இணையவழி கட்டுச்சோறு விறபவர்களைக் கட்டுப்படுத்த சி சி ஐ உத்தரவு. உணவுகள் வாங்கி விற்பனை செய்யும் Swiggy, Zomato ஆகிய ஆன்லைன் உணவு விநியோக நிறுவனங்கள் மீது விசாரணை நடத்த CCI உத்தரவு.
இந்தியா முழுவதும் Swiggy, Zomato ஆகிய நிறுவனங்கள் ஆன்லைன் மூலம் பொதுமக்களிடம் ஆர்டர்களைப் பெற்று, உணவகங்களில் உணவுகளை வாங்கிச் சென்று, வீடுகள் மற்றும் அலுவலகங்களுக்கு கமிசன் அடிப்படையில் விநியோகம் செய்கின்றன.
இந்த நிலையில், இந் நிறுவனங்கள் நடுநிலைமை மற்றும் நியாயமற்ற வணிக வர்த்தகச் செயல்பாடுகளில் ஈடுபடுவதாகப் புகார்கள் எழுந்துள்ளது.
போட்டியியல் விதிமுறைகளை மீறி அதிக அளவில் தள்ளுபடி அளிப்பது, குறிப்பிட்ட ஒருசில உணவகங்களுடன் தனிப்பட்ட முறையில் கூட்டு வைத்திருப்பது, தாமதமாகக் கட்டணங்களைக் கொடுப்பது, மற்றும் அதிகப்படியான கமிஷன் வசூலிப்பது தொடர்பான குற்றச்சாட்டுகள் இந்த இரண்டு நிறுவனங்களின் மீதும் சுமத்தப்பட்டுள்ளன.
அத்துடன், சொமேட்டோ மற்றும் ஸ்விக்கி நிறுவனங்களுக்கு சொந்தமான கிளவுட் கிச்சன் மற்றும் தனியார் லேபிள் பிராண்டுகள் அந்நிறுவனத் தளங்களில் இடம் பெற்றுள்ளதாகவும் புகார்கள் எழுந்துள்ளது. இந்தக் குற்றச்சாட்டுகளை தேசிய உணவக சங்கம் (NRAI) முன்வைத்துள்ளதன் அடிப்படையில் இரண்டு நிறுவனங்களின் மீதும் விசாரணை நடத்தும்படி இந்திய போட்டியியல் ஆணையம்(CCI) உத்தரவு பிறப்பித்துள்ளது.
60 நாட்களில் விசாரணை நடத்தி இறுதி அறிக்கை அளிக்கும்படி விசாரணைக் குழுவுக்கு சிசிஐ உத்தரவிட்டுள்ளது. ஆனால், இந்த புகார்கள் மற்றும் விசாரணை குறித்து ஸ்விக்கி, சொமேட்டோ நிறுவனங்கள் எந்தத் தகவல்களையும் வெளியிடவில்லை. என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்