நீதிமன்றத்தின் உத்தரவுகளை அமல்படுத்தாத அதிகாரிகளுக்கு.சிறைத் தண்டனை விதிப்பதே பிரதானமாக இருக்குமென உயர்நீதிமன்றம் கருத்து
நீதிமன்றத்தின் உத்தரவுகளை அமல்படுத்தாத அதிகாரிகளுக்கு அபராதம் விதிப்பதை விட, சிறை தண்டனை விதிப்பதே பிரதானமாக இருக்குமென, சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்தது
சென்னை, ஈக்காட்டு தாங்கல் விதிமீறல் செய்த கட்டடங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காமல், தனது கடமை தவறியதாக, தணிகைவேலன் என்ற அதிகாரிக்கு பணிப் பலன்களை சென்னை பெருநகர மாநகராட்சி நிறுத்தியதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். விசாரித்த உயர் நீதிமன்றம், பணிப் பலன்களை வழங்கும் படி உத்தரவிட்ட நிலையில். அதை எதிர்த்து, சென்னை பெருநகர மாநகராட்சி சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டதில், பதவி உயர்வுக்கான பட்டியலில் தணிகைவேலன் பெயரை பரிசீலிக்கும் படி, இடைக்கால உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது.
அந்த மேல்முறையீட்டு மனு, நீதிபதிகள் வைத்தியநாதன், முகமது ஷபிக் அமர்வில் விசாரணைக்கு வந்த போது . 'பதவி உயர்வுக்கு பரிசீலிக்கப்படவில்லை' என, தணிகைவேலன் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் எல்.சந்திரகுமார் வாதத்தை முன் வைத்தார். அரசு தரப்பில், கூடுதல் அட்வகேட் ஜெனரல் ரவீந்திரனும் , சென்னை பெருநகர மாநகராட்சி சார்பில் வழக்கறிஞர் கார்த்திகா அசோக்கும் ஆஜராகி, 'பட்டியலில் தணிகைவேலன் பெயர் இடம் பெற்றாலும், பதவி உயர்வுக்கான பரிசீலனைக்குள் அவர் வர மாட்டார்' எனத் தெரிவித்தார்.
இறுதியில் கட்டட விதிமீறல் தொடர்பாக, அரசுக்கு அனுப்பிய மேல்முறையீடுகளில், 2,400 விண்ணப்பங்கள் நிலுவையிலிருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தில் பிறப்பிக்கும் உத்தரவுகளை, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளில் பலர் அமல்படுத்துவதில்லை எனத் தெரிகிறது. .நீதிமன்ற உத்தரவை பொருட்படுத்தாமல், கடமை தவறும் அதிகாரிகளை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். அவர்களுக்கு அபராதம் விதிப்பது என்பது, இரண்டாம் பட்சம் தான். சிறைக்கு அனுப்புவது தான் பிரதானமாக இருக்கும். அரசிடம் நிலுவையிலுள்ள மேல்முறையீட்டு விண்ணப்பங்களின் மீது முடிவெடுக்காத அதிகாரிகளுக்கு எதிராக, துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வேண்டுமென்றே நீதிமன்ற உத்தரவை மதிக்காத அதிகாரிகளை, 'சஸ்பெண்ட்' செய்ய வேண்டும்.நிலுவையிலுள்ள 2,400 மேல்முறையீட்டு விண்ணப்பங்கள் மீது, வீட்டுவசதித் துறையின் செயலாளர் விரைவில் முடிவெடுத்து, அதன் விபரங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். நிர்வாகப் பொறியாளராக பதவி உயர்வு பெறத் தகுதி இருந்து, பரிசீலனைக்குள் வந்தால், தணிகைவேலன் பெயரை பட்டியலில் சேர்ப்பதற்கு எந்தத் தடையுமில்லை. என உத்தரவு பிறப்பித்தது
கருத்துகள்