2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 17 ஆம் தேதி நடிகர் விவேக் திடீரென மரணமடைந்தது ஒட்டுமொத்த திரையுலகும், ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அவரது முதலாமாண்டு நினைவுஞ்சலி நிகழ்வு நடந்தது.
விவேக்கின் மனைவி அருட்செல்வி மற்றும் பிள்ளைகள் தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலினை நேரில் சந்தித்து வைத்த கோரிக்கை மனுவில், சென்னை விருகம்பாக்கத்தில் நடிகர் விவேக் வாழ்ந்த வீடு அமைந்துள்ளது அந்தச் சாலைக்கு அவரது பெயரைச் சூட்ட வேண்டும் எனக் கோரிக்கை வைத்தார்.
1987 ஆம் ஆண்டு கே.பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான மனதில் உறுதி வேண்டும் திரைப்படம் மூலமாக நடிகராக அறிமுகமான விவேக்.
தனது நடிப்பில் தொடர்ந்து மக்களைச் சிந்திக்க வைக்கும் நகைச்சுவை கலந்த சமூக நீதி வசனங்களைப் பேசி ரசிக்க வைத்தது காரணமாக மக்கள் ஆதரவை பெற்று அன்போடு சின்ன கலைவாணர் என்று திரையுலகில் அழைத்தனர்.
நடிப்பை தாண்டி முன்னால் குடியரசு தலைவர் காலம் சென்ற டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் வழியில் பல லட்சம் மரக்கன்றுகளை தமிழகம் முழுவதும் நட்டவர் நடிகர் விவேக், இளைஞர்கள் மரக்கன்றுகளை அதிகளவில் நட வேண்டும் என்று ஊக்கப்படுத்தினார். அந்த வகையில் மக்களை மகிழ்வித்த நடிகர் நினைவைப் போற்றும் வகையில் சாலைக்கு பெயர் சூட்டப்பட்டால் சிறப்புத் தான்
கருத்துகள்