். காசி விஸ்வநாதர் மற்றும் வெல்லாரி அம்மன் கோவிலுக்குச் சென்ற அவர் துப்புரவு தொழிலாளர்களுடன் மதிய உணவு அருந்தினார். மேலும்
டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் 132-வது பிறந்த தின விழா சென்னை துறைமுகத்தில் 14.04.2022 அன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
சென்னை துறைமுக ஆணையத்தின் தலைவர் திரு. சுனில் பாலீவால், ஐ.ஏ.எஸ்., மற்றும் துணைத்தலைவர் திரு எஸ். பாலாஜி அருண்குமார் ஐ.ஆர்.டி.எஸ், ஆகியோர்கள் துறைமுக வளாகத்தில் உள்ள ஆங்கர் கேட் கட்டிடத்தில் அமைந்திருக்கும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் அவர்களின் திரு.உருவச்சிலை மற்றும் அன்னாரின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். மற்றும் துறைமுகத்தின் உள்ளே சென்டர் பெர்த்தில் அமைந்திருக்கும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் அவர்களின் மார்பளவு சிலைக்கு மாலை அணிவித்தனர். சென்னை துறைமுக ஆணையத்தின் துறைத் தலைவர்கள், உயர் அதிகாரிகள், பணியாளர்கள் மற்றும் பல்வேறு முக்கிய பிரமுகர்கள் தொழிற்சங்கத்தினர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
மேற்கண்ட தகவலை செயலாளர் சென்னைத் துறைமுகம் இன்று வெளியிட்டுள்ள பத்திரிகை செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் பாபா சாகேப் டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் 132-வது பிறந்தநாளன்று நாடு அவருக்கு அஞ்சலி செலுத்தியது
பாரத ரத்னா பாபா சாகேப் டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் 132-வது பிறந்தநாளான இன்று காலை, நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள சன்சாத் பவன் புல்வெளியில் உள்ள பாபா சாகேப் சிலைக்கு குடியரசுத் தலைவர் திரு ராம்நாத் கோவிந்த் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
குடியரசுத் துணைத் தலைவர் திரு எம். வெங்கையா நாயுடு, பிரதமர் திரு நரேந்திர மோடி மற்றும் மக்களவைத் தலைவர் திரு ஓம் பிர்லா ஆகியோரும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் தந்தை டாக்டர் அம்பேத்கருக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார் மற்றும் மத்திய அமைச்சர்கள், உயரதிகாரிகளும் அஞ்சலி செலுத்தினர்.
சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தது.
கருத்துகள்